பாகம் – 7.-சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.அறிவியல் இலக்கணமாம் திருக்குறளின் ஏழாம் அதிகாரம் "மக்கட்பேறு"."பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற" .அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளை விட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை..இக்குறளில் நாம் மூழ்கி இருக்கும் சமயம் நம் மாயாஜால உலகமாம் பொன்னியின் செல்வனின் சுந்தர சோழர்- வானமாதேவி பெற்றெடுத்த முத்துக்கள் மூன்றும் கம்பீரமாய் நமக்குள் வலம் வருவதை உணர முடிகிறது.. "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிருக் கெல்லாம் இனிது.".தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.(நம் நாட்டு வரலாற்றின் பதிவுகளில் மன்னர்களுக்கும் மக்களுக்குமான உறவு மேம்பட்ட உறவாகவே இருப்பதாக அறிகிறோம். தங்களின் அரசனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் பொதுமக்கள் அதேபோல பொதுமக்களின் நலனுக்காக, பாதுகாப்புக்காக பாடுபடும் மன்னன் என மிக இனிமையான மேன்மையான உறவாகவே இருந்திருக்கிறது. திருக்குறளின் இவ்வரிகளுக்கிணங்க சுந்தர சோழரின் வாரிசுகள் மூவருடன்தான் இப்பதிவில் உலாவரப் போகிறோம்..முதலில் மூத்தவர் ஆதித்த கரிகாலருடன் கை கோர்ப்போம். நான் கெடில நதிக் கரையோரத்தில் மக்களோடு மக்களாக நின்று ஆரவாரத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள்…!?).ஐப்பசி மாதம் ஆரம்பத்தில் கெடில நதியில் வழக்கத்தை விட அதிகமாகவே வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. இதனால் உச்சி வேளையில் அங்கே கட்டுச் சாதம் அருந்துவதற்காகத் தங்கிய பிரயாணிகளின் ஆரவார ஒலிகளும் அதிகமாயிருந்தன. அந்த ஒலிகளெல்லாம் அமுங்கிப் போகும் படியான ஒரு பெரும் ஆவாரம் திடீரென்று சற்றுத் தூரத்தில் சாலையில் எழுந்தது கேட்டு பிரயாணிகள் வியப்புற்றார்கள். அவர்களில் சிலர் கரையேறிப் பார்த்தார்கள். முதலில் புழுதிப் படலம் மட்டுமே தெரிந்தது. பிறகு யானை, குதிரை, பல்லக்கு ,பரிவட்டம் ஏந்துவோர் முதலிய இராஜ பரிவாரங்கள் வருவது தெரிந்தது. சிறிது அருகில் அப்பரிவாரங்கள் நெருங்கி வந்ததும் கட்டியக்காரர்களின் முழக்கம் தெளிவாகக் கேட்டது.."பனிரெண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த வீராதி வீரர் , வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டைமண்டலாதிபதி, வடதிசை மாதண்ட நாயகர், மூன்று உலகமுடைய சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமகனார், ஆதித்த கரிகால சோழ மகாராஜா வருகிறார்! பராக்!"..இடி முழக்கக் குரலில் எட்டுத் திசையும் எதிரொலி செய்யும்படி எழுந்த இந்தக் கோஷத்தைக் கேட்டதும் கெடில நதித்துறையில் இருந்தவர் அனைவரும் அவசர அவசரமாகக் கரையேறினார்கள் . அத்தகைய வீராதி வீரனைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் நதித்துறையில் நடுவில் வழி விட்டுவிட்டு இருபுறமும் அவர்கள் ஒதுங்கி நின்றார்கள், பரிவாரங்களுக்குப் பின்னால் மூன்று குதிரைகள் ஒன்றின் பக்கம் ,ஒன்றாக வந்தன, மூன்று குதிரைகள் மீதும் மூன்று இளம் வீரர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களைத் தூரத்தில் பார்த்தபோதே ஜனங்கள் அவர்களைச் சுட்டிக்காட்டி இன்னார் இன்னவர் என்று பேசத் தொடங்கினார்கள். 