வாசகர் ஜோக்ஸ்ஓவியம் ரஜினி1. "கமலம், நீ சிவப்புப் புடைவை கட்டிக்கிட்டு தலைநிறைய மல்லிகைப் பூவோடு ஜல் ஜல்னு கொலுசு சத்தத்தோடு நடந்து வரும்போது எப்படி இருக்கே தெரியுமா?""சென்னாத்தானே தெரியும்?""வேண்டாம் சொன்னா நீ ரொம்ப பயப்படுவே…"– வி. ரேவதி, தஞ்சை . 2."புலவருக்கு ஏன் சவுக்கடி விழுகிறது?""மன்னரைப் பார்த்துப் புகழ்ந்து பாடுவதற்குப் பதில் ஒப்பாரி பாடல் பாடி விட்டாராம்."– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் . 3. "படத்தின் க்ளைமேக்ஸ் நம்பும்படியாக இல்லையே…""அப்படியா?""ஆமாம். கடைசியில் பேய் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குதுன்னு காட்றாங்க."– ஆர்.யோகமித்ரா, சென்னை . 4. "தலைவர் கட்சி மாறப்போறார்னு எப்படிச் சொல்றே?""இப்பல்லாம் பேசும்போது கட்சியின் நலன் கருதி, கட்சியின் நலன் கருதின்னு அடிக்கடி பேசுறாரே…"– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம் . 5. "மதியம் ஒரு மணிக்கு டி.வி. சீரியல் பார்த்தியா சரசா?""ஆமா ஏன் கேக்கறே?""இல்ல நீ கேவிக் கேவி அழுத மாதிரி சத்தம் கேட்டிச்சே…"– வி. ரேவதி, தஞ்சை . 6."மடைதிறந்த வெள்ளம்போல் பேசுகிறாரே தலைவர் ஏன்?""கடை மூடுவதற்குள் பேச்சை முடிக்கணும்னு கூட்டத்துக்கு கூட்டிக் கிட்டு வந்தவங்க சொல்லிட்டாங்களாம்."– சி. ஸ்ரீரங்கம் திருவெறும்பூர்
வாசகர் ஜோக்ஸ்ஓவியம் ரஜினி1. "கமலம், நீ சிவப்புப் புடைவை கட்டிக்கிட்டு தலைநிறைய மல்லிகைப் பூவோடு ஜல் ஜல்னு கொலுசு சத்தத்தோடு நடந்து வரும்போது எப்படி இருக்கே தெரியுமா?""சென்னாத்தானே தெரியும்?""வேண்டாம் சொன்னா நீ ரொம்ப பயப்படுவே…"– வி. ரேவதி, தஞ்சை . 2."புலவருக்கு ஏன் சவுக்கடி விழுகிறது?""மன்னரைப் பார்த்துப் புகழ்ந்து பாடுவதற்குப் பதில் ஒப்பாரி பாடல் பாடி விட்டாராம்."– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் . 3. "படத்தின் க்ளைமேக்ஸ் நம்பும்படியாக இல்லையே…""அப்படியா?""ஆமாம். கடைசியில் பேய் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குதுன்னு காட்றாங்க."– ஆர்.யோகமித்ரா, சென்னை . 4. "தலைவர் கட்சி மாறப்போறார்னு எப்படிச் சொல்றே?""இப்பல்லாம் பேசும்போது கட்சியின் நலன் கருதி, கட்சியின் நலன் கருதின்னு அடிக்கடி பேசுறாரே…"– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம் . 5. "மதியம் ஒரு மணிக்கு டி.வி. சீரியல் பார்த்தியா சரசா?""ஆமா ஏன் கேக்கறே?""இல்ல நீ கேவிக் கேவி அழுத மாதிரி சத்தம் கேட்டிச்சே…"– வி. ரேவதி, தஞ்சை . 6."மடைதிறந்த வெள்ளம்போல் பேசுகிறாரே தலைவர் ஏன்?""கடை மூடுவதற்குள் பேச்சை முடிக்கணும்னு கூட்டத்துக்கு கூட்டிக் கிட்டு வந்தவங்க சொல்லிட்டாங்களாம்."– சி. ஸ்ரீரங்கம் திருவெறும்பூர்