அலட்சியம் செய்யாமல் செயல்பட வேண்டும்.'பாயசம் -எழுத்தும் படமும்'என்ற கடைசிப்பக்கத்தில் சுஜாதா தேசிகனின் எழுத்துக்களைப் படித்ததும் அவை சிந்தனைக்கு விருந்தாக இருந்தது. 'சாமநாது'என்றால் யார் நமக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் எப்படி ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பதை அழகாக விளக்கி நம்மை உற்சாகப் படுத்திய கடைசிப்பக்கத்திற்குப் பாராட்டுக்கள். – உஷா, திருநகர்'காது-மூக்கு-தொண்டையும் கொரோனாவும்'என்ற பக்கங்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை அழகாகச் சொல்லி இருப்பது மிகவும் அருமை. இப்போது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கொரோனாவினால் மருத்துவமனைக்குச் செல்லவே பயப்படுபவர் கள் இதைப் படித்துக்கொண்டு அவசியத் தேவை என்றால் செல்லலாம் என்று தீர்மானிக்க வைக்கும் மிக அருமையான தகவல்களைச் சொன்னது அருமை. – ராதிகா, மதுரைஎந்த தேசத்திலாவது எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு மிகவும் அருமையாக இருந்தது. இதில் தராசு சொன்ன பின்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் நாம் பட்டியலிலேயே இல்லை என்ற செய்தி வேதனை அளித்தது. மிகவும் ரசிக்க வைத்த பதில் . -பிரகதா நவநீதன், மதுரைபருவநிலை மாற்றத்தால் கடந்த 142 வருடங்களாக இல்லாத வெப்பத்தை இந்த ஆண்டு பூமி தொட்டிருப்பது நமக்கு அளித்திருக்கும் எச்சரிக்கை மணி ஆகும். வெப்பமயமாதல் அதிகரிப்பால் 2050ல் கடலில் மூழ்கும் நகரங்களை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளதை தலையங்கத்தில் விளக்கி, உரிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் எடுக்க கல்கி விடுத்துள்ள குரலை அலட்சியம் செய்யாமல் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்ததினால் கடல் விழித்துக்கொள்ளும். – ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்கவர் ஸ்டோரியில் 2021-2022 பட்ஜெட் அலசல், பட்ஜெட்டைவிட சிறப்பாக இருந்தது. ஆட்சியாளர்கள் போட்ட பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து ஏற்ற இறக்கம் குறித்தும், சறுக்கல்களைச் சரிசெய்யும் விதமாயும் சுட்டிக்காட்டிய கல்கியின் அனுபவம் மிகச்சரியாய், மிளிர்ந்தது என்றால் அது மிகையல்லை.- ஆர்.நாகராஜன்,செம்பனார்கோவில்'காய்மா… காய்'சிறுகதையில் நடப்பு நிகழ்வுகளை உவமைப்படுத்தி நகைச்சுவையைத் தெறிக்க விட்டுள்ளதை ரசித்தேன். சில மனைவிகளுக்குக் கணவன் தெய்வம்; சிலருக்குக் கிள்ளுக்கீரை மாதிரி என்பது நல்ல நக்கல். கீரைக்காரம்மா பிரயோகித்ததிலேயே 'கஸ்மாலம்' என்பதுதான் கௌரவமாக இருந்தது என்பது நல்ல நையாண்டி. கதை செம கலக்கல். – நெல்லை குரலோன், நெல்லைகடந்தவாரம் கல்கி மின்னிதழ் பல பயனுள்ள கட்டுரைகளை ஏந்தி வந்துள்ளது. மனிதகுலத்தை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் குறித்த தலையங்கம், கண், மூக்கு, தொண்டை பராமரிப்பு பற்றிய டாக்டரின் பரிந்துரைகள். தொடர்வண்டி ஓட்டுநர்களின் தொடர் பணி என இன்னும் பற்பல. எல்லாம் சரி, கடைசிப்பக்க கதாநாயகன் சுஜாதா தேசிகன் நவரசத் திரைப்பட விமர்சகராய் மாறி டெல்லி கணேஷுக்குப் புகழாரம் சூட்டியுள் ளாரே. நான் ஒன்றும் சாமநாது இல்லை. உள்ளதைத்தான் சொன்னேன்.- திருவரங்க வெங்கடேசன், பெங்களூருகண்ணன் சொன்னதையும், கம்பன் சொன்னதையும், காஞ்சி மகான் தெளிவாகப் புரியும்படி, அருள்வாக்கில் விளக்கிஉள்ளார். மிக மிக அருமையான தகவல்கள். – ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்இன்ஜினியரிங் படிப்பைத் தமிழிலேயே படிக்கலாம் என்கிற இனிப்பான செய்தியைப் படித்து மகிழ்ச்சியாக இருந்தது. டி.எஸ். நடராஜன் பதில்கள் ரொம்ப சிறப்பாக இருந்தது.- ஜி.ஆனந்தமுருகன், சென்னை'கார்கில் போரும் நமது வெள்ளைக்குதிரையும்'கட்டுரை ஆய்வுரையாக அமைந்திருந்தது. பல ஆண்டுகளின் வரலாறை மிகவும் சுருக்கி மிகவும் அருமையாகத் தந்திருந்தீர்கள்.- மணிகண்டன், மேல்மருவத்தூர்ஒரு நல்ல விஷயம் நடக்க ஒரு பொய்யையும் சொல்லலாம் என்கிற குறளை நிரூபிக்கும் விதமாக ஒரு பொய்யைச் சொல்லி சிறுவனை காப்பாற்றியதை 'பொய்மையும் வாய்மையிடத்த'சிறுகதை அழகாக விளக்கியிருந்தது.- எஸ்.ராஜேந்திரன், லால்குடி
