– சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.பாகம்-10.சென்ற பதிவின் விருந்தோம்பல் வயிறு நிறைத்தது. இனி இன்சொல் பேசி நம் காதுகளையும் கருத்தையும் நிரப்பிக் கொள்வோம் என முடிவு செய்திருந்தோம் அல்லவா?.இனிய சொல் பேசுதல் என்பது ஒரு மனிதனின் உன்னதமான மகத்துவமான உறவுக்கும் அவன் உயர்ந்த நிலைக்கும் வெற்றிக்கும் அடி கோலுகின்றன என்பதை சங்ககால இலக்கண இலக்கியங்களில் பல பதிவுகளில் நாம் பார்க்க முடிகிறது .ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவன் பேசும் வார்த்தைகளும் காரணமாக அமைகின்றன. முப்பாலாம் திருக்குறளின் பத்தாம் அதிகாரம் "இனியவை கூறல்"..பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.அடக்கமான பண்பும், இனிமையாக பேசும் இயல்பும் தவிர ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது..அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால் மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும்..முதற் குறளைக் காணும் சமயமெலாம் மந்திரக்கோலை கையில் கொண்டு படிக்கும் மனதை எல்லாம் தன் இஷ்டப்படி ஆட்டி வைக்கும் நம் புதினம் பொன்னியின் செல்வனில் காணும் கண்டராதித்தார், பெரிய பிராட்டியார், வந்தியதேவன், சேந்தன் அமுதன் என எத்தனையோ கதாபாத்திரங்கள் நிழலாடும். அடுத்த குறளோ குந்தவை, அருள்மொழிவர்மன், பூங்குழலி, வானதி, வானமாதேவி போன்றோரைக் கொண்டு வந்து நிறுத்தும். இவையெல்லாம் போதாதென்று நம் கல்கி அவர்களே பல இடங்களில் பல கதாபாத்திரங்களின் மூலம் இன்றும் நாம் கடைபிடிக்க வேண்டிய பல வாழ்க்கை நெறிமுறைகளை நேரடியாகவே நமக்குச் சொல்லி இருப்பார். எடுத்துக்காட்டாக வெகு சில….(இருண்ட சுரங்கப்பாதை – கும்மிருட்டு – தட்டுத்தடுமாறி நடக்கும் வந்தியத்தேவன்… வெளியேற வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மங்கியதாய் ஒளிவீசி கொண்டிருந்த மணிமகுடங்கள், முத்துமணிகள், வைரங்கள், ஹாரங்கள் நவரத்தின மாலைகள் பொற்காசுகள் தங்க கட்டிகளை குவியல் குவியலாக கண்டபோது அந்த நிலவறைக்குள் வந்தியத்தேவன் மனதினுள் ஓடிய நினைவலைகள்…)."பெரியோர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளைச் சிலந்தி வலைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். சிலந்தி, வலையை விரித்துக்கொண்டு காத்திருக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்து ஈ அதில் அகப்பட்டுக் கொள்கிறது. பிறகு சிறிது சிறிதாகச் சிலந்தி ஈயை இழுத்து விழுங்குகிறது. மூன்று வித ஆசைகளும் அப்படித்தான். மனிதன் வழி தவறிச் சென்று அந்த ஆசை வலைகளில் விழுந்து அகப்பட்டுக்கொள்கிறான். அப்புறம் மீளுவதில்லை.". "வானத்தைக் கூரையாகப் பெற்ற அகண்டமான பூமியே நமது அரண்மனை! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பண்டைத் தமிழ்நாட்டுப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்களே! எல்லா ஊரும் நம்முடைய ஊர்தான். எல்லா மனிதர்களும் நம்முடைய உறவினர்கள்தான்.".(புயல் காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம். வெள்ளத்திலே அலைக்கழிக்கப்படும் ஒர் படகு. படகோட்டியாய் முருகேசன். படகில் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட ஓர் கன்றுக்குட்டி. அப் படகில் புத்த பிக்ஷுவுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இடையேயான உரையாடல்)."குருதேவரே! இயற்கை உற்பாதங்கள் ஏன் உண்டாகின்றன? புயற்காற்றும் பூகம்பமும் ஏன் நிகழ்கின்றன? கொள்ளை நோய்கள் ஏன் வருகின்றன? அவற்றினால் மக்களும் மற்றப் பிராணிகளும் அடையும் துன்பங்களுக்குப் பொறுப்பாளி யார்? நம்மால் இயற்கையின் உற்பாதங்களைத் தடுக்கமுடியாது. ஆனால், கடவுளால் கூட முடியாதா? கடவுள் ஏன் இத்தகைய .