இரவில் தூங்கும்போது தலையணைக்கடியில் கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவதால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளைக்குப் பாதிப்பு ஏற்படுத்தி, புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இரவில் அதிக நேரம் கைபேசி பார்ப்பதால், தூக்கமின்மையும், மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதனால் படுப்பதற்கு குறைந்தது ஒருமணி நேரம் முன்பாவது கைபேசி, தொலைக்காட்சி, கணிணி பார்ப்பதை நிறுத்தி உடல், மன ஆரோக்யத்தை காப்போம்.
-Radhika Ravindran, Tiruvanmiyur.