நாங்கள் ஒவ்வொரு ஊரிலும் அவரவர்கள் பிரிவில் தினமும் எழுதியனுப்பும் ரிப்போர்ட்கள் எல்லாம் டில்லி தலைமையகத்தில்தான் சேரும். அங்கு மட்டும்தான் அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் இருந்தது. அவர்கள் மாதம் ஒரு முறை அனுப்பும் MIS இல் கோவை சரக்கு வருவாய் ஆறு மடங்கு அதிகரித்திருப்பதைக் கண்டு எங்கள் மேனேஜரைக் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். அதற்குக் காரணமான என்னையும் பாராட்டும் மனது அவருக்கு இருக்காது என்பது எனக்குத் தெரியும். விஷயம் என்னவென்றால் இது எப்படி சாத்தியமானது என்பதை மற்ற சிறிய ஊர்களுக்கும் விளக்கிச் சொல்ல அவரை அழைத்து இருக்கிறார்கள். குறிப்புகள் எழுதிக் கொடுத்தும் மூன்று நாட்கள் அவருக்கு வகுப்பெடுத்தும் நான் சொல்லிக் கொடுத்ததை அவர் மேனேஜர் கான்ஃபரன்ஸில் சொல்லி கைதட்டல் வாங்கியதை திரும்பி வந்து என்னிடம் கூறவில்லை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ ! சில நாட்களில் “ட்ரிம் ஷீட் போடக்கூடியவரை ஏர்போர்ட்டில்தான் வைத்திருக்க வேண்டும்” என்று என்னையும் ஏர்போர்ட்டுக்கே போகச் சொல்லி விட்டார்கள்.சிவில் விமானத் துறையையே புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு அங்கு சீக்கிரமே நடந்தது. .“பைலட்டுகள் பணிக்கு வரும்போது குடித்திருக்கக் கூடாது” என்ற சட்டம் ஏற்கெனவே இருந்ததுதான். அவர்களும் தொழில் மீது மரியாதை வைத்து குடித்துவிட்டு வரமாட்டார்கள். ஆனாலும் சிலர் முந்தின நாள் மாலையில் குடித்தது கொஞ்சம் அவரது அவர்களது reflex ஐப் பாதித்த ஒரு சில நிகழ்ச்சிகள் நடந்தது உண்மை. இப்போது இருப்பதைப் போல அவர்கள் விமானத்தில் ஏறும்போது டாக்டர்கள் செக் பண்ணும் வழக்கம் அப்போது இருந்திருக்கவில்லை. பைலட்டுகள் எல்லோரும் சுய ஒழுக்கத்துடன் தான் இருந்தார்கள். கோவையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் டாக்டர்கள் பரிசோதித்தபின் பைலட்டுகள் விமானம் ஏறும் சட்டம் வந்தது..கொச்சி - கோவை விமானம் அங்கே கிளம்பி இங்கே இறங்குவதற்கு முன் கண்ட்ரோல் டவரில் இருந்து, “உங்கள் விமானம் பைலட் இல்லாமல் கோ-பைலட் மட்டும் ஓட்டியவாறு வருகிறது. ஏதோ கலாட்டா போலிருக்கிறது” என்ற அதிர்ச்சித் தகவல் வந்தது. கொச்சியைத் தொடர்பு கொண்டு கேட்டதில், “விமானம் காலநிலை சரியாவதற்காகக் காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் பைலட்டும் அன்றும் இன்றும் பிரசித்தமாக இருக்கும் ஆயுர்வேத சோப்பு கம்பெனி ஒன்றின் முதலாளியும் சேர்ந்து தண்ணியடித்தார்கள் என்றும், சிறிது தள்ளாடியவாறுதான் அவர்கள் இருவருமே விமானத்தின் முன் பகுதியில் ஏறினார்கள்” என்றும் சொன்னார்கள்.என்னவாகும் என்று நாங்கள் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தபோது விமானமும் இறங்கி வந்து நின்றது. கதவு திறந்ததும் உள்ளே கூச்சல் குழப்பம் தெளிவாகவே வெளியில் கேட்டது. எப்போதும் கதவடியில் வந்து நின்று எங்களுக்குத் தபால்பை கொடுக்கும் ஏர்ஹோஸ்டஸையும் காணோம். முன்னால் காக்பிட்டில் கோயம்புத்தூர்கார இளைஞரான கோ-பைலட் மட்டும்தான் இருந்தார்..