உத்தரப்பிரதேசத்தில் இன்று 54 தொகுதிகளுக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றூடன் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைகின்றன. இந்த தேர்தல் இம்மாதம் 10-ம் தேதியன்று வெலியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது:
உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர், மாவ், ஜழன்பூர், காஜிர்பூர், சந்தவ்லி, மிர்சாப்பூர், பாதோஹி மற்றும் சோனபத்ரா மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று 7-ம் கட்டமாக இறுதிகட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதுவரை சுமார் 30 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.
-இவ்வாறு உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ததால், அம்மாநில தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சியும் பொதுமக்களும் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.