ஒரேநாள் நிகழ்வில் உருவான ’D 3’ படம்!

ஒரேநாள் நிகழ்வில் உருவான ’D 3’ படம்!

-லதானந்த்.

ரேநாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. காரணம் இதுபோன்ற கதைகளில் வேகமும் விறுவிறுப்பும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும். இப்போது பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் தயாரித்துள்ள படம் 'D 3' படமும் அப்படித்தான்! 

இந்த  'D 3'படம் ஒரே நாளில் நடக்கும் கதைக் களத்தைக் கொண்டதுதான்.

அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரஜின் கதாநாயகன், வித்யா பிரதீப் கதாநாயகி. இவர்களுடன் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்பத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை குற்றாலத்திலேயே நடத்தியுள்ளனர்.

படத்தின் இயக்குநர் பாலாஜி படம் பற்றி கூறும்போது, "நான் கேள்விப்பட்ட உண்மை விஷயம் ஒன்றை வைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளேன். அதே சமயம் இதுவரை வெளிவராத விஷயமாகவும் அது இருக்கும். அதனால் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகரும்.

இயற்கை ஏற்படுத்திய பல பிரச்சனைகளையும், தடைகளையும் தாண்டி இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். குற்றாலத்தில் மழை சீசன் இல்லாத சமயத்தில்தான் படப்பிடிப்பை நடத்தத் துவங்கினோம்.. ஆனால் படப்பிடிப்பு நடந்த எழுபது சதவீத நாட்களிலும் எதிர்பாராத விதமாக மழையின் குறுக்கீட்டுடன்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டி இருந்தது" என்கிறார்.

கொரோனா சமயத்தில் – கிட்டத்தட்ட 60 சதவீத படப்படிப்பு முடிவடைந்த சமயத்தில் – இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவந்த 3 வயது நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். அதனால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்த வேண்டியதாயிற்றாம். 

சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு  ஒரு நாள் வாடகையாக மட்டுமே இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்திப் படப்பிடிப்பு நடத்தத் தயார் நிலையில் இருந்தபோது அன்றைய தினம் காலை படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திறங்கிய நடிகர் வர்கீஸ் மேத்யூவுக்கு விமான நிலையத்திலேயே கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வர, படப்பிடிப்பு கேன்சல் ஆனது.  இப்படி நிறைய அனுபவங்களைக் கடந்து இந்தப் படம் உருவாகியுள்ளது என்றும் படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தப் படத்துகு  ஸ்ரீஜித் எடவானா இசையமைத்திருக்கிறார்; மணீகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com