சிறப்புக் கட்டுரைஆதித்யா.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் ராணுவங்களை எதிர்த்துப் போராடி இன்று ஆப்கானிஸ்தானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாலிபான்கள்தான் இன்று உலகிலேயே பணக்காரத் தீவிரவாத இயக்கம். தாலிபான்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? தாலிபான்களின் நிதிநிலைமை என்ன?.தாலிபான்கள் 1996லிருந்து 2001வரை ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்தார்கள். இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் பிரச்னை நடந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபான்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக இந்தக் குழுவின் ஆதிக்கமும் ராணுவ பலமும் அதிகரித்திருக்கிறது. 2021ல் இவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை. பத்து வருடங்களுக்கு முன்பு தாலிபானில் 30,000 பேர் மட்டுமே இருந்ததாக அமெரிக்கா கணித்திருந்தது..இந்த அளவுக்குப் பிரம்மாண்டமான குழுவை வைத்துக்கொண்டு கிளர்ச்சி செய்வதற்கு இவர் களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது உலகை ஆச்சர்யப்படுத்தும் கேள்வி..2011 முதல் இவர்களின் ஆண்டு வருமானம் 400 மில்லியன் டாலர்களாக (சுமார் 3 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) இருக்கிறது என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. பி.பி.சி. நிறுவனம் தனியாகத் தங்கள் தொடர்புகள் மூலம் ஆராய்ந்ததில், 2018க்குப் பிறகு இது வருடத்துக்கு 1.5 பில்லியன் டாலர் (சுமார் 11 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) ஆக உயர்ந்திருக்கலாம் எனக் கணித்திருக்கிறது..எங்கிருந்து வருகிறது.இவ்வளவு பணம்?.பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனம் இது தொடர்பாக நீண்ட ஆய்வுகள் செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டு நன்கொடைகள், போதைப் பொருள் வர்த்தகம், கடுமையான வரி விதிப்பு என்ற மூன்றும் இவர்களது வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது..1. வெளிநாட்டு நன்கொடைகள்.பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து தாலிபான்களுக்கு நிதி தருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அந்த நாடுகளின் அதிகாரிகள், அதைத் தொடர்ந்து மறுக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் தனிப்பட்ட முறையில் பெருமளவில் நிதி அளிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது..எவ்வளவு பணம் வருகிறது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாவிட்டாலும் இந்த நிதி உதவி தாலிபானின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வருடத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3,700 கோடி இந்திய ரூபாய்) வரை இருக்கலாம். இவை பல வருடங்களாகவே இருந்துவரும் நட்புறவுகள். வெளிநாடுகள், குறிப்பாக, வளைகுடா நாடுகளிலிருந்து 2008ம் ஆண்டு மட்டும் தாலிபானுக்கு 106 மில்லியன் டாலர்கள் வந்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது..2. போதைப் பொருகள் தரும்.பண போதை.உலகிலேயே அதிக அளவில் அபின் தயாரிக்கும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இந்த அபின் சுத்திகரிக்கப்பட்டு ஹெராயினாக மாற்றப் படுகிறது. வருடத்துக்கு 1.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை ஏற்றுமதி வருமானம் வரும் என்பதால் இது ஒரு பெரிய தொழில்தான்..உலகில் உள்ள பெரும்பாலான ஹெராயின் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. (ஒரு பில்லியன் என்பது இந்திய ரூபாயில் சுமார் 7,500 கோடி) இந்த ஒபியம் சாகுபடி ஆஃப்கானில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது..தங்கள் கிளர்ச்சிக்கான நிதியைத் திரட்ட உதவும் இந்த வர்த்தகம் தங்கள் இன மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகிறது என்பதில் தாலிபான்களுக்குப் பெருமை..