வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன.
இந்த தீவில் வருடாவருட பாரம்பரிய திருவிழாவை ஃபேரோ தீவு மக்கள் கொண்டாடுவது வழக்கம். அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக படகுகள் மூலம் கடலுக்குச் சென்று ஒரே நாளீல் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கடற்கடவுளுக்கு பலி கொடுத்தனர். இதனால் அக்கடற்கரைப் பகுதி முழுவதும், ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
இப்படி ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.