'மனம் மட்டுமே மருந்து. மனதை தயார்படுத்துவதன் மூலமே எந்த நோயையும் குணப்படுத்த முடியும்'என்று சொன்ன கும்பேவின் வழியைப் பின்பற்றி பயனடையலாம். ஜி.எஸ்.எஸ். பல வித்தியாசமான செய்திகளைச் சொல்வதில் ஜித்தன். – ஆர்.ஜானகி, சென்னை.'கண்ணாடி… முன்னாடி… பின்னாடி… மெர்சல் மிரர் மீட்'ரியலி சூப்பர்! தனக்குத்தானே பேட்டி எடுப்பது புதுமையான ஒன்று. ரோஷிணி தனது ரியல் லைஃப் பற்றியும், கண்ணம்மா பாத்திரத்தில் தனது நாடகத்தொடர் பற்றியும் கூறியது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! – எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.'அரிசியை சாதமாக்குவதில் மேற்கொள்ளும் பொறுமையும் ப்ரொஸீஜரும், இல்வாழ்க்கையிலும் தேவை' என, 'நச்'சென தெளியவைத்த 'ஒரு வார்த்தை',குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கோர்க்கப்பட்ட கலவையாகி சிறப்பித்தது. – எஸ்.ஸ்ரீநிவாசன், மேற்கு மாம்பலம்.தோழி சுபாஷினியின் மன உறுதியும் திறமையும் அசர வைக்கின்றன. கவிதை வரிகளில் தன்னம்பிக்கை மிளிர்கிறது! – லக்ஷ்மிவாசன், சென்னை.கண்ணம்மா – ரோஷிணி பேட்டியளித்து சுவாரஸ்யப் படுத்தியிருந்த விதம், 'தெறி'க்க வைத்திருந்தது! – சாந்தி சுந்தர், அயஞ்சேரி.அனுவின் தலைப்புதான், 'ஒரு வார்த்தை.'ஆனால், உள்ளே அவர் தருவதோ, அளவற்ற அதே நேரத்தில் மறுக்க முடியாத; மறக்க முடியாத விஷயங்கள். – க.மோகனசுந்தரம், திருநெல்வேலி.'மனம் மட்டுமே மருந்து' என்ற மேரி பேக்கர் பற்றிப் படித்ததும், 'உண்மைதான்' என்று மனம் ஒப்புக்கொண்டது. எங்களை, நாங்களே மன ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவிய 'மங்கையர் மலருக்கு'பாராட்டுகள். – ஹேமமாலினி, சென்னை.பேராசிரியர் மீனாட்சி வெங்கடேஷ் அவர்களின் பேட்டியை படித்து, ஒரு நல்ல ஆசிரியரிடம் பாடம் கற்ற திருப்தி ஏற்பட்டது.- வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை.தனுஜா ஜெயராமன் எழுதிய, 'பாரம்' சிறுகதை மனதை நெகிழ வைத்தது. எந்த ஒரு பிரச்னைக்கும் அங்காளம்மனுக்கு ஒத்த ரூபா முடித்து வைத்து, நம்பிக்கையுடன் காத்திருக்கும் அவரின் செயல், மனம் மகிழ வைத்தது. லக்ஷ்மி அம்மாள் போன்றோரிடம் இருக்கும் உறுதியும் வைராக்கியமும்தான் பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதைப் புரியவைத்த அழகான சிறுகதை. – நந்தினி கிருஷ்ணன், மதுரை.எங்கள் வீட்டில் தென்னை மரங்கள் இருந்தபோதிலும், 'ஸ்ரீஃபல்' தேங்காயை எப்போதும் பார்த்ததில்லை. ஏன், கேள்விப்பட்டதே இல்லை. இதைப்பற்றி தெரிவித்த பார்கவி மேடத்திற்கும், 'மங்கையர் மலரு'க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். – கிரிஜா ராகவன், கோவை.அனுஷாவின், 'ஒரு வார்த்தை' உண்மையிலேயே, 'திரு வார்த்தைதான்.'- ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்.'தானம் எனப்படுவது யாதெனில்' கட்டுரையைப் படித்து, மனம் நெகிழ்ந்து போனது. இந்த சின்ன வயதில் ஆதிரைக்கு இருக்கும் இரக்க குணம், அன்பு என அனைத்தையும் படித்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. – பானு பெரியதம்பி, சேலம்.ரத்த தானம். சிறுநீரக தானம் போன்றவற்றை விட, சிறந்ததாக அமைந்துவிட்டது அதிரையின் முடி தானம்.- அ.சம்பத், சின்னசேலம்.'அன்புச்சுமை'படக்கதை, அன்பின் பெருமையை அருமையாகக் கூறியது. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வர வேண்டும். – எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