உற்பாதங்களைத் தடுக்காமல் ஜீவராசிகள் இவற்றினால் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்?" என்று இளவரசர் கேட்டார்.. "பொன்னியின் செல்வ! தாங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு ஆதி காலம் முதல் மகான்களும், முனிவர்களும் விடை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவை எல்லோருக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆகையினாலேயே புத்தபகவான் கடவுளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. கடவுளைப் பற்றிய ஆராய்ச்சிலேயே இறங்கவில்லை. 'பிறருக்கு உதவி செய்யுங்கள். பிறருடைய கஷ்டங்களை போக்க முயலுங்கள். அந்த முயற்சியிலேதான் உண்மையான ஆனந்தம் அடைவீர்கள். அதிலிருந்து சுக துக்கங்களைக் கடந்த நிர்வாண நிலையை அடைவீர்கள்!' என்று புத்த பகவான் போதித்தார்" என்று பிக்ஷு கூறினார்..(ஆம்- ஆறுதல் தேடி வரும் இதயம் எதுவாயினும் நம் இன் சொற்கள் அதற்கு ஆறுதல் மட்டுமில்லாமல் நல்வழிக்காட்டியாகவும் தாய்மடியாகவும் தன்னம்பிக்கை தருவதாகவும் இருக்கும்போது நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் வைரங்களை விட வலிமையானவை, மதிப்புள்ளவை. இங்கு திடீரென கால்கள் சுவாதீனம் இழந்து நடக்க இயலாமல் படுத்த படுக்கையாகி விடும் சுந்தரச் சோழர் மனதில் மாறாத பெரும் துக்கம் அழுந்திகொண்டிருக்க தன்மகள் குந்தவையிடம் அவர் பேசுவதும் குந்தவை தேவி அவருக்கு ஆறுதல் கூறுவதும் இவ்வேளையில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் கூறலாம்.)."மறுநாள் காலையில் சுந்தரசோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்து வரச் செய்தார். ஏவலாளர், தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும்படி கட்டளையிட்டார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்துகொண்டாள்.."அப்பா! என் பேரில் கோபமா?" என்று கேட்டாள். சுந்தர சோழர் கண்களில் கண்ணீர் துளித்தது.."உன் பேரில் எதற்கு அம்மா, கோபம்? என்றார்.."தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு வந்ததற்காகத்தான்!"."ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது; இந்தத் தஞ்சாவூர் அரண்மனை இளம் பெண்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல. இது நேற்று இராத்திரி நடந்த சம்பவத்திலிருந்து உனக்கே தெரிந்திருக்கும்.'."எந்த சம்பவத்தைப் பற்றி சொல்லுகிறீர்கள், அப்பா?". "அந்த கொடும்பாளூர்ப் பெண் மூர்ச்சையடைந்ததைப் .பற்றிதான் சொல்கிறேன். அந்தப் பெண்ணுக்கு இப்போது உடம்பு எப்படியிருக்கிறது?"."அவளுக்கு இன்றைக்கு ஒன்றுமேயில்லை, அப்பா! பழையாறையிலும் அடிக்கடி இவள் இப்படிப் பிரக்ஞை இழப்பது உண்டு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சரியாகப் போய்விடும்."."அவளைக் கேட்டாயா, அம்மா? இராத்திரி இந்த அரண்மனையில் அவள் ஏதேனும் கண்டதாகவோ, கேட்டதாகவோ சொல்லவில்லையா?".குந்தவை சற்று யோசித்துவிட்டு, "ஆம், அப்பா! நாங்கள் எல்லோரும் துர்க்கை ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவள் தனியாக மேல்மாடத்துக்குப் போக பார்த்தாளாம். அப்போது யாரோ பரிதாபமாகப் புலம்புவது போலக் கேட்டதாம்! அது அவளுக்கு பயத்தை உண்டாக்கியதாகச் சொன்னாள்" என்றாள்.."அப்படித்தான் நானும் நினைத்தேன். இப்போதேனும் அறிந்தாயா, குழந்தாய்? இந்த அரண்மனையில் பேய் உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். போய் விடுங்கள்!" என்று சுந்தர சோழர் கூறியபோது அவர் உடல் நடுங்குவதையும், அவருடைய கண்கள் வெறித்தபடி எங்கேயோ பார்ப்பதையும் குந்தவை கவனித்தாள்.."