போதைப்பொருள் வர்த்தகம் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள். இதிலிருந்து தாலிபான்களுக்கு வருடந்தோறும் 100 முதல் 400 மில்லியன் டாலர்கள் வருமானம் வருகிறது. அதாவது தாலிபான் களின் ஆண்டு வருமானத்தில் 60% போதைப் பொருள் வர்த்தகத்திலிருந்துதான் வருகிறது..ஆனால் தங்களுக்கும் போதைப்பொருளுக்கும் தொடர்பில்லை எனச்சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார்கள். 2000ல் ஆட்சியில் இருந்தபோது ஒபியம் (அபின்) பயிரிடுவதையே தடை செய்திருந்ததைப் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டவர்கள். இன்று இந்த வசூலை கவனிக்கத் தனி அதிகாரிகளை நியமித் திருக்கிறார்கள்..மனம் போல் வரி விதிப்பு.அபின் ஏற்றுமதியில் கிடைக்கும் பணத்துடன் இதைப் பயிரிடும் விவசாயிகளிடமிருந்து 10% வரி, அபினை ஹெராயினாக மாற்றும் மையங்களிடமிருந்தும் 20% வரி, தாலிபான்களின் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இதைக் கடத்துபவர்களிடமிருந்தும் லஞ்சம் எனப் பணம் குவிகிறது..அபின் வர்த்தகம், அநியாய வரி வசூல்கள் தாண்டியும் பல இடங்களில் தாலிபான்களுக்கு வருமானம் வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த பிறகு, நாட்டின் எல்லா வர்த்தகப் பாதைகளும் இவர்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டன..எரிபொருள், கட்டுமானப் பொருள் உட்பட பல சரக்குகளைத் தங்கள் கட்டுப்பாடு உள்ள இடங்களைத் தாண்டி எடுத்துச் செல்லும்போது டோல் வரி தரவேண்டும் என்று தாலிபான்கள் எச்சரித்தனர். வரி என்றால் அந்தந்த வட்டாரத் தலைமையின் இஷ்டம் போல். குறைப்பதற்கு லஞ்சமும் உண்டு..இப்போது எல்லைகளும் இவர்கள் வசம்தான் இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி, இறக்குமதியி லிருந்து இப்போது இன்னும் அதிக வருமானம் வர வாய்ப்பிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களை அழிக்க வந்த அமெரிக்க மற்றும் சர்வதேசத் துருப்புகள் கொண்டுவந்த ராணுவத் தளவாடங்களுக்கும் உணவுப் பொருட்களுக்குமே இவர்கள் சுங்கவரி வசூலித்திருக்கிறார்கள்..இவர்களுக்கு வருமானம் நியாயமான வழியில் தான் வருகிறதா என்பது குறித்துக் கவலை கிடையாது. ஒவ்வொரு முறையும் ஒரு நகரத்தைத் தாக்கி வீழ்த்தும்போது அங்குள்ள அரசு கஜானா, வங்கிகளில் கைப்பற்றப்படும் பணமும் இயக்கத்துக்கு வருமானம்தான். கைப்பற்ற கட்டடங்களின் வாடகையும் இயக்கத்துக்குத்தான்..இன்று போர்க்களமாகவும் தீவிரவாதிகளின் கூடாரமாகவும் நாம் அறிந்த ஆப்கானிஸ்தானில் பல அரிய கனிமங்களின் சுரங்கங்கள் இருக் கின்றன. ஓயாத யுத்தங்களினால் இந்தக் கனிமச் சுரங்கங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இதில் கிடைக்கும் சில கற்கள் உலக மார்க்கெட்டில் மிக விலை அதிகம் பெறக்கூடியது. அதுவும் ஆடம்பர நகைகளுக்குப் பயன்படும் லபிஸ் என்ற கல் மட்டுமே ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கிடைக்கிறது..இந்தச் சுரங்கங்கள் இப்போது எந்த அனுமதியும் இல்லாமல் சில தனியார் வசம் இருக்கிறது. தேசத்தில் சண்டை நடந்தால் என்ன நம் வியா பாரம் நமக்கு என்று இந்த பிசினசை எந்த அனுமதியும் இல்லாமல் கள்ளக்கடத்தலாக நடத்திக்கொண்டிருக்கும் ஒரு பெரிய கும்பலிடம் நல்ல தட்சணையை வாங்கிக்கொண்டு தாலி பான்கள் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றனர்..இப்படி நியாயமற்ற வழிகளில் பணம் கொட்டிக் கொண்டிருப்பதால்தான் இந்தப் பயங்கரவாத இயக்கத்தை வலிமை மிகுந்த அமெரிக்காவினால்கூட சமாளிக்க முடிய வில்லை..போதை மருந்துகளை, வஸ்துக்களை மருந்துக் காகக்கூட பயன்படுத்தக்கூடாது என்கிறது இஸ்லாம். இதைச் சுட்டிக்காட்டிக் கேட்டபோது ஒரு தாலிபான் தலைவர் சொன்னது, "மார்க்கத் தில் தடை செய்யப்பட்டவற்றை நிர்ப்பந்த நிலையில் ஒருவர் செய்தால் அது குற்றமாகாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும் என்று சொல்லப்பட்டிருக்கும் வசனத் தையும் எங்கள் நாட்டைப் புனிதப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது எங்களுக்கு இருக்கிறது" என்கிறார்..'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்ற சொல் லாடலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
