-ஹேரம்ப கணபதி.முத்கல புராணம் விவரிக்கும் 32 வகையான கணபதி திருமூர்த்தங்களில் ஒன்று, ஸ்ரீ ஹேரம்ப கணபதி. ஐந்து முகங்களுடன் திகழ்வதால் இவருக்கு, 'ஸ்ரீ பஞ்சமுக விநாயகர்'என்ற சிறப்பும் உண்டு..'அடியவர்களுக்கு நன்மை பயக்கும் அனைத்தும் தம்மிடம் உண்டு' என்பதை உணர்த்தும் வகையில் அங்குசம், கதாயுதம், கரும்பு வில், சங்கு, சக்கரம், பாசம், தாமரை மலர், நெற்கதிர், உடைந்த தந்தம், ரத்தினக் கலசம் ஆகியவற்றை ஏந்தியபடி, பத்து திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார் ஹேரம்ப கணபதி..எல்லோருக்கும் மேலான கடவுளாகத் திகழ்வதால், மிருகங்களில் தலைசிறந்த சிம்மத்தை (சிங்கத்தை) இவர் தமது வாகனமாகக் கொண்டுள்ளார். அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீ ஹேரம்ப கணபதியின் திருவடி களை நேபாளம் மற்றும் வங்காளத்தில் நிறைய தரிசிக்கலாம்..தமிழகத்தில் நாகப்பட் டினம், திருவானைக்காவல் மற்றும் திருவொற்றியூர் ஆகிய தலங்களில் ஸ்ரீ ஹேரம்ப கணபதியை தரிசிக்க முடியும்!.– சௌமியா, பழைய பல்லாவரம்.விநாயகர் விரதம்.விநாயகர் அருளைப் பெற பதினொரு வகையான விரதங்களை நமது முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கிறார்கள். அவற்றைப்பற்றிக் காண்போம்..வெள்ளி விரதம் : வைகாசி மாத, வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஒரு வருடகாலம் மேற்கொள்வது இந்த விரதம். இதனால் குடும்பத்தில் வளம் கொழிக்கும்..செவ்வாய் விரதம் : ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஓராண்டுவரை செய்வது இந்த விரதம். இதனால் செவ்வாய் தோஷ சிக்கல்கள் நீங்கும்..சித்தி விநாயக விரதம் : புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் விரதம் இருப்பது. எதிரிளை அடக்கும் விரதம் இது..சதுர்த்தி விரதம் : பிரதிமாதம் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதமிது. இதனால் காரியத்தடைகள் நீங்கும்..தூர்வா கணபதி விரதம் : கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்திச் செய்வது இந்த விரதம். இதனால் பிள்ளைப்பேறு கிடைக்கும்..குமார சஷ்டி விரதம் : கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டிவரை இருபத்தியொரு தினங்கள் மேற்கொள்வது இந்த விரதம். குடும்ப நலனுக்காகச் செய்யப்படுகின்ற இந்த விரதத்துக்கு, 'பிள்ளையார் நோன்பு'என்ற பெயரும் உண்டு..தூர்வாஷ்டமி விரதம் : புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, விநாயகரை ஓர் ஆண்டுகாலம் அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது இந்த விரதம். இதனால் உடல் வலிமை பெறும்..விநாயக நவராத்திரி : ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜை செய்வது விநாயக நவராத்திரி..வெள்ளிப் பிள்ளையார் விரதம் : ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதமிருப்பது. பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம், நினைத்ததை நிறைவேற்றித்தரும் அற்புதம் வாந்தது..அங்காரக சதுர்த்தி விரதம் : 'ஏழை ஒருவர், மாசி தேபிறை செவ்வாயில் தொடங்கி, ஒரு வருடம் விநாயகரை பூஜை செய்து வந்தால், அவர் பலம் பெறுவார்'என்று விநாயகர் வழிபாட்டு முறைகள் சொல்கின்றன. இந்த விரதத்தை மேற்கொண்ட அங்காரகனுக்கு நவக்கிரகங்களில் ஒருவராகும் தகுதியைத் தந்தார் விநாயகர். விநாயகரை முழு மனதோடு போற்றி ஆராதித்து அவர் அருளைப் பெறுவோமாக!.– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்
