ஆதித்யா.ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் புரட்சிப்படை அமைத்திருக்கும் தாலிபான் குடியரசு ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த வாரம் (ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம். 1919ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து மீண்ட தினம். சுதந்திர தினக் கொண்டாட்டங் களைச் சாக்காக வைத்து தாலிபான் சாத்தான் களுக்கு எதிரான போராட்டங்கள் தேசமெங்கிலும் எழுந்திருக்கின்றன..பச்சை, சிவப்பு, கறுப்பு நிறங்கள் கொண்ட ஆப்கானிஸ்தானின் தேசியக்கொடி தாலிபானுக்கு எதிரான போராட்டச் சின்னமாக உருவெடுத்திருக்கிறது. ஜலலாபாத், பஞ்ச்ஷீர் பகுதிகளில் தாலிபான்களின் கொடிகள் இறக்கப்பட்டு தேசியக்கொடி பறக்க விடப்பட்டது..காபூலில் தேசியக் கொடிகள் கட்டிய கார்களின் நீண்ட கார் ஊர்வலம் நடைபெற்றது. "முந்தைய தவறுகளிலிருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். இனி ஆட்சியில் பெண்களுக்குச் சுதந்திரம், படிக்கும் உரிமை, பணி யாற்றும் உரிமை எல்லாம் வழங்கப்படும்" என புரட்சிப்படை ஆட்சியின் தாற்காலிகத் தலைவர் அறிவித்திருக்கிறார்..ஆனால் காபூலில் இந்த அறிவிப்பு வெளியான அதே நேரத்தில் கந்தஹார், பாமியன் மாகாணத்தில் நடந்த போராட்ட நிகழ்வில் தாலிபான் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கலைத்திருக்கிறார்கள். போராட்டத்தில் நிறைய பேர் இறந்து போயிருக்கிறார்கள். இந்த கந்தஹார் செய்தியைப் படித்தவுடன் அங்கு 2001ல் நிகழ்ந்த கொடூரமான புத்தர்.சிலை உடைப்புச் சம்பவம் நினைவில் நிழலாடியது..ஆதியில் பாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி. பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும் மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப்பாதையில் அமைந்திருந்தது..இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங் களின் இருப்பிடமாக இருந்திருக்கிறது..இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியிருக்கிறது..இப்பகுதி மடங்களில் புத்த சமயத் துறவிகள் குடையப்பட்ட சிறிய குகைகளில் வாழ்ந்து வந்தனர். பல துறவிகள் தங்கள் குகைகளை புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பெரிய அளவில் நிற்கும் இரண்டு புத்தர் சிலைகள். முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை..இவையே உலகின் மிகப்பெரிய நிற்கும் புத்தர் சிலைகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சிலைகள் இருந்த இடமும், சூழவுள்ள பண்பாட்டு நிலத்தோற்றம், தொல்லியல் எச்சங்கள் அனைத்தும் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டது..ஆப்கானிஸ்தானின் தீவிர மதவாதிகள், அந்நாட்டின் இஸ்லாமுக்கு எதிரான பிரிவினரை இலக்காகக் கொண்டு எதிர்ப்புப் பிரசாரம் ஒன்றைத் தொடங்கினர். அதன் முதல் கட்டமாக தாலிபான் தலைவர்கள் எல்லாவித உருவச் சிலைகளையும், இசை, விளையாட்டு என்பவற்றையும், தொலைக் காட்சியையும்கூட இஸ்லாமியச் சட்டங்களுக்கு எதிரானவை எனக் கூறித் தடை செய்தனர்..இஸ்லாமிய ஷாரியா சட்டத்தின்படி சிலைகள் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க ஆணையிட்டார். அவ்வாணையை ஏற்று அந்நாளைய தலிபான் அரசு 2001ஆம் ஆண்டில் இச்சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. சிலைகளை அவ்வளவு எளிதாக உடைக்கமுடியவில்லை. 2001 மார்ச் தொடங்கி முதலில், டைனமைட்டு வெடிப் பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..இது பல கட்டங்களாகத் தொடர்ந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிப்பொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர்..அந்தச் சிலைகளை 7000 துண்டுகளாக உடைத்து சுத்தமாக காலி குகைகளாக்கினார்கள். இப்படி அந்தச் சிலைகள் அகற்றப் பட்ட பின்னர்தான் வெளியுலகுக்குச் செய்தி தெரிந்தது. யுனஸ்கோவும் புத்த சமயத்தைப் பின்பற்றும் பல நாடுகளும் அதிர்ச்சியையும் ஆட்சேபங்களையும் தெரி வித்தன. ஆனால் தாலிபான்கள் அவற்றை மதிக்கவில்லை..ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் யுனஸ்கோவின் கோரிக்கையை ஏற்று உடைந்த பகுதிகளை ஒருங்கிணைத்து சிலையை மீட்டெடுக்கும் முயற்சிக்கு அனுமதித்தது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இச்சிலைகளை மீள அமைப்பதற்கு உதவி செய்தன. ஆனால் பல சோதனைகளுக்குப்பின் அது முடியாது என கைவிடப்பட்டது..கற்சிலைகளைப் பழைய கலை நுணுக்கத்துடன் படைப்பிக்க முடியாத நிலையில், அதிநவீன 3டி தொழில்நுட்பம் மூலம் புத்தர் சிலைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தொழில்நுட்ப உதவி தர முன்வந்தன. இதையடுத்து, பழைய புத்தர் சிலைகளின் புகைப் படங்களை அடிப்படையாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் காலியாக உள்ள குகைகளில் புத்தர் சிலைகள் உயிர்தெழச் செய்யப்பட்டுள்ளன..தகர்க்கப்பட்ட புத்தர் சிலைகள் மீண்டும் தத்ரூபமாக 3டி தொழில்நுட்பத்தில் காட்டப்பட்டன. நிஜத்தில், காலியான குகைகளுக்குள் பழையபடி புத்தர் சிலைகள் வந்துவிட்டது போல் பார்வையாளர்கள் உணர்ந்தனர்..புத்தர் சிலைகளை 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கும் செலவை சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதி ஏற்றுக் கொண்டிருந்தனர். உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு விஷயமாக இருந்த இதைக்கடந்த முறை மீண்டும் தாலிபான் புரட்சிக்காரர்கள் தடை செய்து விட்டார்கள். அந்தப் புரட்சிக்கார தீவிரவாத தாலிபான்கள்தான் இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள்..புத்தம் சரணம் கச்சாமி என்பதற்கு அர்த்தம் புத்தரிடம் சரண் புகுகிறேன் என்பது அல்ல, புத்தர் யாரையும் தன்னிடம் வந்து சரண் அடையுங்கள் என்று சொல்லவில்லை. அத்த தீப பவ, அதாவது நீயே உனக்கு ஒளி என்று சொன்ன அவர் எப்படி நம்மை அவரிடம் சரண்புகச் சொல்லுவார். புத்தம் சரணம் கச்சாமி… புத்தத்தில் சரண் புகுகிறேன் என்று அர்த்தம். புத்தம் என்றால் புத்தி, அறிவு, ஞானம். ஒவ்வொருவரும் உள்ளத்தைப் பகுத்து ஆராய்ந்து, உய்த்து, அறிந்து அதன் மூலம் அறியும் அறிவில் சரண்புக வேண்டும் என்பதே புத்தர் சொன்ன, புத்தம் சரணம்.கச்சாமி..புத்தர் சொன்னது தாலிபான்களுக்குப் புரியாது போனதில் ஆச்சர்யம் இல்லை. ஏன் என்றால் அவர்கள் தாலிபான்கள்.
ஆதித்யா.ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் புரட்சிப்படை அமைத்திருக்கும் தாலிபான் குடியரசு ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த வாரம் (ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம். 1919ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து மீண்ட தினம். சுதந்திர தினக் கொண்டாட்டங் களைச் சாக்காக வைத்து தாலிபான் சாத்தான் களுக்கு எதிரான போராட்டங்கள் தேசமெங்கிலும் எழுந்திருக்கின்றன..பச்சை, சிவப்பு, கறுப்பு நிறங்கள் கொண்ட ஆப்கானிஸ்தானின் தேசியக்கொடி தாலிபானுக்கு எதிரான போராட்டச் சின்னமாக உருவெடுத்திருக்கிறது. ஜலலாபாத், பஞ்ச்ஷீர் பகுதிகளில் தாலிபான்களின் கொடிகள் இறக்கப்பட்டு தேசியக்கொடி பறக்க விடப்பட்டது..காபூலில் தேசியக் கொடிகள் கட்டிய கார்களின் நீண்ட கார் ஊர்வலம் நடைபெற்றது. "முந்தைய தவறுகளிலிருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். இனி ஆட்சியில் பெண்களுக்குச் சுதந்திரம், படிக்கும் உரிமை, பணி யாற்றும் உரிமை எல்லாம் வழங்கப்படும்" என புரட்சிப்படை ஆட்சியின் தாற்காலிகத் தலைவர் அறிவித்திருக்கிறார்..ஆனால் காபூலில் இந்த அறிவிப்பு வெளியான அதே நேரத்தில் கந்தஹார், பாமியன் மாகாணத்தில் நடந்த போராட்ட நிகழ்வில் தாலிபான் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கலைத்திருக்கிறார்கள். போராட்டத்தில் நிறைய பேர் இறந்து போயிருக்கிறார்கள். இந்த கந்தஹார் செய்தியைப் படித்தவுடன் அங்கு 2001ல் நிகழ்ந்த கொடூரமான புத்தர்.சிலை உடைப்புச் சம்பவம் நினைவில் நிழலாடியது..ஆதியில் பாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி. பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும் மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப்பாதையில் அமைந்திருந்தது..இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங் களின் இருப்பிடமாக இருந்திருக்கிறது..இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியிருக்கிறது..