5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 33 லட்சம் பேர் இலக்கு!

5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 33 லட்சம் பேர் இலக்கு!

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தெரிவித்ததாவது:

கடந்த மாதம் 12ஆம் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அந்த முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதையடுத்து கடந்த 19-ம் தேதி நடைபெற்ற 2-வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26-ம் தேதி நடைபெற்ற 3-வது கட்டமாக நடந்த முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதையடுத்து 4-வது மெகா தடுப்பூசி முகாமில் தமிழகத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 5-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

-இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com