அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா கொரோனா வைரஸ்: மருத்துவர்கள் கவலை!

அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா கொரோனா வைரஸ்: மருத்துவர்கள் கவலை!

அமெரிக்காவில் டெல்டா கொரோனா பரவல் அதி தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 1 வாரத்தில் சராசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 72 ஆயிரமாக பதிவாகியுள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு கரோனா காரணமாக 1,800 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவ துறை இதுகுறித்து கூறியதாவது:

அமெரிக்காவில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. இன்னும் பலருக்கு தடுப்பூசி மீதான தயக்கம் இருப்பதால், அதை செலுத்தி கொள்ள முன்வராததுதான் இந்த கொரோனா அதிகரிப்புக்குக் காரணம். இதை இந்நிலியிலேயே கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கவலையளிக்கும் வகையில் மாறக்கூடும்

-இவ்வாறு அமெரிக்க மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com