உள்ளாட்சித் தேர்தல்: பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தல்: பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளதையடுத்து பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை முதற்கட்ட ஊராட்சித் தேர்தல் நாளை ( அக்டோபர் 6) நடைபெற உள்ளது. நாளை  முதற்கட்ட வாக்குப்பதிவும், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 9) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றோடு முடிவடைந்த நிலையில் வாக்குகுச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 9 மாவட்ட பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

பள்ளிகளில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாலும், பள்ளி  ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்பதாலும் 5, 6-ம் தேதிகள்  மற்றும் 8, 9-ம் தேதிகள் ஆகிய 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7-ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com