உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யோகேஷ் சர்மா என்பவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பைனாகுலர் மூலம் கண்காணித்து வருவது பரபரப்பிக் கிள்ப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
இந்த தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவே பைனாகுலரால் கண்காணித்து வருகிறேன்.
-இவ்வாறு சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான யோகேஷ் சர்மா தெரிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் யோகேஷ் சர்மா போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.