தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களூக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 12,838 பேர், இன்று வார்டு கவுன்சிலர்களாக இன்று பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்வுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.. இதில் 21 மாநகராட்சியிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளதால் திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் அறிவிக்கும் நபர்களே மேயர் மற்றும் துணை மேயராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.