1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு: தமிழக அரசு தொடக்கம்!

1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு: தமிழக அரசு தொடக்கம்!

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். வைத்துள்ளார்

தமிழகத்தில் விவசாயிகள் 1 லட்சம் பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு..ஸ்டாலின் அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில் இன்று அண்ணா நூலகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் தருவதற்கான ஆணையை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து முதல்வர் மு..ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் 4.3 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த 1 லட்சம் இணைப்புகளூம் 4 மாதங்களுக்குள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com