'நடுவில் உள்ள குதிரை மீது வருகிறவர்தான் ஆதித்த கரிகாலர்! பொற்கிரீடத்தைப் பார்த்தவுடனே தெரியவில்லையா? வெய்யில் படும்போது எப்படி கிரீடம் ஜொலிக்கிறது!" என்றான் ஒருவன்.. "இந்த கிரீடத்தைப் போய்ச் சொல்லப் போகிறாயே? .கரிகால்வளவன் அணிந்திருந்த மணிமகுடத்தை இவர் சிரசில் தாங்கும் போதல்லவா பார்க்க வேண்டும்? அது கோடி சூரியப் பிரகாசமாகக் கண்கள் கூசும் படி ஜொலிக்குமாம்!" என்றான் இன்னொருவன்..(தங்கள் உயிருக்கும் மேலான அரசரின் மகள் இளவரசி குந்தவை தேவியை தங்கள் ஊருக்கு வர எதிர்பார்த்திருக்கும் தஞ்சை மக்களின் மன நிலையை நீங்களே பாருங்கள்…)."அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன்? சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு ,அறிவு ,தயாளம் முதலிய குணங்களைப் பற்றி தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டு பேசாதவர்களும் இல்லை. இந்த வருஷம் நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்து இருப்பார் என்ற வதந்தி முன்னமே பரவி மக்களின் ஆவலை வளர்த்திருந்தது .எனவே, இன்றைக்கு வருகிறார் என்று தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே காத்துக்கொண்டிருந்தது. பூரண சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம் செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல் இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தது..(இப்படி நாட்டு மக்களின் மனங்களையெல்லாம் ஒரு சேர கொள்ளையடித் திருக்கும் வீரத்திருமகளிடமிருந்து நம் இதயத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு கடைக்குட்டி பொன்னியின் செல்வர் எங்கே எனப்பார்த்து விட்டு வந்து விடுவோம் வாருங்கள்..அதோ இலங்கை மண். அனுராதபுரத்தில் புத்த சங்கம். ஒரு தடாகத்தின் படிக்கட்டின் வழியாக சென்று சுவரைக் குடைந்து அமைக்கப்பட்டிருந்த ஒரு அறைக்குள் அமைந்துள்ள சுரங்கப்பாதை வழியாக வளைந்து வளைந்து சென்ற பாதையின் முடிவில் காணப்பட்ட மண்டபம். வல்லவராயன் திருமலை மற்றும் அருள்மொழிவர்மருடன் கல்கி அவர்களின் துணையுடன் நாமும் அந்த மண்டபத்துக்குள் செல்வோம்.).இளவரசர் மகா தேரோ குருவின் சமீபம் வந்து வணங்கி நின்றார்..(இனி மகா தேரோ குரு பொன்னியின் செல்வனிடம் சொன்னதை செவிமடுப்போம்)."கடைசியாக முடிசூடிய மகிழ்ந்தன் இலங்கைச் சிம்மாசனத்துக்கு உரிமையை இழந்து விட்டான். அவனுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் இராஜ வம்சம் எப்படியேனும் மாறியே தீர வேண்டும். அப்படி ராஜ வம்சம் மாறும்போது புதிய வம்சத்தின் முதல்வனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்தச் சங்கத்துக்கு உண்டு. இந்த சங்கத்தாரும் தங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். தாங்கள் சம்மதம் கொடுத்தால் இன்று இரவே முடிசூட்டு விழா நடத்தி விடலாம்….".