450 ரவுடிகள் நள்ளிரவில் கைது: தமிழக காவல்துறை அதிரடி!

450 ரவுடிகள் நள்ளிரவில் கைது: தமிழக காவல்துறை அதிரடி!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாள் இரவில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை புளியந்தோப்பு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தப்பட்டு 450 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் அவர்களீடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து தமிழக காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு ஓரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதையடுத்து 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 நபர்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடி வாரண்ட் அடிப்படையில் கைதானார்கள்;. மேலும் பலரிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு டிஜிபி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com