நடந்த கதை இதுதான். மப்பு தலைக்கு ஏறிய கேப்டன் ஏர் ஹோஸ்ட்டஸைக் கூப்பிட்டு தன் பின்னாலேயே அமர்ந்திருந்த குடிகார நண்பருக்கு ஐஸ் கொண்டு வருமாறு சொல்லி இருக்கிறார். “மறுபடியும் தண்ணி அடிக்க போகிறார்கள்” என்ற பயத்தில் அவர் “ஐஸ் இல்லை” என்று சொல்லியிருக்கிறார். தன் சீட்டை விட்டு வெளியே வந்து கேப்டனே ஐஸ் பக்கெட்டை எடுத்ததையும் தடுத்திருக்கிறார். அப்போது நடந்த கை கலப்பில் அவரது ஆடையும் சிறிது கிழிந்து விட்டது. அழுதவாறே விமானத்தின் பின்பகுதிக்கு ஓடியவரை எல்லாப் பயணிகளும் பார்த்து விட்டார்கள். அதில் இந்தியன் ஏர்லைன்ஸில் போர்டு மெம்பராக இருந்த ஒரு பெரிய சுப்ரீம் கோர்ட் வக்கீலும் ஒருவர். எழுந்து வந்து முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வந்த அவருக்கு விஷயம் தெளிவாகவே புரிந்தது. பயணிகள் ஓரிருவருடன் சேர்ந்து பைலட்டையும் அவருடைய நண்பரையும் வெளியே இழுத்து வந்து சீட்டில் கட்டி வைத்து விட்டார்கள். கோ பைலட்டிடம் “நீ பத்திரமாக தரை இறங்குவாயா” என்று கேட்டதில் அவரும் சரி என்றார். கோபத்தில் கத்திக் கொண்டிருந்த பைலட்டை அடிக்காத குறையாக அவர்கள் அடக்கி வைக்க விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. “பைலட்டுக்கு உடம்பு சரி இல்லை நான் மட்டும் தான் ஓட்டுகிறேன்” என்று கோ-பைலட் ரேடியோவில் சொல்லிக் கொண்டிருந்தபோதே பின்னால் நடக்கும் களேபரம் கண்ட்ரோல் டவரில் தெளிவாகவே கேட்டிருக்கிறது..கடைசியில் பைலட்டை போலீஸ் அரெஸ்ட் பண்ணி விட்டார்கள். வேலையும் போய்விட்டது. அப்புறம் தான் பைலட்டுகள் குடித்திருக்கிறார்களா என்பதை செக் பண்ணுவதற்கு டாக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். சிவில் ஏவியேஷன் சரித்திரத்திலேயே முதலும் கடைசியுமாக என் கண் முன்னால் நடந்த இந்தச் சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது.ஓரிரு மாதங்கள் கழித்து எங்கள் தலைமையகத்தின் உயர் அதிகாரி என்னுடன் போனில் பேச வேண்டும் என்கிறார் என்று மேனேஜர் கூப்பிட்ட போது என்னவோ ஏதோ என்று நானும் சென்றேன். மெட்ராஸில் இருந்து பெரியவர் என்னிடம் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்று தெரியாமல் வாயடைத்துப் போனேன். (தொடரும்)
நாங்கள் ஒவ்வொரு ஊரிலும் அவரவர்கள் பிரிவில் தினமும் எழுதியனுப்பும் ரிப்போர்ட்கள் எல்லாம் டில்லி தலைமையகத்தில்தான் சேரும். அங்கு மட்டும்தான் அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் இருந்தது. அவர்கள் மாதம் ஒரு முறை அனுப்பும் MIS இல் கோவை சரக்கு வருவாய் ஆறு மடங்கு அதிகரித்திருப்பதைக் கண்டு எங்கள் மேனேஜரைக் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். அதற்குக் காரணமான என்னையும் பாராட்டும் மனது அவருக்கு இருக்காது என்பது எனக்குத் தெரியும். விஷயம் என்னவென்றால் இது எப்படி சாத்தியமானது என்பதை மற்ற சிறிய ஊர்களுக்கும் விளக்கிச் சொல்ல அவரை அழைத்து இருக்கிறார்கள். குறிப்புகள் எழுதிக் கொடுத்தும் மூன்று நாட்கள் அவருக்கு வகுப்பெடுத்தும் நான் சொல்லிக் கொடுத்ததை அவர் மேனேஜர் கான்ஃபரன்ஸில் சொல்லி கைதட்டல் வாங்கியதை திரும்பி வந்து என்னிடம் கூறவில்லை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ ! சில நாட்களில் “ட்ரிம் ஷீட் போடக்கூடியவரை ஏர்போர்ட்டில்தான் வைத்திருக்க வேண்டும்” என்று என்னையும் ஏர்போர்ட்டுக்கே போகச் சொல்லி விட்டார்கள்.சிவில் விமானத் துறையையே புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு அங்கு சீக்கிரமே நடந்தது. .“பைலட்டுகள் பணிக்கு வரும்போது குடித்திருக்கக் கூடாது” என்ற சட்டம் ஏற்கெனவே இருந்ததுதான். அவர்களும் தொழில் மீது மரியாதை வைத்து குடித்துவிட்டு வரமாட்டார்கள். ஆனாலும் சிலர் முந்தின நாள் மாலையில் குடித்தது கொஞ்சம் அவரது அவர்களது reflex ஐப் பாதித்த ஒரு சில நிகழ்ச்சிகள் நடந்தது உண்மை. இப்போது இருப்பதைப் போல அவர்கள் விமானத்தில் ஏறும்போது டாக்டர்கள் செக் பண்ணும் வழக்கம் அப்போது இருந்திருக்கவில்லை. பைலட்டுகள் எல்லோரும் சுய ஒழுக்கத்துடன் தான் இருந்தார்கள். கோவையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் டாக்டர்கள் பரிசோதித்தபின் பைலட்டுகள் விமானம் ஏறும் சட்டம் வந்தது..