வாய் துர்நாற்றமா? ஈறுகள் வீக்கமா? கிருமிகளை விரட்டும் உப்பு நீர் வழிமுறை!

Salt water and a women gargling
salt water gargling
Published on

ப்பு ஒரு இயற்கையான கிருமிக் கொல்லியாகும். இது வாய் மற்றும் தொண்டையில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது. இதனுடன் உப்பு ஒரு வலுவான ஆஸ்மோடிக் நிலையை உருவாக்குகிறது. இது வீக்கமடைந்த திசுக்களில் இருந்து அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி, வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவுகிறது.

1. தொண்டை வலி நிவாரணம்: உப்பு நீரில்(salt water) வாய் கொப்பளிக்கும்போது, ​​அது தொண்டை வலியுடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் வலியை குறைக்கிறது. உப்பின் ஆண்டிமைக்ரோபியல் பண்பு தொண்டை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்ல உதவும்.

2. சைனஸ் மற்றும் சுவாச தொற்றை சரிசெய்கிறது: சைனஸ் மற்றும் சுவாச தொற்றுகளில் இருந்து நிவாரணம் தருகிறது. உமிழ்நீர் கரைசல் தடிமனான சளியை உடைக்க உதவும், எனவே, மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளி எளிதாக வெளியேறுகிறது. மூக்கடைப்பை குறைக்கிறது. உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் நபர்களுக்கு குறைவான சுவாசக் குழாய் நோய்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

3. ஒவ்வாமை அறிகுறிகளைத் தணிக்கும்: பூவில் உள்ள மகரந்தம் அல்லது செல்லப் பிராணிகளால் ஏற்படும் ஒவ்வாமை, தொண்டை மற்றும் மூக்கில் அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது வீக்கத்தைக் குறைக்கவும், தொண்டையில் சிக்கியுள்ள ஒவ்வாமைகளை வெளியேற்றவும் உதவும்.

4. பல் மற்றும் ஈறு ஆரோக்கியம்: ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற ஈறு நோய்களைத் தடுக்கிறது. உப்பு நீரின் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது மற்றும் ஈறு மற்றும் பல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வீங்கிய ஈறுகளில் இருந்து அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற உதவும்.

5. வாய் துர்நாற்றத்தை நீக்கும்: உப்பின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்பு வாயில் நாற்றத்தை உருவாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும். வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும் உணவு துகள்களை அகற்ற உதவுகிறது.  உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, சுவாசத்தை நறுமணமாக வைத்திருக்க உதவும்.

6. வாய்ப்புண்களை குணப்படுத்த உதவுகிறது: மன அழுத்தம் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படும் வாய் புண்களின் வீக்கத்தைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.

7. இயற்கை pH நிலைகளை பராமரித்தல்: வாய் மற்றும் தொண்டையில் இயற்கையான pH சமநிலையை பராமரிக்க உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான pH சமநிலை தொண்டை மற்றும் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. அதே நேரத்தில் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்கிறது.

8. வறட்டு இருமலைக் குறைக்கிறது: உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது வறட்டு இருமலைக் குறைக்க உதவும். இது தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை தணித்து ஈரப்பத்துடன் வைத்திருப்பதன் மூலம் இருமல் மட்டுப்படும்.

9. அடிநா அழற்சியை எளிதாக்குகிறது: டான்சில்ஸ் வீக்கம், தொண்டை புண், விழுங்குவதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை குறைக்கும். வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது அடிநா அழற்சியுடன் தொடர்புடைய வலிகளைப் போக்கும்.

உப்பு நீர் கரைசலை எவ்வாறு தயாரிப்பது?

வாய் கொப்பளிக்க உப்பு நீர் கலவையை தயாரிப்பது எளிது. இதற்கு இரண்டு பொருட்கள் மட்டுமே தேவை. உப்பு மற்றும் தண்ணீர். ஒரு அடிப்படை உப்பு நீர் கலவைக்கு, அரை தேக்கரண்டி டேபிள் உப்பு அல்லது கல் உப்பை எட்டு அவுன்ஸ் (1 கப்) வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். உப்பு முற்றிலும் கரைய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஊமத்தை: விஞ்ஞானம் அறியாத மருத்துவ ரகசியங்கள்!
Salt water and a women gargling

உப்பு நீரை சிறிது வாயில் ஊற்றி, தலையை சற்று பின்னால் சாய்த்து  பற்கள், ஈறுகள் மற்றும் தொண்டையில் படுமாறு சுமார் 15 வினாடிகள் வைத்துப் பின் வாய் கொப்பளிக்கவும். மீண்டும் இதேபோல இரண்டு மூன்று முறை செய்யவும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்ல பலன் தரும்.

-ஆர்.ஐஸ்வர்யா

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com