துபாயில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்த கையோடு, இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே டி20 மற்றும்டெஸ்ட்தொடர்கள் நடக்கிறது.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் இந்தியா-நியூசிலாந்துஅணிகள்இடையே நேற்றிரவு நடந்த முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா அபார வெற்றி படைத்தது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்தது.