கொச்சி - கோவை விமானம் அங்கே கிளம்பி இங்கே இறங்குவதற்கு முன் கண்ட்ரோல் டவரில் இருந்து, “உங்கள் விமானம் பைலட் இல்லாமல் கோ-பைலட் மட்டும் ஓட்டியவாறு வருகிறது. ஏதோ கலாட்டா போலிருக்கிறது” என்ற அதிர்ச்சித் தகவல் வந்தது. கொச்சியைத் தொடர்பு கொண்டு கேட்டதில், “விமானம் காலநிலை சரியாவதற்காகக் காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் பைலட்டும் அன்றும் இன்றும் பிரசித்தமாக இருக்கும் ஆயுர்வேத சோப்பு கம்பெனி ஒன்றின் முதலாளியும் சேர்ந்து தண்ணியடித்தார்கள் என்றும், சிறிது தள்ளாடியவாறுதான் அவர்கள் இருவருமே விமானத்தின் முன் பகுதியில் ஏறினார்கள்” என்றும் சொன்னார்கள்.என்னவாகும் என்று நாங்கள் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தபோது விமானமும் இறங்கி வந்து நின்றது. கதவு திறந்ததும் உள்ளே கூச்சல் குழப்பம் தெளிவாகவே வெளியில் கேட்டது. எப்போதும் கதவடியில் வந்து நின்று எங்களுக்குத் தபால்பை கொடுக்கும் ஏர்ஹோஸ்டஸையும் காணோம். முன்னால் காக்பிட்டில் கோயம்புத்தூர்கார இளைஞரான கோ-பைலட் மட்டும்தான் இருந்தார்..நடந்த கதை இதுதான். மப்பு தலைக்கு ஏறிய கேப்டன் ஏர் ஹோஸ்ட்டஸைக் கூப்பிட்டு தன் பின்னாலேயே அமர்ந்திருந்த குடிகார நண்பருக்கு ஐஸ் கொண்டு வருமாறு சொல்லி இருக்கிறார். “மறுபடியும் தண்ணி அடிக்க போகிறார்கள்” என்ற பயத்தில் அவர் “ஐஸ் இல்லை” என்று சொல்லியிருக்கிறார். தன் சீட்டை விட்டு வெளியே வந்து கேப்டனே ஐஸ் பக்கெட்டை எடுத்ததையும் தடுத்திருக்கிறார். அப்போது நடந்த கை கலப்பில் அவரது ஆடையும் சிறிது கிழிந்து விட்டது. அழுதவாறே விமானத்தின் பின்பகுதிக்கு ஓடியவரை எல்லாப் பயணிகளும் பார்த்து விட்டார்கள். அதில் இந்தியன் ஏர்லைன்ஸில் போர்டு மெம்பராக இருந்த ஒரு பெரிய சுப்ரீம் கோர்ட் வக்கீலும் ஒருவர். எழுந்து வந்து முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வந்த அவருக்கு விஷயம் தெளிவாகவே புரிந்தது. பயணிகள் ஓரிருவருடன் சேர்ந்து பைலட்டையும் அவருடைய நண்பரையும் வெளியே இழுத்து வந்து சீட்டில் கட்டி வைத்து விட்டார்கள். கோ பைலட்டிடம் “நீ பத்திரமாக தரை இறங்குவாயா” என்று கேட்டதில் அவரும் சரி என்றார். கோபத்தில் கத்திக் கொண்டிருந்த பைலட்டை அடிக்காத குறையாக அவர்கள் அடக்கி வைக்க விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. “பைலட்டுக்கு உடம்பு சரி இல்லை நான் மட்டும் தான் ஓட்டுகிறேன்” என்று கோ-பைலட் ரேடியோவில் சொல்லிக் கொண்டிருந்தபோதே பின்னால் நடக்கும் களேபரம் கண்ட்ரோல் டவரில் தெளிவாகவே கேட்டிருக்கிறது..கடைசியில் பைலட்டை போலீஸ் அரெஸ்ட் பண்ணி விட்டார்கள். வேலையும் போய்விட்டது. அப்புறம் தான் பைலட்டுகள் குடித்திருக்கிறார்களா என்பதை செக் பண்ணுவதற்கு டாக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். சிவில் ஏவியேஷன் சரித்திரத்திலேயே முதலும் கடைசியுமாக என் கண் முன்னால் நடந்த இந்தச் சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது.ஓரிரு மாதங்கள் கழித்து எங்கள் தலைமையகத்தின் உயர் அதிகாரி என்னுடன் போனில் பேச வேண்டும் என்கிறார் என்று மேனேஜர் கூப்பிட்ட போது என்னவோ ஏதோ என்று நானும் சென்றேன். மெட்ராஸில் இருந்து பெரியவர் என்னிடம் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்று தெரியாமல் வாயடைத்துப் போனேன். (தொடரும்)