அந்த மண்டபத்தில் சிறிது நேரம் பூகர்பத்திலும், கடலின் ஆழத்திலும் குடி கொண்டிருப்பது போன்ற நிசப்தம் குடிகொண்டிருந்தது. வந்தியத்தேவனுடைய பரபரப்பு உச்சநிலையை அடைந்து விட்டது..அச்சமயத்தில் பொன்னியின் செல்வர் தமது பீடத்திலிருந்து எழுந்து புத்த பிஷூக்களின் சங்கத்துக்கு வணக்கம் செலுத்தினார் . வந்தியத்தேவன் குதூகலத்தின் எல்லையை அடைந்தான். இளவரசர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் மணி மகுடத்தை எடுத்துத் தானே சூட்டிவிடலாம் என்று ஆத்திரப்பட்டான்..இளவரசர் கூறினார் :- மகான்களே ! உங்களை நமஸ்கரிக்கிறேன். இந்தச் சிறுவனிடம் எல்லையில்லா அன்பும் ,நம்பிக்கையும் வைத்து இந்தப் புரதான சிங்காதனத்தை அளிக்க முன்வந்த உங்கள் பெருந்தன்மையைப் போற்றி வணங்குகிறேன். ஆனால் தாங்கள் இப்போது இடும் பணி என் சக்திக்கு அப்பாற்பட்டது. நான் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவன் .அந்த நாட்டு நிலங்கள் தந்த உணவும் , நதிகள் அளித்த நீரும் இந்த உடலை ஆக்கின. என் தந்தை சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கட்டளைக்கு உட்பட்டு இங்கே வந்தேன் .அவருடைய விருப்பத்தை அறியாமல் எதுவும் என்னால் செய்ய இயலாது….".பிக்ஷூ குறுக்கிட்டுக் கூறினார் :- இளவரசே ! தங்கள் தந்தை சுந்தர சோழர் இன்று சுதந்திரமின்றிச் சிறையில் இருப்பதுபோல் இருப்பதை நீர் அறியீரா?"."ஆம் ; என் தந்தை நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்கிறார். கால்களின் சுவாதீனத்தை இழந்திருக்கிறார். ஆயினும் அவருடைய பெயரால்,- அவரிடம் அதிகாரம் பெற்று,- சோழ நாட்டை ஆளுவோரின் கட்டளைக்கு நான் உட்பட்டவன் . அவர்களுடைய கட்டளையின்றி நான் இந்தச் சிங்காதனத்தை ஏற்றுக் கொண்டால் தேசத் துரோகியும்,ராஜத் துரோகியும் ஆவேன் …."."இந்த நாட்டின் பிரஜைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய சம்மதமின்றி இராஜ்யத்தை விநியோகிக்க யாருக்கு உரிமை உண்டு ?"."தங்களை அரசனாகப் பெறுவதைப் பெறற்கரிய பேறாக இந்நாட்டுப் பிரஜைகள் கருதுவார்கள்…"."எல்லோரும் சம்மதிக்கலாம்; மகிழ்ச்சியும் அடையலாம்; இந்த உலகில் வேறு யாருடைய விருப்பத்தையும் காட்டிலும் நான் அதிகமாக மதிப்பது என் தமக்கையாரின் விருப்பத்தையே. என் அன்னை என்னை பெற்றாள். பொன்னி நதி என் உயிரைக் காப்பாற்றி அளித்தாள். ஆனால் என் தமக்கை என் அறிவை வளர்த்து, அகக் கண்களைத் திறந்தார். அப்படிப்பட்டவருடைய விருப்பத்தை காட்டிலும் என் உள்ளத்திலே உள்ள ஒரு குரலின் கட்டளையே எனக்கு மேலானது. மகா புருஷர்களே! தாங்கள் இச்சிறுவனுக்கு மனமுவந்து அளிக்கும் மகா பாக்கியத்தை ஏற்றுக்கொள்ளும்படி என் உள்ளக் குரல் எனக்குச் சொல்லவில்லை. தயவு செய்து இச்சிறுவனை மன்னித்து அருளுங்கள்!….".மறுபடியும் அந்த மகாசபையில் சிறிது நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது..(இந்த முறை நாமும் மௌனமாகவே விடை பெற்றுக் கொள்வோம்…)
