சந்திப்பு, படங்கள் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.ஸ்ரீரங்கம் கோயில் உள்பிராகாரங்களிலோ அல்லது கோயிலின் வெளி பிராகாரங்களிலோ இதுவரை எந்தவொரு பக்தருமே அங்கப் பிரதட்சணம் செய்தது இல்லை. சமீபத்தில் 11.09.2021 சனிக்கிழமையன்று, கும்பகோணம் அருகே பேரளம் எனும் ஊரில் இருந்து வந்திருந்த நாகராஜன் எனும் பக்தர், ஸ்ரீரங்கம் கோயிலின் நான்கு உத்திர வீதிகளிலும் அங்கப் பிரதட்சணம் செய்து பொதுமக்களுக்காக வேண்டியுள்ளார். அவருக்கு வயது எழுபத்தியெட்டு. அந்த எளிய பக்தர் நாகராஜன் என்பவரிடம் பேசினோம்..''இதுவரை எனக்காகவோ அல்லது எனது குடும்பத்துக்காகவோ வேண்டிக்கிட்டு எந்தக் கோயிலிலும் நான் அங்கப் பிரதட்சணம் செய்தது கிடையாது. ஊருக்கே வேண்டிக்கொள்ளும்போது அதுக்குள்ளே நானும் என் குடும்பமும் அடங்கும்தானே? ஊர் மக்கள், தேச மக்கள், உலக மக்கள் நன்மைகளுக்காகவே பல ஆண்டுகளாக நான் கோயில் கோயிலாக அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறேன். என்னோட இருபத்தியெட்டு வயதில் இருந்து, சுமார் ஐம்பது ஆண்டுகளாக திருக்கோயில்களில் அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறேன்.".அவற்றில் குறிப்பிடத்தக்க திருக்கோயில்களைக் கூறுங்களேன்….''தஞ்சை பெரிய கோயிலின் அத்தனை பெரிய பிராகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்துள்ளேன். கும்பகோணம் மகாமகத் திருக்குளம் வெளிச்சுற்று முழுவதும் அங்கப் பிரதட்சணம் செய்துள்ளேன். திருவாரூர் தேரோடும் வீதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கப் பிரதட்சணம் செய்துள்ளேன். பழனி திருக்கோயில் வெளிப்பிராகாரத்தில் பத்து ஆண்டுகள் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளேன். அதிக ஆண்டுகளாக நான் தொடர்ந்து அங்கப் பிரதட்சணம் செய்து வருகின்ற திருக்கோயில் ஒன்று உண்டு."அதிக ஆண்டுகளா? எத்தனை ஆண்டுகள்? எந்தக் கோயில்?''சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு ஐம்பது ஆண்டுகளாகச் சென்று தரிசனம் செய்து வருகிறேன். ஐயப்பன் கோயில் சன்னிதி வெளிப்பிராகாரத்தில் அப்போது இருந்தே ஆண்டுதோறும் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறேன். ஆண்டுதோறும் ஐயப்பன் கோயில் சன்னிதி வெளிப் பிராகாரத்தில் அதிகாலை நேரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து வந்துள்ளேன். பின்னர் மஞ்சமாதா கோயில், மணிமண்டபம் பிராகாரங்களிலும் அங்கப் பிரதட்சணம் செய்து வந்துள்ளேன். நான் அங்கப் பிரதட்சணம் செய்த கோயில்களிலேயே அதிக ஆண்டுகள், அதிக முறைகள் அங்கப் பிரதட்சணம்செய்தது ஐயப்பன் கோயிலில்தான்.".வைணவ ஆலயங்களில் அங்கப் பிரதட்சண வழிபாடு நடைபெறுவதில்லை. அதிலும் ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்றதே இல்லை. அப்படி இருக்கையில், நீங்கள் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய வந்ததன் நோக்கம் என்ன?.''