9 செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட்!

பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து நாளை 9 செயற்கைகோளுடன்  பி.எஸ்.எல்.வி.சி-54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  நாளை ஏவப்படவுள்ள இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது.

முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணி என்பது குறிப்பிடத்தக்கது.

வானியல் மற்றும் விண்வெளி இயற்பியலின் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்வதற்காக இந்த செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட உள்ளன என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com