பாகம் – 7.-சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.அறிவியல் இலக்கணமாம் திருக்குறளின் ஏழாம் அதிகாரம் "மக்கட்பேறு"."பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற" .அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளை விட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை..இக்குறளில் நாம் மூழ்கி இருக்கும் சமயம் நம் மாயாஜால உலகமாம் பொன்னியின் செல்வனின் சுந்தர சோழர்- வானமாதேவி பெற்றெடுத்த முத்துக்கள் மூன்றும் கம்பீரமாய் நமக்குள் வலம் வருவதை உணர முடிகிறது.. "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிருக் கெல்லாம் இனிது.".தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.(நம் நாட்டு வரலாற்றின் பதிவுகளில் மன்னர்களுக்கும் மக்களுக்குமான உறவு மேம்பட்ட உறவாகவே இருப்பதாக அறிகிறோம். தங்களின் அரசனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் பொதுமக்கள் அதேபோல பொதுமக்களின் நலனுக்காக, பாதுகாப்புக்காக பாடுபடும் மன்னன் என மிக இனிமையான மேன்மையான உறவாகவே இருந்திருக்கிறது. திருக்குறளின் இவ்வரிகளுக்கிணங்க சுந்தர சோழரின் வாரிசுகள் மூவருடன்தான் இப்பதிவில் உலாவரப் போகிறோம்..முதலில் மூத்தவர் ஆதித்த கரிகாலருடன் கை கோர்ப்போம். நான் கெடில நதிக் கரையோரத்தில் மக்களோடு மக்களாக நின்று ஆரவாரத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள்…!?).ஐப்பசி மாதம் ஆரம்பத்தில் கெடில நதியில் வழக்கத்தை விட அதிகமாகவே வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. இதனால் உச்சி வேளையில் அங்கே கட்டுச் சாதம் அருந்துவதற்காகத் தங்கிய பிரயாணிகளின் ஆரவார ஒலிகளும் அதிகமாயிருந்தன. அந்த ஒலிகளெல்லாம் அமுங்கிப் போகும் படியான ஒரு பெரும் ஆவாரம் திடீரென்று சற்றுத் தூரத்தில் சாலையில் எழுந்தது கேட்டு பிரயாணிகள் வியப்புற்றார்கள். அவர்களில் சிலர் கரையேறிப் பார்த்தார்கள். முதலில் புழுதிப் படலம் மட்டுமே தெரிந்தது. பிறகு யானை, குதிரை, பல்லக்கு ,பரிவட்டம் ஏந்துவோர் முதலிய இராஜ பரிவாரங்கள் வருவது தெரிந்தது. சிறிது அருகில் அப்பரிவாரங்கள் நெருங்கி வந்ததும் கட்டியக்காரர்களின் முழக்கம் தெளிவாகக் கேட்டது.."பனிரெண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த வீராதி வீரர் , வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டைமண்டலாதிபதி, வடதிசை மாதண்ட நாயகர், மூன்று உலகமுடைய சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமகனார், ஆதித்த கரிகால சோழ மகாராஜா வருகிறார்! பராக்!"..இடி முழக்கக் குரலில் எட்டுத் திசையும் எதிரொலி செய்யும்படி எழுந்த இந்தக் கோஷத்தைக் கேட்டதும் கெடில நதித்துறையில் இருந்தவர் அனைவரும் அவசர அவசரமாகக் கரையேறினார்கள் . அத்தகைய வீராதி வீரனைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் நதித்துறையில் நடுவில் வழி விட்டுவிட்டு இருபுறமும் அவர்கள் ஒதுங்கி நின்றார்கள், பரிவாரங்களுக்குப் பின்னால் மூன்று குதிரைகள் ஒன்றின் பக்கம் ,ஒன்றாக வந்தன, மூன்று குதிரைகள் மீதும் மூன்று இளம் வீரர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களைத் தூரத்தில் பார்த்தபோதே ஜனங்கள் அவர்களைச் சுட்டிக்காட்டி இன்னார் இன்னவர் என்று பேசத் தொடங்கினார்கள். 