தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்.கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், 'கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட வேண்டும்? அதனால் பாதிப்புகள் வருமா?'போன்ற சந்தேகங்கள் நிறையவே ஏற்படுகின்றன..இதுகுறித்து, 'மங்கையர் மலர்' வாசகியர் பலரும் நம்மிடம் கேட்டு வருகிறார்கள்…எனவே, பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ் அவர்களை அணுகி, நமது கேள்விகளை முன் வைத்தோம்..பொதுவாக, கர்ப்பகாலத்தை மூன்று ட்ரைமெஸ்டர் (Trimester)காலகட்டமாகப் பிரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எந்த காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது?.கருவுற்றதிலிருந்து முதல் 12 வாரம்வரை முதல் ட்ரைமெஸ்டர். பின்னர் அடுத்து 24 வாரங்கள்வரை இரண்டாவது என்றும், 24வது வாரத்திலிருந்து 40வது வாரம் வரை மூன்றாவது என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.முதல் 12 வாரங்களில் குழந்தையின் உறுப்புகள் உருவாகும் ஆர்கனோஜெனிசிஸ் (Organogenesis)காலம். எனவே 12 வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி போடுவது சரியாக இருக்கும். ஆனால், வசிக்கும் இடத்தில் தொற்று அதிகமாகவும், வேகமாகவும் பரவியிருக்கிறது என்றால், அப்போது அவர்கள் முதலிலேயே அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்..சமீபத்திய ஒரு ஆவில், 'மற்ற பெண்களைவிட, கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதில் கோவிட் தொற்று ஏற்பட வாய்ப்பு சற்றே அதிகம்' என்ற செய்திகள் வந்ததே, உண்மையா டாக்டர்?.பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்தத் தொற்றும் ஏற்பட, வாய்ப்பு சற்று அதிகம்தான். எனவே, சென்ற வருடம் கோவிட் பரவியபோது, 'நிறைய கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவார்களோ'என்று நாங்கள் பயந்தோம். ஆச்சர்யமாக, அவ்வளவாக சென்ற வருடம் பாதிப்பு இல்லை..ஆனால், இந்த வருடம் (ஏப்ரல் 2021), திடீரென, யாரும் எதிர்பாராதவிதமாக நிறைய கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். சிக்கலான பிரச்னைகள் இருந்த தாய்மார்கள் பலரை நாம் இழக்க நேரிட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தொற்று வந்தால், அது அவர்களுக்கும் குடும்பத்திற்கும் சிக்கல் என்றுதான் சொல்ல வேண்டும்..தடுப்பூசி போடுவதால், கர்ப்பமான பெண்ணுக்கோ, அவர் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கோ இன்ஃபெக்ஷன் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?.தடுப்பூசி போடுவதின் நோக்கமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துவதற்காகத்தான். இந்த கோவிட் தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான இன்ஃபெக்ஷனும் தாய்க்கோ அல்லது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கோ நிச்சயமாக வராது. வந்தாலும், வேறு ஏதேனும் வெளிப்புறக் காரணங்களால் வருமே தவிர, தடுப்பூசி போடுவதால் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 'தடுப்பூசி போட்டால் கருச்சிதைவு ஏற்படும்' என்று சிலர் அச்சப்படுவது தவறுதானே டாக்டர்… தெளிவுபடுத்துங்கள். கோவிட் தடுப்பூசியினால் நிச்சயமாக கருச்சிதைவு ஏற்படாது..கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடும்போது, அந்தப் பாதுகாப்பு அவர்களுக்கு மட்டும்தானா? அல்லது வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் பாதுகாப்பு தருமா?.கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நாங்கள் கொடுக்கும் டெட்டனஸ், ஃப்ளூ வேக்ஸின் போன்றவற்றை 26 அல்லது 28 வாரங்களுக்கு அப்புறம்தான் கொடுக்கிறோம். ஏன் இவ்வளவு தாமதமாகப் போடுகிறோம் என்றால், அம்மாவுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தைக் கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அவையெல்லாம் கொரோனா போல் பேரிடர் நோய்கள் அல்ல. கொரோனாவைப் பொறுத்தவரை அது பேரிடர் தொற்று என்பதால், தக்க சமயத்தில் தடுப்பூசி போட்டுவிட வேண்டும். தாயின் உடலில் உருவான நோய் எதிர்ப்பு சக்தி, 26 வாரங்களுக்கு மேல் குழந்தைக்கும் கிடைக்கும்..சர்க்கரை, இருதயநோய், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடலாமா?.அதிக சர்க்கரை, இருதயநோய், அதிக ரத்தஅழுத்தம் உள்ள பெண்கள் கருவுறும்போது அதிக கவனம் தேவைப்படும். அதை High Risk Pregnancy என்போம். இவர்களுக்கு கோவிட் வந்தால் மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே, இவர்கள் கட்டாயமாக கோவிட் தடுப்பூசிபோட்டுக் கொண்டே ஆக வேண்டும்..தடுப்பூசிபோட்டுக் கொண்டதும் சிலருக்கு லேசான ஜுரம் வருகிறதல்லவா… அது வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்குமா?.பொதுவாக, எந்தத் தடுப்பூசி போட்டாலும் நம் உடம்பில் ஒரு எதிர்வினை (Reaction)இருக்கும். லேசான ஜுரமோ,உடல் வலியோ அல்லது ஊசி போட்ட இடத்தில் வலியோ இருக்கும். ஜுரம் வந்தால் அது தாக்கு மட்டும் இருக்குமே தவிர, குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது..பாலூட்டும் தாமார்கள், தடுப்பூசி போட்ட பிறகு, குழந்தைக்கு உடனே பால் கொடுக்கலாமா? அவர்களுக்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளதா டாக்டர்?.பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக கோவிட் தடுப்பூசிபோட்டுக் கொள்ளலாம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. நாங்கள் நிறைய பேருக்கு போட்டு வருகிறோம். ஊசி போட்டதும் உடனே தாப்பால் கொடுக்கலாம். தொடர்ந்தும் தரலாம். தடுப்பூசியினால் எந்த பாதிப்பும் வராது.
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்.கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், 'கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட வேண்டும்? அதனால் பாதிப்புகள் வருமா?'போன்ற சந்தேகங்கள் நிறையவே ஏற்படுகின்றன..இதுகுறித்து, 'மங்கையர் மலர்' வாசகியர் பலரும் நம்மிடம் கேட்டு வருகிறார்கள்…எனவே, பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ் அவர்களை அணுகி, நமது கேள்விகளை முன் வைத்தோம்..பொதுவாக, கர்ப்பகாலத்தை மூன்று ட்ரைமெஸ்டர் (Trimester)காலகட்டமாகப் பிரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எந்த காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது?.கருவுற்றதிலிருந்து முதல் 12 வாரம்வரை முதல் ட்ரைமெஸ்டர். பின்னர் அடுத்து 24 வாரங்கள்வரை இரண்டாவது என்றும், 24வது வாரத்திலிருந்து 40வது வாரம் வரை மூன்றாவது என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.முதல் 12 வாரங்களில் குழந்தையின் உறுப்புகள் உருவாகும் ஆர்கனோஜெனிசிஸ் (Organogenesis)காலம். எனவே 12 வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி போடுவது சரியாக இருக்கும். ஆனால், வசிக்கும் இடத்தில் தொற்று அதிகமாகவும், வேகமாகவும் பரவியிருக்கிறது என்றால், அப்போது அவர்கள் முதலிலேயே அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்..சமீபத்திய ஒரு ஆவில், 'மற்ற பெண்களைவிட, கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதில் கோவிட் தொற்று ஏற்பட வாய்ப்பு சற்றே அதிகம்' என்ற செய்திகள் வந்ததே, உண்மையா டாக்டர்?.பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்தத் தொற்றும் ஏற்பட, வாய்ப்பு சற்று அதிகம்தான். எனவே, சென்ற வருடம் கோவிட் பரவியபோது, 'நிறைய கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவார்களோ'என்று நாங்கள் பயந்தோம். ஆச்சர்யமாக, அவ்வளவாக சென்ற வருடம் பாதிப்பு இல்லை..