தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆரம்ப சுகாதார நிலையங்களை தற்காலிக கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற வேண்டும் என பொதுசுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொற்று காரணமாக கடந்த ஒருவாரமாக தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார நிலையங்களும் 30 படுக்கைகள் கொண்ட இடைக்கால கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்படும்.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு லேசான மற்றும் மிதமான அறிகுறியுள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். அங்கு ஒரு அவசர ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.கொரோனா அல்லாத கர்பினி தாய்மார்களுக்கு மட்டும் பிரசவம் பார்க்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள சிகிச்சைகள் மற்றுமெ மருந்துகளை மட்டுமே வழங்க வேண்டும். இதற்காக தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேசான அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு, ஐந்து நாட்கள் வரை கண்கானித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மேலும் 7 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை சுயமாக கண்காணிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகள் உடல் உழைப்பை தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை படுக்கை ஓய்வு எடுக்க வேண்டும். சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவற்றை அவ்வப்பொழுது பரிசோதிக்கொள்ளவும் நோயாளிகளுக்கு டிஸ்சார்ஜ் செய்யும் முன் மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
இது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்களும், நோயாளிகளுப் பின்பற்ற வேண்டும்.
_ இவ்வாறு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளாக தெரிவித்துள்ளார்.