பத்ர பெருமை.– ஆர்.வி.ராமானுஜம்.திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கொடுக்கப்படும்இலை விபூதி விசேஷமானது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது போல, வேறு எந்த கோயிலிலும் இப்படி வழங்குவது இல்லை..திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரையில் நின்றார் முருகப்பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின. எனவே, இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன. தவிர, பன்னீர் இலையில் காணப்படும் பன்னிரெண்டு நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுகின்றன..பன்னீர் இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. ஆதிசங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக் கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது..முருகன், ஒரு பக்கத்திற்கு ஆறு கரங்கள் என பன்னிரு கரங்கள் கொண்டவர். அதுபோலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பன்னிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது, 'பன்னீர் செல்வம்' என்று பக்தர்களால் வழங்கப்படுகிறது..அபிநவகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலை நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோயிலாகச் சென்று, இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியிடம் வந்து மனமுருக வேண்டினார்..அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார்.சில நாட்களில் அவரைத் தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தன. அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோயிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடியுள்ளார்..'சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்' என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்..தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும். ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்கு பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்..திருசெந்தூர் செல்பவர்கள் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருச்செந்தூரில் முருகன் சன்னிதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில்தான் தருவார்கள். 'பன்னிரு இலை' என்ற பெயரே காலப்போக்கில் மருவி, பன்னீர் இலை என்று கூறப்படுகிறது..பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருகப் பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும். திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக்கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும். பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி, வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள்..ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வேண்டி பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து, நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு, மாடுகளைச் செலுத்துகிறார்கள்..'சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக்குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக, இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி அதில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கூலியாட்கள் மெய் சிலிர்த்தனர்' என்கிறது கோயில் வரலாறு..திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில், கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார். 'என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்' என்று கூறி, இலை விபூதியைக் கையில் கொடுத்து விட்டு மறைந்தாராம். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இது பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
பத்ர பெருமை.– ஆர்.வி.ராமானுஜம்.திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கொடுக்கப்படும்இலை விபூதி விசேஷமானது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது போல, வேறு எந்த கோயிலிலும் இப்படி வழங்குவது இல்லை..திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரையில் நின்றார் முருகப்பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின. எனவே, இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன. தவிர, பன்னீர் இலையில் காணப்படும் பன்னிரெண்டு நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுகின்றன..பன்னீர் இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. ஆதிசங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக் கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது..முருகன், ஒரு பக்கத்திற்கு ஆறு கரங்கள் என பன்னிரு கரங்கள் கொண்டவர். அதுபோலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பன்னிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது, 'பன்னீர் செல்வம்' என்று பக்தர்களால் வழங்கப்படுகிறது..அபிநவகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலை நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோயிலாகச் சென்று, இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியிடம் வந்து மனமுருக வேண்டினார்..அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார்.சில நாட்களில் அவரைத் தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தன. அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோயிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடியுள்ளார்..'சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்' என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்..தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும். ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்கு பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்..திருசெந்தூர் செல்பவர்கள் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருச்செந்தூரில் முருகன் சன்னிதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில்தான் தருவார்கள். 'பன்னிரு இலை' என்ற பெயரே காலப்போக்கில் மருவி, பன்னீர் இலை என்று கூறப்படுகிறது..பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருகப் பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும். திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக்கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும். பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி, வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள்..ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வேண்டி பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து, நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு, மாடுகளைச் செலுத்துகிறார்கள்..'சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக்குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக, இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி அதில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கூலியாட்கள் மெய் சிலிர்த்தனர்' என்கிறது கோயில் வரலாறு..திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில், கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார். 'என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்' என்று கூறி, இலை விபூதியைக் கையில் கொடுத்து விட்டு மறைந்தாராம். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இது பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.