சிறப்புக் கட்டுரைஆதித்யா.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் ராணுவங்களை எதிர்த்துப் போராடி இன்று ஆப்கானிஸ்தானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாலிபான்கள்தான் இன்று உலகிலேயே பணக்காரத் தீவிரவாத இயக்கம். தாலிபான்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? தாலிபான்களின் நிதிநிலைமை என்ன?.தாலிபான்கள் 1996லிருந்து 2001வரை ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்தார்கள். இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் பிரச்னை நடந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபான்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக இந்தக் குழுவின் ஆதிக்கமும் ராணுவ பலமும் அதிகரித்திருக்கிறது. 2021ல் இவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை. பத்து வருடங்களுக்கு முன்பு தாலிபானில் 30,000 பேர் மட்டுமே இருந்ததாக அமெரிக்கா கணித்திருந்தது..இந்த அளவுக்குப் பிரம்மாண்டமான குழுவை வைத்துக்கொண்டு கிளர்ச்சி செய்வதற்கு இவர் களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது உலகை ஆச்சர்யப்படுத்தும் கேள்வி..2011 முதல் இவர்களின் ஆண்டு வருமானம் 400 மில்லியன் டாலர்களாக (சுமார் 3 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) இருக்கிறது என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. பி.பி.சி. நிறுவனம் தனியாகத் தங்கள் தொடர்புகள் மூலம் ஆராய்ந்ததில், 2018க்குப் பிறகு இது வருடத்துக்கு 1.5 பில்லியன் டாலர் (சுமார் 11 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) ஆக உயர்ந்திருக்கலாம் எனக் கணித்திருக்கிறது..எங்கிருந்து வருகிறது.இவ்வளவு பணம்?.பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனம் இது தொடர்பாக நீண்ட ஆய்வுகள் செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டு நன்கொடைகள், போதைப் பொருள் வர்த்தகம், கடுமையான வரி விதிப்பு என்ற மூன்றும் இவர்களது வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது..1. வெளிநாட்டு நன்கொடைகள்.பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து தாலிபான்களுக்கு நிதி தருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அந்த நாடுகளின் அதிகாரிகள், அதைத் தொடர்ந்து மறுக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் தனிப்பட்ட முறையில் பெருமளவில் நிதி அளிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது..எவ்வளவு பணம் வருகிறது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாவிட்டாலும் இந்த நிதி உதவி தாலிபானின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வருடத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3,700 கோடி இந்திய ரூபாய்) வரை இருக்கலாம். இவை பல வருடங்களாகவே இருந்துவரும் நட்புறவுகள். வெளிநாடுகள், குறிப்பாக, வளைகுடா நாடுகளிலிருந்து 2008ம் ஆண்டு மட்டும் தாலிபானுக்கு 106 மில்லியன் டாலர்கள் வந்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது..2. போதைப் பொருகள் தரும்.பண போதை.உலகிலேயே அதிக அளவில் அபின் தயாரிக்கும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இந்த அபின் சுத்திகரிக்கப்பட்டு ஹெராயினாக மாற்றப் படுகிறது. வருடத்துக்கு 1.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை ஏற்றுமதி வருமானம் வரும் என்பதால் இது ஒரு பெரிய தொழில்தான்..உலகில் உள்ள பெரும்பாலான ஹெராயின் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. (ஒரு பில்லியன் என்பது இந்திய ரூபாயில் சுமார் 7,500 கோடி) இந்த ஒபியம் சாகுபடி ஆஃப்கானில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது..தங்கள் கிளர்ச்சிக்கான நிதியைத் திரட்ட உதவும் இந்த வர்த்தகம் தங்கள் இன மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகிறது என்பதில் தாலிபான்களுக்குப் பெருமை..