அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக கட்சி நாளை மறுநாள் (அக்டோபர் 17) தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில்,அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் நாட்டிலும், பிற மாநிலங்களிலும், ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில..
அதிமுக தலைமைக் கழகத்திற்கு "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை" என புதிய பெயர் சூட்ட முடிவெடுக்கப் பட்டுள்ளது.
பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை கழக முன்னோடிகளுக்கு அணிவித்தல்.