வேர்கடலை – 200கி
ஆளி விதைப்பொடி – 20 கி
நாட்டுச் சர்க்கரை – 100கி
சுக்குப்பொடி – 5 கி
ஏலக்காய் பொடி – சிறிது
செய்முறை:
வேர்க்கடலையை வறுத்து தோல் சுத்தம் செய்து பொடித்து வைக்கவும். ஆளி விதையை வறுத்து பொடிக்கவும். வேர்க்கடலைப் பொடி, ஆளி விதைப்பொடி, நாட்டு சர்க்கரை, சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி ஆகிய எல்லாவற்றையும் மிக்ஸில் போட்டு ஒரு சுத்து சுத்தி எடுக்கவும். பின்னர் அதை சிறு லட்டுகளாக பிடிக்கவும்.
பல் வளராத பாப்பாமுதல் பல் போன தாத்தாவரை இதனை விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம். இரு வாரம் வரை கெட்டு போகாது. ஆளி விதைப்பொடி சேர்க்காமலும் செய்யலாம்.