'நடுவில் உள்ள குதிரை மீது வருகிறவர்தான் ஆதித்த கரிகாலர்! பொற்கிரீடத்தைப் பார்த்தவுடனே தெரியவில்லையா? வெய்யில் படும்போது எப்படி கிரீடம் ஜொலிக்கிறது!" என்றான் ஒருவன்.. "இந்த கிரீடத்தைப் போய்ச் சொல்லப் போகிறாயே? .கரிகால்வளவன் அணிந்திருந்த மணிமகுடத்தை இவர் சிரசில் தாங்கும் போதல்லவா பார்க்க வேண்டும்? அது கோடி சூரியப் பிரகாசமாகக் கண்கள் கூசும் படி ஜொலிக்குமாம்!" என்றான் இன்னொருவன்..(தங்கள் உயிருக்கும் மேலான அரசரின் மகள் இளவரசி குந்தவை தேவியை தங்கள் ஊருக்கு வர எதிர்பார்த்திருக்கும் தஞ்சை மக்களின் மன நிலையை நீங்களே பாருங்கள்…)."அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன்? சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு ,அறிவு ,தயாளம் முதலிய குணங்களைப் பற்றி தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டு பேசாதவர்களும் இல்லை. இந்த வருஷம் நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்து இருப்பார் என்ற வதந்தி முன்னமே பரவி மக்களின் ஆவலை வளர்த்திருந்தது .எனவே, இன்றைக்கு வருகிறார் என்று தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே காத்துக்கொண்டிருந்தது. பூரண சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம் செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல் இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தது..(இப்படி நாட்டு மக்களின் மனங்களையெல்லாம் ஒரு சேர கொள்ளையடித் திருக்கும் வீரத்திருமகளிடமிருந்து நம் இதயத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு கடைக்குட்டி பொன்னியின் செல்வர் எங்கே எனப்பார்த்து விட்டு வந்து விடுவோம் வாருங்கள்..அதோ இலங்கை மண். அனுராதபுரத்தில் புத்த சங்கம். ஒரு தடாகத்தின் படிக்கட்டின் வழியாக சென்று சுவரைக் குடைந்து அமைக்கப்பட்டிருந்த ஒரு அறைக்குள் அமைந்துள்ள சுரங்கப்பாதை வழியாக வளைந்து வளைந்து சென்ற பாதையின் முடிவில் காணப்பட்ட மண்டபம். வல்லவராயன் திருமலை மற்றும் அருள்மொழிவர்மருடன் கல்கி அவர்களின் துணையுடன் நாமும் அந்த மண்டபத்துக்குள் செல்வோம்.).இளவரசர் மகா தேரோ குருவின் சமீபம் வந்து வணங்கி நின்றார்..(இனி மகா தேரோ குரு பொன்னியின் செல்வனிடம் சொன்னதை செவிமடுப்போம்)."கடைசியாக முடிசூடிய மகிழ்ந்தன் இலங்கைச் சிம்மாசனத்துக்கு உரிமையை இழந்து விட்டான். அவனுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் இராஜ வம்சம் எப்படியேனும் மாறியே தீர வேண்டும். அப்படி ராஜ வம்சம் மாறும்போது புதிய வம்சத்தின் முதல்வனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்தச் சங்கத்துக்கு உண்டு. இந்த சங்கத்தாரும் தங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். தாங்கள் சம்மதம் கொடுத்தால் இன்று இரவே முடிசூட்டு விழா நடத்தி விடலாம்….".