சமீபத்திய இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் கொரோனா தாக்கத்தால் பெரிய துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். முதல் அலை, இரண்டாம் அலை வந்து போனதற்குப் பின்னரும் பொதுமக்கள் மத்தியில் மூன்றாம் அலை வந்து விடுமோ என்கிற அச்சமும் பீதியும் நிலவி வருகிறது. அந்த மூன்றாம் அலை வராமல் தடுக்கவும், ஏற்கெனவே இரண்டு அலைகளில் பாதிக்கப்பட்டவர் களைக் காத்தருளவும், ஸ்ரீரங்கம் எம்பெருமாளிடம் பணிந்து வேண்டிக் கொள்ளவே ஸ்ரீரங்கம் கோயிலின் வெளிப்பிராகாரமான, 'ஸ்ரீ ரெங்கா ரெங்கா' கோபுர வாசலில் இருந்து அங்கப்பிரதட்சணம் தொடங்கினேன். தெற்கு உத்திர வீதி, மேல உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, கீழ உத்திர வீதி வழியாகத் தொடர்ந்து அங்கப்பிரதட்சணம் செய்து வந்து, தொடங்கிய இடத்திலேயே நிறைவு செய்தேன். காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்தேன். எட்டரை மணியளவில் நிறைவு பெற்றது எனது அங்கப் பிரதட்சணம். அரங்கனின் மண்ணில் அங்கப் பிரதட்சணம் செய்தது எனக்குக் கிட்டிய பாக்கியமாகவே கருதுகிறேன்" என்கிறார் பேரளம் நாகராஜன்..இது குறித்து, ஸ்ரீரங்கவாசிகள் என்ன நினைக்கிறார்கள்?."இதனைக் கேள்விப்பட்ட உடனே எனக்குப் பெரும் ஆச்சர்யமாகவும், ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஆச்சர்யம் எப்படி என்றால், ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் இப்படியொரு அங்கப் பிரதட்சண வழிபாடு நிகழ்ந்ததே கிடையாது. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே சுகவாசி. அவரைப்போல சுகவாசி உலகத்தில் யாருமே இல்லை. இருக்க முடியாது. அதுபோன்ற சுகவாசி தனது பக்தர்களையும் சுகமாகத்தான் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அப்படியிருக்க, எண்பது வயதினை நெருங்கும் ஒரு பெரியவர், தன்னை வருத்திக்கொண்டு, தனக்காக அல்லாமல் பொதுமக்கள் அனைவரின் நலனுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு அங்கப் பிரதட்சண வழிபாடு நிறைவேற்றுவது எனக்கு நிரம்பவே சந்தோஷமாக இருந்தது" என்கிறார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பக்தையான ஜெயா ஸ்ரீதர்..''பகவான் வெளிப்படையாகவே பகர்ந்துள்ளார். 'எந்த வழியிலும் பக்தர்கள் தங்களை வருத்திக்கொண்டுதான் என்னை அடைந்திட வேண்டியதில்லை' என்று கூறியுள்ளார். ஆண்டாள் நாச்சியாரோ, 'ஒவ்வொருவரும் அவர் தம் வாயாலே மனமுருகி நாராயணா… கோவிந்தா… மாதவா… என்று அழைத்தாலே போதும்' என்கிறாள். அதுவே குரு பக்தி. தெய்வ பக்தி என்று நமக்கு வழிகாட்டியுள்ளாள். பொதுவாகவே, வைணவ ஆலயங்களில் இந்த அங்கப் பிரதட்சண வழிபாடு என்பது வழக்கத்திலோ நடைமுறையிலோ இல்லை. எனினும், அந்த எழுபத்தியெட்டு வயது முதியவர் மனதில் இது தோன்றியுள்ளது. இந்த வயதிலும் அந்த எண்ணம்தான் அவருக்கு அந்த ஆன்ம பலத்தைத் தந்திருக்க வேண்டும்" என்கிறார் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாத சுவாமி திருக்கோயிலின் மிராஸ் அர்ச்சகர் சுந்தர் பட்டர்.
