தேவை:
தாமரைத் த ண் டு – ஒரு ஜாண் அளவு .
உளுந்து – 2 டீஸ்பூன்.
நறுக்கி ய தக்காளி – 1/4 கப் ,
மிளகாய் வற்றல்– 3
மிளகு தூள் – 1//4 டீஸ்பூன்
தனியா= 1/4 டீஸ்பூன்.
நல்லெண்ணெய்– 2 டீஸ்பூன்.
தாளிக்க – கடுகு ,கருவேப்பிலை, பெருங்காயம்.
உப்பு– தேவைக்கு
செய்முறை:
தாமரை த் தண்டை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் செய்து எண்ணெய் ஊற்றி, மிளகாய் வற்றல், உளுந்து, தனியா ஆகியவற்றைத் தனித்தனியே பொன் நிறமாக வறுத்து பொடி த்து க் கொ ள்ள வும் .அதே கடா யி ல் தாமரை தண் டு , தக்காளியை வதக்கி, இதனுடன் பொடியையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பின் அத்துடன் தா ளி க் க வேண்டிய சாமான்களை போட்டு தாளிக்க வும் . தாமரைத் தண்டு சட்னி ரெடி! இட்லி ,தோசைக்கு தொட்டுகொள்ள நன்றாக இருக்கும் .
(குறிப்பு: விருப்பப்பட்டால் தேங்காய் சேர்க்கலாம். இதன் பயன்– உடல் உஷ்ணத்தை தவிர்க்கும்).