-ஹேரம்ப கணபதி.முத்கல புராணம் விவரிக்கும் 32 வகையான கணபதி திருமூர்த்தங்களில் ஒன்று, ஸ்ரீ ஹேரம்ப கணபதி. ஐந்து முகங்களுடன் திகழ்வதால் இவருக்கு, 'ஸ்ரீ பஞ்சமுக விநாயகர்'என்ற சிறப்பும் உண்டு..'அடியவர்களுக்கு நன்மை பயக்கும் அனைத்தும் தம்மிடம் உண்டு' என்பதை உணர்த்தும் வகையில் அங்குசம், கதாயுதம், கரும்பு வில், சங்கு, சக்கரம், பாசம், தாமரை மலர், நெற்கதிர், உடைந்த தந்தம், ரத்தினக் கலசம் ஆகியவற்றை ஏந்தியபடி, பத்து திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார் ஹேரம்ப கணபதி..எல்லோருக்கும் மேலான கடவுளாகத் திகழ்வதால், மிருகங்களில் தலைசிறந்த சிம்மத்தை (சிங்கத்தை) இவர் தமது வாகனமாகக் கொண்டுள்ளார். அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீ ஹேரம்ப கணபதியின் திருவடி களை நேபாளம் மற்றும் வங்காளத்தில் நிறைய தரிசிக்கலாம்..தமிழகத்தில் நாகப்பட் டினம், திருவானைக்காவல் மற்றும் திருவொற்றியூர் ஆகிய தலங்களில் ஸ்ரீ ஹேரம்ப கணபதியை தரிசிக்க முடியும்!.– சௌமியா, பழைய பல்லாவரம்.விநாயகர் விரதம்.விநாயகர் அருளைப் பெற பதினொரு வகையான விரதங்களை நமது முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கிறார்கள். அவற்றைப்பற்றிக் காண்போம்..வெள்ளி விரதம் : வைகாசி மாத, வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஒரு வருடகாலம் மேற்கொள்வது இந்த விரதம். இதனால் குடும்பத்தில் வளம் கொழிக்கும்..செவ்வாய் விரதம் : ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஓராண்டுவரை செய்வது இந்த விரதம். இதனால் செவ்வாய் தோஷ சிக்கல்கள் நீங்கும்..சித்தி விநாயக விரதம் : புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் விரதம் இருப்பது. எதிரிளை அடக்கும் விரதம் இது..சதுர்த்தி விரதம் : பிரதிமாதம் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதமிது. இதனால் காரியத்தடைகள் நீங்கும்..தூர்வா கணபதி விரதம் : கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்திச் செய்வது இந்த விரதம். இதனால் பிள்ளைப்பேறு கிடைக்கும்..குமார சஷ்டி விரதம் : கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டிவரை இருபத்தியொரு தினங்கள் மேற்கொள்வது இந்த விரதம். குடும்ப நலனுக்காகச் செய்யப்படுகின்ற இந்த விரதத்துக்கு, 'பிள்ளையார் நோன்பு'என்ற பெயரும் உண்டு..தூர்வாஷ்டமி விரதம் : புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, விநாயகரை ஓர் ஆண்டுகாலம் அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது இந்த விரதம். இதனால் உடல் வலிமை பெறும்..விநாயக நவராத்திரி : ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜை செய்வது விநாயக நவராத்திரி..வெள்ளிப் பிள்ளையார் விரதம் : ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதமிருப்பது. பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம், நினைத்ததை நிறைவேற்றித்தரும் அற்புதம் வாந்தது..அங்காரக சதுர்த்தி விரதம் : 'ஏழை ஒருவர், மாசி தேபிறை செவ்வாயில் தொடங்கி, ஒரு வருடம் விநாயகரை பூஜை செய்து வந்தால், அவர் பலம் பெறுவார்'என்று விநாயகர் வழிபாட்டு முறைகள் சொல்கின்றன. இந்த விரதத்தை மேற்கொண்ட அங்காரகனுக்கு நவக்கிரகங்களில் ஒருவராகும் தகுதியைத் தந்தார் விநாயகர். விநாயகரை முழு மனதோடு போற்றி ஆராதித்து அவர் அருளைப் பெறுவோமாக!.– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்