அப்பா! அப்படியானால் தாங்கள் மட்டும் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும்? எல்லோரும் பழையாறைக்கே போய் விடலாமே! இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாகியிருப்பதாகவும் தெரியவில்லையே?" என்றாள்..சக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, "என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது? அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது" என்றார் . "அப்படி ஏன் நிராசை அடையவேண்டும்? அப்பா! பழையாறை வைத்தியர் தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்.".(தந்தை துவள்வதும் மகள் ஆறுதலாக பேசுவதுமாய் நீளும் உரையாடலில் மேலும் சில வரிகள்)."என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா! அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருநாள் என் மனதைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி யிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள்! உடம்பைப் பற்றிய வியாதியாயிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது ?."தந்தையே, மூன்றுலகம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்?"."கவிகளுடைய அதிசயோகிக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய், குழந்தாய்! நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும் ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே என்னால் சுமக்க முடியவில்லை…"."தாங்கள் ஏன் சுமக்க வேண்டும், அப்பா! இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா? மணிமணியாக இரண்டு புதல்வர்கள் தங்களுக்கு இருக்கிறார்கள். இருவரும் இரண்டு சிங்கக் குட்டிகள். வீராதி வீரர்கள். எப்படிப்பட்ட பாரத்தையும் தாங்கக் கூடியவர்கள்…".இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .இனிய சொற்கள் பேசுவோம் – உறவுகளை இனிமையாக்குவோம்…
– சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.பாகம்-10.சென்ற பதிவின் விருந்தோம்பல் வயிறு நிறைத்தது. இனி இன்சொல் பேசி நம் காதுகளையும் கருத்தையும் நிரப்பிக் கொள்வோம் என முடிவு செய்திருந்தோம் அல்லவா?.இனிய சொல் பேசுதல் என்பது ஒரு மனிதனின் உன்னதமான மகத்துவமான உறவுக்கும் அவன் உயர்ந்த நிலைக்கும் வெற்றிக்கும் அடி கோலுகின்றன என்பதை சங்ககால இலக்கண இலக்கியங்களில் பல பதிவுகளில் நாம் பார்க்க முடிகிறது .ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவன் பேசும் வார்த்தைகளும் காரணமாக அமைகின்றன. முப்பாலாம் திருக்குறளின் பத்தாம் அதிகாரம் "இனியவை கூறல்"..பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.அடக்கமான பண்பும், இனிமையாக பேசும் இயல்பும் தவிர ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது..அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால் மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும்..முதற் குறளைக் காணும் சமயமெலாம் மந்திரக்கோலை கையில் கொண்டு படிக்கும் மனதை எல்லாம் தன் இஷ்டப்படி ஆட்டி வைக்கும் நம் புதினம் பொன்னியின் செல்வனில் காணும் கண்டராதித்தார், பெரிய பிராட்டியார், வந்தியதேவன், சேந்தன் அமுதன் என எத்தனையோ கதாபாத்திரங்கள் நிழலாடும். அடுத்த குறளோ குந்தவை, அருள்மொழிவர்மன், பூங்குழலி, வானதி, வானமாதேவி போன்றோரைக் கொண்டு வந்து நிறுத்தும். இவையெல்லாம் போதாதென்று நம் கல்கி அவர்களே பல இடங்களில் பல கதாபாத்திரங்களின் மூலம் இன்றும் நாம் கடைபிடிக்க வேண்டிய பல வாழ்க்கை நெறிமுறைகளை நேரடியாகவே நமக்குச் சொல்லி இருப்பார். எடுத்துக்காட்டாக வெகு சில….