செய்முறை:
பச்சை வேர்க்கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் காய்ந்த மிளகாய் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு+ பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய மல்லித்தழை கறிவேப்பிலை, வெந்த வேர்க்கடலையை போடவும். இதில் பொடித்த மசாலா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். வாசமான பச்சை வேர்க்கடலை சுண்டல் ரெடி.