சந்திப்பு, படங்கள் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.ஸ்ரீரங்கம் கோயில் உள்பிராகாரங்களிலோ அல்லது கோயிலின் வெளி பிராகாரங்களிலோ இதுவரை எந்தவொரு பக்தருமே அங்கப் பிரதட்சணம் செய்தது இல்லை. சமீபத்தில் 11.09.2021 சனிக்கிழமையன்று, கும்பகோணம் அருகே பேரளம் எனும் ஊரில் இருந்து வந்திருந்த நாகராஜன் எனும் பக்தர், ஸ்ரீரங்கம் கோயிலின் நான்கு உத்திர வீதிகளிலும் அங்கப் பிரதட்சணம் செய்து பொதுமக்களுக்காக வேண்டியுள்ளார். அவருக்கு வயது எழுபத்தியெட்டு. அந்த எளிய பக்தர் நாகராஜன் என்பவரிடம் பேசினோம்..''இதுவரை எனக்காகவோ அல்லது எனது குடும்பத்துக்காகவோ வேண்டிக்கிட்டு எந்தக் கோயிலிலும் நான் அங்கப் பிரதட்சணம் செய்தது கிடையாது. ஊருக்கே வேண்டிக்கொள்ளும்போது அதுக்குள்ளே நானும் என் குடும்பமும் அடங்கும்தானே? ஊர் மக்கள், தேச மக்கள், உலக மக்கள் நன்மைகளுக்காகவே பல ஆண்டுகளாக நான் கோயில் கோயிலாக அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறேன். என்னோட இருபத்தியெட்டு வயதில் இருந்து, சுமார் ஐம்பது ஆண்டுகளாக திருக்கோயில்களில் அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறேன்.".அவற்றில் குறிப்பிடத்தக்க திருக்கோயில்களைக் கூறுங்களேன்….''தஞ்சை பெரிய கோயிலின் அத்தனை பெரிய பிராகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்துள்ளேன். கும்பகோணம் மகாமகத் திருக்குளம் வெளிச்சுற்று முழுவதும் அங்கப் பிரதட்சணம் செய்துள்ளேன். திருவாரூர் தேரோடும் வீதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கப் பிரதட்சணம் செய்துள்ளேன். பழனி திருக்கோயில் வெளிப்பிராகாரத்தில் பத்து ஆண்டுகள் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளேன். அதிக ஆண்டுகளாக நான் தொடர்ந்து அங்கப் பிரதட்சணம் செய்து வருகின்ற திருக்கோயில் ஒன்று உண்டு."அதிக ஆண்டுகளா? எத்தனை ஆண்டுகள்? எந்தக் கோயில்?''சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு ஐம்பது ஆண்டுகளாகச் சென்று தரிசனம் செய்து வருகிறேன். ஐயப்பன் கோயில் சன்னிதி வெளிப்பிராகாரத்தில் அப்போது இருந்தே ஆண்டுதோறும் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறேன். ஆண்டுதோறும் ஐயப்பன் கோயில் சன்னிதி வெளிப் பிராகாரத்தில் அதிகாலை நேரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து வந்துள்ளேன். பின்னர் மஞ்சமாதா கோயில், மணிமண்டபம் பிராகாரங்களிலும் அங்கப் பிரதட்சணம் செய்து வந்துள்ளேன். நான் அங்கப் பிரதட்சணம் செய்த கோயில்களிலேயே அதிக ஆண்டுகள், அதிக முறைகள் அங்கப் பிரதட்சணம்செய்தது ஐயப்பன் கோயிலில்தான்.".வைணவ ஆலயங்களில் அங்கப் பிரதட்சண வழிபாடு நடைபெறுவதில்லை. அதிலும் ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்றதே இல்லை. அப்படி இருக்கையில், நீங்கள் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய வந்ததன் நோக்கம் என்ன?.''