இன்று இந்திய, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்குகிறது.
உலக கோப்பை போட்டிகளுக்கு முன்னதான ஒரு ஒத்திகை போட்டியாகவே இந்த போட்டிகள் கருதப்படுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரான இதில் இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இதில் இரு போட்டிகளில் வெற்றி பெரும் அணி கோப்பையை வெல்லும். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், பந்து விச்சில் மிக பலம் குறைந்த அணியாகவே இருந்து வருகிறது.
பேட்டிங் வரிசையில் விராட் கோலி, சூர்யா குமார்யாதவ், ரோஹித், ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சை பலப்படுத்தினால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு எளிதாக இருக்கும்.
தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிக சிறப்பாகவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு சாதகமாக அமையும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.