போதைப்பொருள் வர்த்தகம் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள். இதிலிருந்து தாலிபான்களுக்கு வருடந்தோறும் 100 முதல் 400 மில்லியன் டாலர்கள் வருமானம் வருகிறது. அதாவது தாலிபான் களின் ஆண்டு வருமானத்தில் 60% போதைப் பொருள் வர்த்தகத்திலிருந்துதான் வருகிறது..ஆனால் தங்களுக்கும் போதைப்பொருளுக்கும் தொடர்பில்லை எனச்சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார்கள். 2000ல் ஆட்சியில் இருந்தபோது ஒபியம் (அபின்) பயிரிடுவதையே தடை செய்திருந்ததைப் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டவர்கள். இன்று இந்த வசூலை கவனிக்கத் தனி அதிகாரிகளை நியமித் திருக்கிறார்கள்..மனம் போல் வரி விதிப்பு.அபின் ஏற்றுமதியில் கிடைக்கும் பணத்துடன் இதைப் பயிரிடும் விவசாயிகளிடமிருந்து 10% வரி, அபினை ஹெராயினாக மாற்றும் மையங்களிடமிருந்தும் 20% வரி, தாலிபான்களின் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இதைக் கடத்துபவர்களிடமிருந்தும் லஞ்சம் எனப் பணம் குவிகிறது..அபின் வர்த்தகம், அநியாய வரி வசூல்கள் தாண்டியும் பல இடங்களில் தாலிபான்களுக்கு வருமானம் வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த பிறகு, நாட்டின் எல்லா வர்த்தகப் பாதைகளும் இவர்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டன..எரிபொருள், கட்டுமானப் பொருள் உட்பட பல சரக்குகளைத் தங்கள் கட்டுப்பாடு உள்ள இடங்களைத் தாண்டி எடுத்துச் செல்லும்போது டோல் வரி தரவேண்டும் என்று தாலிபான்கள் எச்சரித்தனர். வரி என்றால் அந்தந்த வட்டாரத் தலைமையின் இஷ்டம் போல். குறைப்பதற்கு லஞ்சமும் உண்டு..இப்போது எல்லைகளும் இவர்கள் வசம்தான் இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி, இறக்குமதியி லிருந்து இப்போது இன்னும் அதிக வருமானம் வர வாய்ப்பிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களை அழிக்க வந்த அமெரிக்க மற்றும் சர்வதேசத் துருப்புகள் கொண்டுவந்த ராணுவத் தளவாடங்களுக்கும் உணவுப் பொருட்களுக்குமே இவர்கள் சுங்கவரி வசூலித்திருக்கிறார்கள்..இவர்களுக்கு வருமானம் நியாயமான வழியில் தான் வருகிறதா என்பது குறித்துக் கவலை கிடையாது. ஒவ்வொரு முறையும் ஒரு நகரத்தைத் தாக்கி வீழ்த்தும்போது அங்குள்ள அரசு கஜானா, வங்கிகளில் கைப்பற்றப்படும் பணமும் இயக்கத்துக்கு வருமானம்தான். கைப்பற்ற கட்டடங்களின் வாடகையும் இயக்கத்துக்குத்தான்..இன்று போர்க்களமாகவும் தீவிரவாதிகளின் கூடாரமாகவும் நாம் அறிந்த ஆப்கானிஸ்தானில் பல அரிய கனிமங்களின் சுரங்கங்கள் இருக் கின்றன. ஓயாத யுத்தங்களினால் இந்தக் கனிமச் சுரங்கங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இதில் கிடைக்கும் சில கற்கள் உலக மார்க்கெட்டில் மிக விலை அதிகம் பெறக்கூடியது. அதுவும் ஆடம்பர நகைகளுக்குப் பயன்படும் லபிஸ் என்ற கல் மட்டுமே ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கிடைக்கிறது..இந்தச் சுரங்கங்கள் இப்போது எந்த அனுமதியும் இல்லாமல் சில தனியார் வசம் இருக்கிறது. தேசத்தில் சண்டை நடந்தால் என்ன நம் வியா பாரம் நமக்கு என்று இந்த பிசினசை எந்த அனுமதியும் இல்லாமல் கள்ளக்கடத்தலாக நடத்திக்கொண்டிருக்கும் ஒரு பெரிய கும்பலிடம் நல்ல தட்சணையை வாங்கிக்கொண்டு தாலி பான்கள் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றனர்..இப்படி நியாயமற்ற வழிகளில் பணம் கொட்டிக் கொண்டிருப்பதால்தான் இந்தப் பயங்கரவாத இயக்கத்தை வலிமை மிகுந்த அமெரிக்காவினால்கூட சமாளிக்க முடிய வில்லை..போதை மருந்துகளை, வஸ்துக்களை மருந்துக் காகக்கூட பயன்படுத்தக்கூடாது என்கிறது இஸ்லாம். இதைச் சுட்டிக்காட்டிக் கேட்டபோது ஒரு தாலிபான் தலைவர் சொன்னது, "மார்க்கத் தில் தடை செய்யப்பட்டவற்றை நிர்ப்பந்த நிலையில் ஒருவர் செய்தால் அது குற்றமாகாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும் என்று சொல்லப்பட்டிருக்கும் வசனத் தையும் எங்கள் நாட்டைப் புனிதப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது எங்களுக்கு இருக்கிறது" என்கிறார்..'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்ற சொல் லாடலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.