ஆனால், இந்த வருடம் (ஏப்ரல் 2021), திடீரென, யாரும் எதிர்பாராதவிதமாக நிறைய கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். சிக்கலான பிரச்னைகள் இருந்த தாய்மார்கள் பலரை நாம் இழக்க நேரிட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தொற்று வந்தால், அது அவர்களுக்கும் குடும்பத்திற்கும் சிக்கல் என்றுதான் சொல்ல வேண்டும்..தடுப்பூசி போடுவதால், கர்ப்பமான பெண்ணுக்கோ, அவர் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கோ இன்ஃபெக்ஷன் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?.தடுப்பூசி போடுவதின் நோக்கமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துவதற்காகத்தான். இந்த கோவிட் தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான இன்ஃபெக்ஷனும் தாய்க்கோ அல்லது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கோ நிச்சயமாக வராது. வந்தாலும், வேறு ஏதேனும் வெளிப்புறக் காரணங்களால் வருமே தவிர, தடுப்பூசி போடுவதால் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 'தடுப்பூசி போட்டால் கருச்சிதைவு ஏற்படும்' என்று சிலர் அச்சப்படுவது தவறுதானே டாக்டர்… தெளிவுபடுத்துங்கள். கோவிட் தடுப்பூசியினால் நிச்சயமாக கருச்சிதைவு ஏற்படாது..கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடும்போது, அந்தப் பாதுகாப்பு அவர்களுக்கு மட்டும்தானா? அல்லது வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் பாதுகாப்பு தருமா?.கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நாங்கள் கொடுக்கும் டெட்டனஸ், ஃப்ளூ வேக்ஸின் போன்றவற்றை 26 அல்லது 28 வாரங்களுக்கு அப்புறம்தான் கொடுக்கிறோம். ஏன் இவ்வளவு தாமதமாகப் போடுகிறோம் என்றால், அம்மாவுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தைக் கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அவையெல்லாம் கொரோனா போல் பேரிடர் நோய்கள் அல்ல. கொரோனாவைப் பொறுத்தவரை அது பேரிடர் தொற்று என்பதால், தக்க சமயத்தில் தடுப்பூசி போட்டுவிட வேண்டும். தாயின் உடலில் உருவான நோய் எதிர்ப்பு சக்தி, 26 வாரங்களுக்கு மேல் குழந்தைக்கும் கிடைக்கும்..சர்க்கரை, இருதயநோய், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடலாமா?.அதிக சர்க்கரை, இருதயநோய், அதிக ரத்தஅழுத்தம் உள்ள பெண்கள் கருவுறும்போது அதிக கவனம் தேவைப்படும். அதை High Risk Pregnancy என்போம். இவர்களுக்கு கோவிட் வந்தால் மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே, இவர்கள் கட்டாயமாக கோவிட் தடுப்பூசிபோட்டுக் கொண்டே ஆக வேண்டும்..தடுப்பூசிபோட்டுக் கொண்டதும் சிலருக்கு லேசான ஜுரம் வருகிறதல்லவா… அது வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்குமா?.பொதுவாக, எந்தத் தடுப்பூசி போட்டாலும் நம் உடம்பில் ஒரு எதிர்வினை (Reaction)இருக்கும். லேசான ஜுரமோ,உடல் வலியோ அல்லது ஊசி போட்ட இடத்தில் வலியோ இருக்கும். ஜுரம் வந்தால் அது தாக்கு மட்டும் இருக்குமே தவிர, குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது..பாலூட்டும் தாமார்கள், தடுப்பூசி போட்ட பிறகு, குழந்தைக்கு உடனே பால் கொடுக்கலாமா? அவர்களுக்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளதா டாக்டர்?.பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக கோவிட் தடுப்பூசிபோட்டுக் கொள்ளலாம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. நாங்கள் நிறைய பேருக்கு போட்டு வருகிறோம். ஊசி போட்டதும் உடனே தாப்பால் கொடுக்கலாம். தொடர்ந்தும் தரலாம். தடுப்பூசியினால் எந்த பாதிப்பும் வராது.