இப்பகுதி மடங்களில் புத்த சமயத் துறவிகள் குடையப்பட்ட சிறிய குகைகளில் வாழ்ந்து வந்தனர். பல துறவிகள் தங்கள் குகைகளை புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பெரிய அளவில் நிற்கும் இரண்டு புத்தர் சிலைகள். முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை..இவையே உலகின் மிகப்பெரிய நிற்கும் புத்தர் சிலைகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சிலைகள் இருந்த இடமும், சூழவுள்ள பண்பாட்டு நிலத்தோற்றம், தொல்லியல் எச்சங்கள் அனைத்தும் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டது..ஆப்கானிஸ்தானின் தீவிர மதவாதிகள், அந்நாட்டின் இஸ்லாமுக்கு எதிரான பிரிவினரை இலக்காகக் கொண்டு எதிர்ப்புப் பிரசாரம் ஒன்றைத் தொடங்கினர். அதன் முதல் கட்டமாக தாலிபான் தலைவர்கள் எல்லாவித உருவச் சிலைகளையும், இசை, விளையாட்டு என்பவற்றையும், தொலைக் காட்சியையும்கூட இஸ்லாமியச் சட்டங்களுக்கு எதிரானவை எனக் கூறித் தடை செய்தனர்..இஸ்லாமிய ஷாரியா சட்டத்தின்படி சிலைகள் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க ஆணையிட்டார். அவ்வாணையை ஏற்று அந்நாளைய தலிபான் அரசு 2001ஆம் ஆண்டில் இச்சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. சிலைகளை அவ்வளவு எளிதாக உடைக்கமுடியவில்லை. 2001 மார்ச் தொடங்கி முதலில், டைனமைட்டு வெடிப் பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..இது பல கட்டங்களாகத் தொடர்ந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிப்பொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர்..அந்தச் சிலைகளை 7000 துண்டுகளாக உடைத்து சுத்தமாக காலி குகைகளாக்கினார்கள். இப்படி அந்தச் சிலைகள் அகற்றப் பட்ட பின்னர்தான் வெளியுலகுக்குச் செய்தி தெரிந்தது. யுனஸ்கோவும் புத்த சமயத்தைப் பின்பற்றும் பல நாடுகளும் அதிர்ச்சியையும் ஆட்சேபங்களையும் தெரி வித்தன. ஆனால் தாலிபான்கள் அவற்றை மதிக்கவில்லை..ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் யுனஸ்கோவின் கோரிக்கையை ஏற்று உடைந்த பகுதிகளை ஒருங்கிணைத்து சிலையை மீட்டெடுக்கும் முயற்சிக்கு அனுமதித்தது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இச்சிலைகளை மீள அமைப்பதற்கு உதவி செய்தன. ஆனால் பல சோதனைகளுக்குப்பின் அது முடியாது என கைவிடப்பட்டது..கற்சிலைகளைப் பழைய கலை நுணுக்கத்துடன் படைப்பிக்க முடியாத நிலையில், அதிநவீன 3டி தொழில்நுட்பம் மூலம் புத்தர் சிலைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தொழில்நுட்ப உதவி தர முன்வந்தன. இதையடுத்து, பழைய புத்தர் சிலைகளின் புகைப் படங்களை அடிப்படையாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் காலியாக உள்ள குகைகளில் புத்தர் சிலைகள் உயிர்தெழச் செய்யப்பட்டுள்ளன..தகர்க்கப்பட்ட புத்தர் சிலைகள் மீண்டும் தத்ரூபமாக 3டி தொழில்நுட்பத்தில் காட்டப்பட்டன. நிஜத்தில், காலியான குகைகளுக்குள் பழையபடி புத்தர் சிலைகள் வந்துவிட்டது போல் பார்வையாளர்கள் உணர்ந்தனர்..புத்தர் சிலைகளை 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கும் செலவை சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதி ஏற்றுக் கொண்டிருந்தனர். உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு விஷயமாக இருந்த இதைக்கடந்த முறை மீண்டும் தாலிபான் புரட்சிக்காரர்கள் தடை செய்து விட்டார்கள். அந்தப் புரட்சிக்கார தீவிரவாத தாலிபான்கள்தான் இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள்..புத்தம் சரணம் கச்சாமி என்பதற்கு அர்த்தம் புத்தரிடம் சரண் புகுகிறேன் என்பது அல்ல, புத்தர் யாரையும் தன்னிடம் வந்து சரண் அடையுங்கள் என்று சொல்லவில்லை. அத்த தீப பவ, அதாவது நீயே உனக்கு ஒளி என்று சொன்ன அவர் எப்படி நம்மை அவரிடம் சரண்புகச் சொல்லுவார். புத்தம் சரணம் கச்சாமி… புத்தத்தில் சரண் புகுகிறேன் என்று அர்த்தம். புத்தம் என்றால் புத்தி, அறிவு, ஞானம். ஒவ்வொருவரும் உள்ளத்தைப் பகுத்து ஆராய்ந்து, உய்த்து, அறிந்து அதன் மூலம் அறியும் அறிவில் சரண்புக வேண்டும் என்பதே புத்தர் சொன்ன, புத்தம் சரணம்.கச்சாமி..புத்தர் சொன்னது தாலிபான்களுக்குப் புரியாது போனதில் ஆச்சர்யம் இல்லை. ஏன் என்றால் அவர்கள் தாலிபான்கள்.