நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு உடபட்ட குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு உடபட்ட குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். இந்த விதிமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அதற்குள் குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தலைகவசங்களை தயாரிக்கும்படி ஹெல்மெட் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்டக்கூடாது. விதிகளை மீறினால் ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் ஒட்டுனர் உரிமர் ரத்து செய்யப்படும்.
-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த புதிய விதி, அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.