சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை அதிகரிப்பு?

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை அதிகரிப்பு?

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

கொரோனா 2-ம் அலை தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பரவிய நிலையில் அரசின் தீவிர முயற்சியால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த மே மாதம் 36 ஆயிரமாக இருந்த தினசரி தொற்றின் எண்ணிக்கை தற்போது 1,600-ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் 22 பேர். 1,512 பேர் குணமடைந்து வீடு திரும்பியோர் 1,512 பேர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 170-ஆக இருந்த தினசரி பாதிப்பு நேற்று 197-ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் ஒருவர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சென்னையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com