(இருண்ட சுரங்கப்பாதை – கும்மிருட்டு – தட்டுத்தடுமாறி நடக்கும் வந்தியத்தேவன்… வெளியேற வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மங்கியதாய் ஒளிவீசி கொண்டிருந்த மணிமகுடங்கள், முத்துமணிகள், வைரங்கள், ஹாரங்கள் நவரத்தின மாலைகள் பொற்காசுகள் தங்க கட்டிகளை குவியல் குவியலாக கண்டபோது அந்த நிலவறைக்குள் வந்தியத்தேவன் மனதினுள் ஓடிய நினைவலைகள்…)."பெரியோர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளைச் சிலந்தி வலைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். சிலந்தி, வலையை விரித்துக்கொண்டு காத்திருக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்து ஈ அதில் அகப்பட்டுக் கொள்கிறது. பிறகு சிறிது சிறிதாகச் சிலந்தி ஈயை இழுத்து விழுங்குகிறது. மூன்று வித ஆசைகளும் அப்படித்தான். மனிதன் வழி தவறிச் சென்று அந்த ஆசை வலைகளில் விழுந்து அகப்பட்டுக்கொள்கிறான். அப்புறம் மீளுவதில்லை.". "வானத்தைக் கூரையாகப் பெற்ற அகண்டமான பூமியே நமது அரண்மனை! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பண்டைத் தமிழ்நாட்டுப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்களே! எல்லா ஊரும் நம்முடைய ஊர்தான். எல்லா மனிதர்களும் நம்முடைய உறவினர்கள்தான்.".(புயல் காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம். வெள்ளத்திலே அலைக்கழிக்கப்படும் ஒர் படகு. படகோட்டியாய் முருகேசன். படகில் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட ஓர் கன்றுக்குட்டி. அப் படகில் புத்த பிக்ஷுவுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இடையேயான உரையாடல்)."குருதேவரே! இயற்கை உற்பாதங்கள் ஏன் உண்டாகின்றன? புயற்காற்றும் பூகம்பமும் ஏன் நிகழ்கின்றன? கொள்ளை நோய்கள் ஏன் வருகின்றன? அவற்றினால் மக்களும் மற்றப் பிராணிகளும் அடையும் துன்பங்களுக்குப் பொறுப்பாளி யார்? நம்மால் இயற்கையின் உற்பாதங்களைத் தடுக்கமுடியாது. ஆனால், கடவுளால் கூட முடியாதா? கடவுள் ஏன் இத்தகைய .உற்பாதங்களைத் தடுக்காமல் ஜீவராசிகள் இவற்றினால் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்?" என்று இளவரசர் கேட்டார்.. "பொன்னியின் செல்வ! தாங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு ஆதி காலம் முதல் மகான்களும், முனிவர்களும் விடை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவை எல்லோருக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆகையினாலேயே புத்தபகவான் கடவுளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. கடவுளைப் பற்றிய ஆராய்ச்சிலேயே இறங்கவில்லை. 'பிறருக்கு உதவி செய்யுங்கள். பிறருடைய கஷ்டங்களை போக்க முயலுங்கள். அந்த முயற்சியிலேதான் உண்மையான ஆனந்தம் அடைவீர்கள். அதிலிருந்து சுக துக்கங்களைக் கடந்த நிர்வாண நிலையை அடைவீர்கள்!' என்று புத்த பகவான் போதித்தார்" என்று பிக்ஷு கூறினார்..(ஆம்- ஆறுதல் தேடி வரும் இதயம் எதுவாயினும் நம் இன் சொற்கள் அதற்கு ஆறுதல் மட்டுமில்லாமல் நல்வழிக்காட்டியாகவும் தாய்மடியாகவும் தன்னம்பிக்கை தருவதாகவும் இருக்கும்போது நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் வைரங்களை விட வலிமையானவை, மதிப்புள்ளவை. இங்கு திடீரென கால்கள் சுவாதீனம் இழந்து நடக்க இயலாமல் படுத்த படுக்கையாகி விடும் சுந்தரச் சோழர் மனதில் மாறாத பெரும் துக்கம் அழுந்திகொண்டிருக்க தன்மகள் குந்தவையிடம் அவர் பேசுவதும் குந்தவை தேவி அவருக்கு ஆறுதல் கூறுவதும் இவ்வேளையில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் கூறலாம்.)."மறுநாள் காலையில் சுந்தரசோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்து வரச் செய்தார். ஏவலாளர், தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும்படி கட்டளையிட்டார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்துகொண்டாள்.."