சமீபத்திய இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் கொரோனா தாக்கத்தால் பெரிய துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். முதல் அலை, இரண்டாம் அலை வந்து போனதற்குப் பின்னரும் பொதுமக்கள் மத்தியில் மூன்றாம் அலை வந்து விடுமோ என்கிற அச்சமும் பீதியும் நிலவி வருகிறது. அந்த மூன்றாம் அலை வராமல் தடுக்கவும், ஏற்கெனவே இரண்டு அலைகளில் பாதிக்கப்பட்டவர் களைக் காத்தருளவும், ஸ்ரீரங்கம் எம்பெருமாளிடம் பணிந்து வேண்டிக் கொள்ளவே ஸ்ரீரங்கம் கோயிலின் வெளிப்பிராகாரமான, 'ஸ்ரீ ரெங்கா ரெங்கா' கோபுர வாசலில் இருந்து அங்கப்பிரதட்சணம் தொடங்கினேன். தெற்கு உத்திர வீதி, மேல உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, கீழ உத்திர வீதி வழியாகத் தொடர்ந்து அங்கப்பிரதட்சணம் செய்து வந்து, தொடங்கிய இடத்திலேயே நிறைவு செய்தேன். காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்தேன். எட்டரை மணியளவில் நிறைவு பெற்றது எனது அங்கப் பிரதட்சணம். அரங்கனின் மண்ணில் அங்கப் பிரதட்சணம் செய்தது எனக்குக் கிட்டிய பாக்கியமாகவே கருதுகிறேன்" என்கிறார் பேரளம் நாகராஜன்..இது குறித்து, ஸ்ரீரங்கவாசிகள் என்ன நினைக்கிறார்கள்?."இதனைக் கேள்விப்பட்ட உடனே எனக்குப் பெரும் ஆச்சர்யமாகவும், ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஆச்சர்யம் எப்படி என்றால், ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் இப்படியொரு அங்கப் பிரதட்சண வழிபாடு நிகழ்ந்ததே கிடையாது. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே சுகவாசி. அவரைப்போல சுகவாசி உலகத்தில் யாருமே இல்லை. இருக்க முடியாது. அதுபோன்ற சுகவாசி தனது பக்தர்களையும் சுகமாகத்தான் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அப்படியிருக்க, எண்பது வயதினை நெருங்கும் ஒரு பெரியவர், தன்னை வருத்திக்கொண்டு, தனக்காக அல்லாமல் பொதுமக்கள் அனைவரின் நலனுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு அங்கப் பிரதட்சண வழிபாடு நிறைவேற்றுவது எனக்கு நிரம்பவே சந்தோஷமாக இருந்தது" என்கிறார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பக்தையான ஜெயா ஸ்ரீதர்..''பகவான் வெளிப்படையாகவே பகர்ந்துள்ளார். 'எந்த வழியிலும் பக்தர்கள் தங்களை வருத்திக்கொண்டுதான் என்னை அடைந்திட வேண்டியதில்லை' என்று கூறியுள்ளார். ஆண்டாள் நாச்சியாரோ, 'ஒவ்வொருவரும் அவர் தம் வாயாலே மனமுருகி நாராயணா… கோவிந்தா… மாதவா… என்று அழைத்தாலே போதும்' என்கிறாள். அதுவே குரு பக்தி. தெய்வ பக்தி என்று நமக்கு வழிகாட்டியுள்ளாள். பொதுவாகவே, வைணவ ஆலயங்களில் இந்த அங்கப் பிரதட்சண வழிபாடு என்பது வழக்கத்திலோ நடைமுறையிலோ இல்லை. எனினும், அந்த எழுபத்தியெட்டு வயது முதியவர் மனதில் இது தோன்றியுள்ளது. இந்த வயதிலும் அந்த எண்ணம்தான் அவருக்கு அந்த ஆன்ம பலத்தைத் தந்திருக்க வேண்டும்" என்கிறார் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாத சுவாமி திருக்கோயிலின் மிராஸ் அர்ச்சகர் சுந்தர் பட்டர்.