ஸ்பெயினில் வெடித்துச் சிதறி வரும் எரிமலையிலிருந்து வெளியேறும் நெருப்புக்குழம்பினால் 100-க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாயின.
ஸ்பெயின் நாட்டில் லா பால்மா தீவில் உள்ள கும்ரே வியாஜா என்ற எரிமலை சில நாள்களுக்கு முன் வெடித்துக் கிளம்பி, நெருப்பு குழம்பை உமிழ்ந்து மருகிறட்து. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மலையடிவார கிராமங்களிலிருந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த உக்கிரமான எரிமலையின் நெருப்புக்குழம்பினால் சுற்று வட்டாரத்திலுள்ள 100-க்கும் அதிகமான வீடுகளும் வணிக நிறுவனங்களும் தீக்கிரையாகி சாம்பலாயின. இந்த எரிமலையின் நெரும்புக்குழம்புகள் இரவு நேரத்தில் சிவப்பு வண்ணத்தில் கொதித்து வெளியேறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.