பெட்ரோல் – டீசலுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு: வருகிற 17-ம் தேதி அறிவிப்பு?

பெட்ரோல் – டீசலுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு: வருகிற 17-ம் தேதி அறிவிப்பு?

இந்தியாவில் பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை சரக்கு, சேவை வரி நடைமுறையின் கீழ் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வருகிற வெள்ளிக்கிழமை (செப்டம்பர் -17) நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை விவாதங்கள் எழுந்தன. அதேசமயம், சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதனால் தங்களின் வருவாய் குறையும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தற்போது பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து விலையேற்றம் அடைந்து வருவதால் பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி நடைமுறைக்குள் பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்படும் பட்சத்தில், நுகர்வு விலையிலும், அரசின் வருவாயிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெட்ரோலிய பொருட்கள் மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி விதிப்புகள் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை என்ற வகையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பெட்ரோலிய பொருட்களின் விலையில் பாதிக்கும் மேலான தொகை வரி மூலமே பெறப்படுகிறது. அதனால், ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். வரி விகிதமும் முறைப்படுத்தப்படும். இதனால் கணிசமாக நுகர்வோருக்கான விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com