– வி.ஜி. ஜெயஸ்ரீ, சென்னை
சிறுவயதிலிருந்தே ஆதித்த கரிகாலனால் நேசிக்கப்படும் நந்தினி, வீரபாண்டியனைக் காதலித்து, திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையி்ல், ஆதித்த கரிகாலன், வீரபாண்டியனை, அவன் மறைந்திருந்த இடத்தை தேடிக் கண்டுப்பிடித்து கொல்லப் பார்க்க, நந்தினி, "அவரைக் கொல்லாதீர்கள், அவரைதான், நான் மணம் முடிக்க இருக்கிறேன்" என்று கதறக் கதற, அவள் கெஞ்சுவதைப் பொருட்படுத்தாமல் வீரபாண்டியனைக் கொன்று விடுகிறான் ஆதித்த கரிகாலன். அந்த ஆதித்த கரிகாலனின் சோழப் பேரரசையே பூண்டோடு அழிக்க வேண்டுமென்று சபதமேற்று அதற்கு திட்டமிட்ட நந்தினியின் செயல்கள் என்னை பிரமிக்க வைத்தன.
கடைசி வரை அவளது தந்தை யார் என்பதை பூடகமாகவே சொல்லியிருக்கிறார் அமரர் கல்கி. அது சுந்தர சோழனா அல்லது வீரபாண்டியனா? வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொல்ல வரும் போது, தான் அவனை மணம் புரிய போவதாக கூறுகிறாள் நந்தினி. ஆனால், ஆதித்த கரிகாலனின் மறைவிற்குப் பின், வீரபாண்டியன்தான் அவளுடைய தந்தை என்கிறார் பெரிய பழுவேட்டரையர். ஆனால் வேட்டை மண்டபத்தில் தன்னுடைய தந்தையாக சுந்தரசோழரை நந்தினி சொன்னதாகவும், அதனாலேயே தங்கை முறையுடைய ஒருவளை தான் விரும்பியதால்தான், ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்ததாகவும் ஒரு மர்ம செய்தியும் உண்டு.
கடைசியில், நந்தினி எங்கே போனாள் என்பதும் மர்மமே!