மொட்டைத் தலையுடன் கிளாமர் குயின் சஞ்சனா கல்ராணி; ரசிகர்கள் அதிர்ச்சி!

மொட்டைத் தலையுடன் கிளாமர் குயின் சஞ்சனா கல்ராணி; ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் இந்த தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான சஞ்சனா கல்ராணி, கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடகாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கி, கைதாகி சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சஞ்சனா செட்டில் ஆனார். தற்போது கர்ப்பமாக இருக்கும் சஞ்சனா கல்ராணி. படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அந்த புகைப்படத்தின் குறிப்பில் சஞ்சனா கூறியதாவது:

நான் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி. நான் பிறர் கண்களுக்கு அழகாக தெரியக் கூடாது என்பதற்காக என் தலைமுடியை தியாகம் செய்துவிட்டேன். வாழ்க்கை பல கடினமான கட்டங்களைத் தாண்டி, இப்போது மீண்டும் அழகாக இருக்கிறது. என் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டேன்.

-இவ்வாறு சஞ்சனா பதிவிட்டுள்ளார். அவரது இந்த மொட்டைத் தலை புகைப்படம் வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com