நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 21 பேரை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க நடுக்கடலுக்குச் சென்றனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கு தகவல் கொடுக்க, இலங்கை கடற்படை அங்கு விரைந்து வந்து நாகை மீனவர்களின் 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து அதிலிருந்த 21 பேரை கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே 56 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.