அப்பா! என் பேரில் கோபமா?" என்று கேட்டாள். சுந்தர சோழர் கண்களில் கண்ணீர் துளித்தது.."உன் பேரில் எதற்கு அம்மா, கோபம்? என்றார்.."தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு வந்ததற்காகத்தான்!"."ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது; இந்தத் தஞ்சாவூர் அரண்மனை இளம் பெண்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல. இது நேற்று இராத்திரி நடந்த சம்பவத்திலிருந்து உனக்கே தெரிந்திருக்கும்.'."எந்த சம்பவத்தைப் பற்றி சொல்லுகிறீர்கள், அப்பா?". "அந்த கொடும்பாளூர்ப் பெண் மூர்ச்சையடைந்ததைப் .பற்றிதான் சொல்கிறேன். அந்தப் பெண்ணுக்கு இப்போது உடம்பு எப்படியிருக்கிறது?"."அவளுக்கு இன்றைக்கு ஒன்றுமேயில்லை, அப்பா! பழையாறையிலும் அடிக்கடி இவள் இப்படிப் பிரக்ஞை இழப்பது உண்டு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சரியாகப் போய்விடும்."."அவளைக் கேட்டாயா, அம்மா? இராத்திரி இந்த அரண்மனையில் அவள் ஏதேனும் கண்டதாகவோ, கேட்டதாகவோ சொல்லவில்லையா?".குந்தவை சற்று யோசித்துவிட்டு, "ஆம், அப்பா! நாங்கள் எல்லோரும் துர்க்கை ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவள் தனியாக மேல்மாடத்துக்குப் போக பார்த்தாளாம். அப்போது யாரோ பரிதாபமாகப் புலம்புவது போலக் கேட்டதாம்! அது அவளுக்கு பயத்தை உண்டாக்கியதாகச் சொன்னாள்" என்றாள்.."அப்படித்தான் நானும் நினைத்தேன். இப்போதேனும் அறிந்தாயா, குழந்தாய்? இந்த அரண்மனையில் பேய் உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். போய் விடுங்கள்!" என்று சுந்தர சோழர் கூறியபோது அவர் உடல் நடுங்குவதையும், அவருடைய கண்கள் வெறித்தபடி எங்கேயோ பார்ப்பதையும் குந்தவை கவனித்தாள்.."அப்பா! அப்படியானால் தாங்கள் மட்டும் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும்? எல்லோரும் பழையாறைக்கே போய் விடலாமே! இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாகியிருப்பதாகவும் தெரியவில்லையே?" என்றாள்..சக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, "என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது? அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது" என்றார் . "அப்படி ஏன் நிராசை அடையவேண்டும்? அப்பா! பழையாறை வைத்தியர் தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்.".(தந்தை துவள்வதும் மகள் ஆறுதலாக பேசுவதுமாய் நீளும் உரையாடலில் மேலும் சில வரிகள்)."என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா! அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருநாள் என் மனதைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி யிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள்! உடம்பைப் பற்றிய வியாதியாயிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது ?."தந்தையே, மூன்றுலகம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்?"."கவிகளுடைய அதிசயோகிக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய், குழந்தாய்! நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும் ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே என்னால் சுமக்க முடியவில்லை…"."தாங்கள் ஏன் சுமக்க வேண்டும், அப்பா! இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா? மணிமணியாக இரண்டு புதல்வர்கள் தங்களுக்கு இருக்கிறார்கள். இருவரும் இரண்டு சிங்கக் குட்டிகள். வீராதி வீரர்கள். எப்படிப்பட்ட பாரத்தையும் தாங்கக் கூடியவர்கள்…".இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .இனிய சொற்கள் பேசுவோம் – உறவுகளை இனிமையாக்குவோம்…