கோயமுத்தூர் திருநங்கைகள் மூன்று நபர்கள் ஊர் காவல் படையில் திருநங்கைகள் மூன்று நபர்கள் இன்று பணியில் சேர்ந்துள்ளனர்.
கோயம்புத்தூர் ஊர் காவல் படையில் இணைந்து பணியாற்ற திருநங்கைகளுக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டதையடுத்து 15 திருநங்கைகள் நேர்காணலுக்கு வந்த நிலையில் மூவர் தேர்வாகி இன்று முதல் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். 10-ம் வகுப்புவரை படித்த வருணா, மஞ்சு, மற்றும் 12-ம் வகுப்பு படித்த சுஜி ஆகிய மூவரும் இன்றுமுதல் ஊர் காவல் படையில் இணைந்து பணியை தொடங்கினர்.
இந்த மூன்று பேரும் தனித்தனியே புற நகர்களான மேட்டுபாளையம், செட்டிபாளையம், பேரூர் உள்ளிட்ட ஊர்களில் பணியமர்ந்தப் பட்டதாக கோயம்புத்தூர் ஊர்க்காவல் படையினர் தகவல் தெரிவித்தனர் .