12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகவிருப்பதால், இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் அதனால் தமிழகத்துக்கு அடுத்த 1 வாரத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது:

தென் மேற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் தென் தமிழகம், மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com