வி. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.
விழுந்த மரங்களில் விலாசத்தை தேடுகின்றாயோ?! இலவமரங்கூட இத்துப்போய் நாளானதே – இனி இதயத்தை தொலைக்கக்கூட ஏது வழி?! மானிடர் தரும் அதிர்வைவிட மின்சாரம் தந்து விடப் போவதில்லை யென மறுபடியும் மரிக்கத் திட்டமிட்டாயோ?! வருகைக்கு காத்திருக்கிறேன் சிறகுவிரித்து பறந்து வா கிளியக்கா?!