அலட்சியம் செய்யாமல் செயல்பட வேண்டும்.'பாயசம் -எழுத்தும் படமும்'என்ற கடைசிப்பக்கத்தில் சுஜாதா தேசிகனின் எழுத்துக்களைப் படித்ததும் அவை சிந்தனைக்கு விருந்தாக இருந்தது. 'சாமநாது'என்றால் யார் நமக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் எப்படி ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பதை அழகாக விளக்கி நம்மை உற்சாகப் படுத்திய கடைசிப்பக்கத்திற்குப் பாராட்டுக்கள். – உஷா, திருநகர்'காது-மூக்கு-தொண்டையும் கொரோனாவும்'என்ற பக்கங்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை அழகாகச் சொல்லி இருப்பது மிகவும் அருமை. இப்போது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கொரோனாவினால் மருத்துவமனைக்குச் செல்லவே பயப்படுபவர் கள் இதைப் படித்துக்கொண்டு அவசியத் தேவை என்றால் செல்லலாம் என்று தீர்மானிக்க வைக்கும் மிக அருமையான தகவல்களைச் சொன்னது அருமை. – ராதிகா, மதுரைஎந்த தேசத்திலாவது எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு மிகவும் அருமையாக இருந்தது. இதில் தராசு சொன்ன பின்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் நாம் பட்டியலிலேயே இல்லை என்ற செய்தி வேதனை அளித்தது. மிகவும் ரசிக்க வைத்த பதில் . -பிரகதா நவநீதன், மதுரைபருவநிலை மாற்றத்தால் கடந்த 142 வருடங்களாக இல்லாத வெப்பத்தை இந்த ஆண்டு பூமி தொட்டிருப்பது நமக்கு அளித்திருக்கும் எச்சரிக்கை மணி ஆகும். வெப்பமயமாதல் அதிகரிப்பால் 2050ல் கடலில் மூழ்கும் நகரங்களை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளதை தலையங்கத்தில் விளக்கி, உரிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் எடுக்க கல்கி விடுத்துள்ள குரலை அலட்சியம் செய்யாமல் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்ததினால் கடல் விழித்துக்கொள்ளும். – ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்கவர் ஸ்டோரியில் 2021-2022 பட்ஜெட் அலசல், பட்ஜெட்டைவிட சிறப்பாக இருந்தது. ஆட்சியாளர்கள் போட்ட பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து ஏற்ற இறக்கம் குறித்தும், சறுக்கல்களைச் சரிசெய்யும் விதமாயும் சுட்டிக்காட்டிய கல்கியின் அனுபவம் மிகச்சரியாய், மிளிர்ந்தது என்றால் அது மிகையல்லை.- ஆர்.நாகராஜன்,செம்பனார்கோவில்'காய்மா… காய்'சிறுகதையில் நடப்பு நிகழ்வுகளை உவமைப்படுத்தி நகைச்சுவையைத் தெறிக்க விட்டுள்ளதை ரசித்தேன். சில மனைவிகளுக்குக் கணவன் தெய்வம்; சிலருக்குக் கிள்ளுக்கீரை மாதிரி என்பது நல்ல நக்கல். கீரைக்காரம்மா பிரயோகித்ததிலேயே 'கஸ்மாலம்' என்பதுதான் கௌரவமாக இருந்தது என்பது நல்ல நையாண்டி. கதை செம கலக்கல். – நெல்லை குரலோன், நெல்லைகடந்தவாரம் கல்கி மின்னிதழ் பல பயனுள்ள கட்டுரைகளை ஏந்தி வந்துள்ளது. மனிதகுலத்தை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் குறித்த தலையங்கம், கண், மூக்கு, தொண்டை பராமரிப்பு பற்றிய டாக்டரின் பரிந்துரைகள். தொடர்வண்டி ஓட்டுநர்களின் தொடர் பணி என இன்னும் பற்பல. எல்லாம் சரி, கடைசிப்பக்க கதாநாயகன் சுஜாதா தேசிகன் நவரசத் திரைப்பட விமர்சகராய் மாறி டெல்லி கணேஷுக்குப் புகழாரம் சூட்டியுள் ளாரே. நான் ஒன்றும் சாமநாது இல்லை. உள்ளதைத்தான் சொன்னேன்.- திருவரங்க வெங்கடேசன், பெங்களூருகண்ணன் சொன்னதையும், கம்பன் சொன்னதையும், காஞ்சி மகான் தெளிவாகப் புரியும்படி, அருள்வாக்கில் விளக்கிஉள்ளார். மிக மிக அருமையான தகவல்கள். – ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்இன்ஜினியரிங் படிப்பைத் தமிழிலேயே படிக்கலாம் என்கிற இனிப்பான செய்தியைப் படித்து மகிழ்ச்சியாக இருந்தது. டி.எஸ். நடராஜன் பதில்கள் ரொம்ப சிறப்பாக இருந்தது.- ஜி.ஆனந்தமுருகன், சென்னை'கார்கில் போரும் நமது வெள்ளைக்குதிரையும்'கட்டுரை ஆய்வுரையாக அமைந்திருந்தது. பல ஆண்டுகளின் வரலாறை மிகவும் சுருக்கி மிகவும் அருமையாகத் தந்திருந்தீர்கள்.- மணிகண்டன், மேல்மருவத்தூர்ஒரு நல்ல விஷயம் நடக்க ஒரு பொய்யையும் சொல்லலாம் என்கிற குறளை நிரூபிக்கும் விதமாக ஒரு பொய்யைச் சொல்லி சிறுவனை காப்பாற்றியதை 'பொய்மையும் வாய்மையிடத்த'சிறுகதை அழகாக விளக்கியிருந்தது.- எஸ்.ராஜேந்திரன், லால்குடி