குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
ராணூவ தளபதி பிபின் ராவத் உட்பட இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன. பின்னர் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்தபடி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ராணுவ வீரர்களின் உடல்கள் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை வழியாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.