ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர்! அதிர்ச்சித் தகவல்!

ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர்! அதிர்ச்சித் தகவல்!
Published on

ஆப்கானிஸ்தான்னில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு குழப்பமும் கலவரமும் நிறைந்துள்ளது. அங்கு பெண்கள், அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் வேற்று நாட்டவர்கள் என பல தரப்பினருக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆப்கானில் வசித்து வரும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்து ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்சி லால் அரெண்டே என்பவர் ஆப்கான் வம்சாவளியை சேர்ந்த இந்தியர் ஆவார் இவர் அங்கு மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு வயது 50. இந்து மதத்தை சேர்ந்த இவர் நேற்று இரவு 8 மணி அளவில் தனது கடையில் ஊழியர்களுடன் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கிகளுடன் வந்த தாலிபன்கள், பன்சிலால் மற்றும் அவரின் கடை ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். பன்சிலால் கடத்தப்பட்ட நிலையில், அவருடைய கடை ஊழியர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் அவர்களை ஈவு இரக்கமின்றி கடத்தல்காரர்கள் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டது குறித்து ஆப்கனில் உள்ள சீக்கிய இந்து இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் கூறினர். இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, பன்சிலாலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடத்தப்பட்ட பன்சிலால் குடும்பத்தினர் டெல்லி அருகேயுள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கடத்தல் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com