மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய பிரதேச எம்.பி. பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இப்பதவிக்கான தேர்தல் .
அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன் வேட்பாளரை நிறுத்தாததால், எல்.முருகன் போட்டியின்றி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது..
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இம்மாதம் 27-ம் தேதி என்பதால், அதற்கு பிறகு எல்.முருகன் போட்டியின்றி தேர்வு பெறுவதை தேர்தல் கமிஷன் முறைப்படி அறிவிக்கும் என தகவல் கூறப்படுகிறது.