அந்த மண்டபத்தில் சிறிது நேரம் பூகர்பத்திலும், கடலின் ஆழத்திலும் குடி கொண்டிருப்பது போன்ற நிசப்தம் குடிகொண்டிருந்தது. வந்தியத்தேவனுடைய பரபரப்பு உச்சநிலையை அடைந்து விட்டது..அச்சமயத்தில் பொன்னியின் செல்வர் தமது பீடத்திலிருந்து எழுந்து புத்த பிஷூக்களின் சங்கத்துக்கு வணக்கம் செலுத்தினார் . வந்தியத்தேவன் குதூகலத்தின் எல்லையை அடைந்தான். இளவரசர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் மணி மகுடத்தை எடுத்துத் தானே சூட்டிவிடலாம் என்று ஆத்திரப்பட்டான்..இளவரசர் கூறினார் :- மகான்களே ! உங்களை நமஸ்கரிக்கிறேன். இந்தச் சிறுவனிடம் எல்லையில்லா அன்பும் ,நம்பிக்கையும் வைத்து இந்தப் புரதான சிங்காதனத்தை அளிக்க முன்வந்த உங்கள் பெருந்தன்மையைப் போற்றி வணங்குகிறேன். ஆனால் தாங்கள் இப்போது இடும் பணி என் சக்திக்கு அப்பாற்பட்டது. நான் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவன் .அந்த நாட்டு நிலங்கள் தந்த உணவும் , நதிகள் அளித்த நீரும் இந்த உடலை ஆக்கின. என் தந்தை சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கட்டளைக்கு உட்பட்டு இங்கே வந்தேன் .அவருடைய விருப்பத்தை அறியாமல் எதுவும் என்னால் செய்ய இயலாது….".பிக்ஷூ குறுக்கிட்டுக் கூறினார் :- இளவரசே ! தங்கள் தந்தை சுந்தர சோழர் இன்று சுதந்திரமின்றிச் சிறையில் இருப்பதுபோல் இருப்பதை நீர் அறியீரா?"."ஆம் ; என் தந்தை நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்கிறார். கால்களின் சுவாதீனத்தை இழந்திருக்கிறார். ஆயினும் அவருடைய பெயரால்,- அவரிடம் அதிகாரம் பெற்று,- சோழ நாட்டை ஆளுவோரின் கட்டளைக்கு நான் உட்பட்டவன் . அவர்களுடைய கட்டளையின்றி நான் இந்தச் சிங்காதனத்தை ஏற்றுக் கொண்டால் தேசத் துரோகியும்,ராஜத் துரோகியும் ஆவேன் …."."இந்த நாட்டின் பிரஜைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய சம்மதமின்றி இராஜ்யத்தை விநியோகிக்க யாருக்கு உரிமை உண்டு ?"."தங்களை அரசனாகப் பெறுவதைப் பெறற்கரிய பேறாக இந்நாட்டுப் பிரஜைகள் கருதுவார்கள்…"."எல்லோரும் சம்மதிக்கலாம்; மகிழ்ச்சியும் அடையலாம்; இந்த உலகில் வேறு யாருடைய விருப்பத்தையும் காட்டிலும் நான் அதிகமாக மதிப்பது என் தமக்கையாரின் விருப்பத்தையே. என் அன்னை என்னை பெற்றாள். பொன்னி நதி என் உயிரைக் காப்பாற்றி அளித்தாள். ஆனால் என் தமக்கை என் அறிவை வளர்த்து, அகக் கண்களைத் திறந்தார். அப்படிப்பட்டவருடைய விருப்பத்தை காட்டிலும் என் உள்ளத்திலே உள்ள ஒரு குரலின் கட்டளையே எனக்கு மேலானது. மகா புருஷர்களே! தாங்கள் இச்சிறுவனுக்கு மனமுவந்து அளிக்கும் மகா பாக்கியத்தை ஏற்றுக்கொள்ளும்படி என் உள்ளக் குரல் எனக்குச் சொல்லவில்லை. தயவு செய்து இச்சிறுவனை மன்னித்து அருளுங்கள்!….".மறுபடியும் அந்த மகாசபையில் சிறிது நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது..(இந்த முறை நாமும் மௌனமாகவே விடை பெற்றுக் கொள்வோம்…)