'மனம் மட்டுமே மருந்து. மனதை தயார்படுத்துவதன் மூலமே எந்த நோயையும் குணப்படுத்த முடியும்'என்று சொன்ன கும்பேவின் வழியைப் பின்பற்றி பயனடையலாம். ஜி.எஸ்.எஸ். பல வித்தியாசமான செய்திகளைச் சொல்வதில் ஜித்தன். – ஆர்.ஜானகி, சென்னை.'கண்ணாடி… முன்னாடி… பின்னாடி… மெர்சல் மிரர் மீட்'ரியலி சூப்பர்! தனக்குத்தானே பேட்டி எடுப்பது புதுமையான ஒன்று. ரோஷிணி தனது ரியல் லைஃப் பற்றியும், கண்ணம்மா பாத்திரத்தில் தனது நாடகத்தொடர் பற்றியும் கூறியது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! – எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.'அரிசியை சாதமாக்குவதில் மேற்கொள்ளும் பொறுமையும் ப்ரொஸீஜரும், இல்வாழ்க்கையிலும் தேவை' என, 'நச்'சென தெளியவைத்த 'ஒரு வார்த்தை',குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கோர்க்கப்பட்ட கலவையாகி சிறப்பித்தது. – எஸ்.ஸ்ரீநிவாசன், மேற்கு மாம்பலம்.தோழி சுபாஷினியின் மன உறுதியும் திறமையும் அசர வைக்கின்றன. கவிதை வரிகளில் தன்னம்பிக்கை மிளிர்கிறது! – லக்ஷ்மிவாசன், சென்னை.கண்ணம்மா – ரோஷிணி பேட்டியளித்து சுவாரஸ்யப் படுத்தியிருந்த விதம், 'தெறி'க்க வைத்திருந்தது! – சாந்தி சுந்தர், அயஞ்சேரி.அனுவின் தலைப்புதான், 'ஒரு வார்த்தை.'ஆனால், உள்ளே அவர் தருவதோ, அளவற்ற அதே நேரத்தில் மறுக்க முடியாத; மறக்க முடியாத விஷயங்கள். – க.மோகனசுந்தரம், திருநெல்வேலி.'மனம் மட்டுமே மருந்து' என்ற மேரி பேக்கர் பற்றிப் படித்ததும், 'உண்மைதான்' என்று மனம் ஒப்புக்கொண்டது. எங்களை, நாங்களே மன ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவிய 'மங்கையர் மலருக்கு'பாராட்டுகள். – ஹேமமாலினி, சென்னை.பேராசிரியர் மீனாட்சி வெங்கடேஷ் அவர்களின் பேட்டியை படித்து, ஒரு நல்ல ஆசிரியரிடம் பாடம் கற்ற திருப்தி ஏற்பட்டது.- வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை.தனுஜா ஜெயராமன் எழுதிய, 'பாரம்' சிறுகதை மனதை நெகிழ வைத்தது. எந்த ஒரு பிரச்னைக்கும் அங்காளம்மனுக்கு ஒத்த ரூபா முடித்து வைத்து, நம்பிக்கையுடன் காத்திருக்கும் அவரின் செயல், மனம் மகிழ வைத்தது. லக்ஷ்மி அம்மாள் போன்றோரிடம் இருக்கும் உறுதியும் வைராக்கியமும்தான் பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதைப் புரியவைத்த அழகான சிறுகதை. – நந்தினி கிருஷ்ணன், மதுரை.எங்கள் வீட்டில் தென்னை மரங்கள் இருந்தபோதிலும், 'ஸ்ரீஃபல்' தேங்காயை எப்போதும் பார்த்ததில்லை. ஏன், கேள்விப்பட்டதே இல்லை. இதைப்பற்றி தெரிவித்த பார்கவி மேடத்திற்கும், 'மங்கையர் மலரு'க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். – கிரிஜா ராகவன், கோவை.அனுஷாவின், 'ஒரு வார்த்தை' உண்மையிலேயே, 'திரு வார்த்தைதான்.'- ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்.'தானம் எனப்படுவது யாதெனில்' கட்டுரையைப் படித்து, மனம் நெகிழ்ந்து போனது. இந்த சின்ன வயதில் ஆதிரைக்கு இருக்கும் இரக்க குணம், அன்பு என அனைத்தையும் படித்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. – பானு பெரியதம்பி, சேலம்.ரத்த தானம். சிறுநீரக தானம் போன்றவற்றை விட, சிறந்ததாக அமைந்துவிட்டது அதிரையின் முடி தானம்.- அ.சம்பத், சின்னசேலம்.'அன்புச்சுமை'படக்கதை, அன்பின் பெருமையை அருமையாகக் கூறியது. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வர வேண்டும். – எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்