தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்
வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக்க சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளீயிட்டுள்ள அறிக்கை:
வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததுள்ளது. இதனால் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தமிழக கரையை நெருங்க கூடும். அதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
–இவ்வாறு சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.