அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின்முறைகேடுவழக்கு தொடர்பாக கடந்த வாரம் கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன்வழங்கியுள்ளது. .
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறிரூ.3 கோடி மோசடி செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் கேட்டு, கடந்த மாதம்17-ஆம்தேதி மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு தக்கல் செய்ய, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்சநீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் தலைமறைவாக இருந்ததாக கூறி, அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் 20 நாட்களுக்குப் பின் கடந்த வாரம் கர்நாடகாவில் வைத்து ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டார்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாகல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதன்பிறகு ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.