ஸ்டார்ட்…கேமரா…ஆனந்த்…!11எஸ்.சந்திரமௌலி.மணிரத்னத்தின் இருவர் படம் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான முதல் படம் என்றாலும், அவர் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்துகொண்ட முதல் படம் 'அவுர் பியார் ஓகையா' என்ற இந்திப் படம் தான். அதுதான் எனக்கும் முதல் இந்திப் படம். அந்தப் படத்தின் ஹீரோ பாபி தியோல். இயக்குநர் ராவுல் ரவேல்..அந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் என்னை அணுகி, அவர் தயாரிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டபோது, நான் தயங்கினேன்.மும்பை ஓட்டலில் தயாரிப்பாளர் சொசைல் மக்லாயைச் சந்தித்தபோது, "காதல் தேசம்' படத்தின் என்னுடைய கேமராவைப் பார்த்துவிட்டு, என்னை உங்கள் படத்தில் பணியாற்ற அழைக்கிறீர்கள். அதில் எனக்குச் சந்தோஷம்தான். ஆனால், அந்தப் படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணமே ஒவ்வொரு காட்சியையும் அதற்கு ஏற்ற சரியான லைட்டிங்கில் எடுத்ததுதான்.கதைப்படி கொளுத்தும் வெயிலில் எடுக்க வேண்டிய காட்சி என்றால், எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், உச்சி வெயிலில் எடுக்க வேண்டும் என நினைப்பவன் நான். என் முதல் படத்தை 32 நாட்களில் படம் பிடித்து முடித்துவிட்டோம். அதில் பல நாள் அதிகாலை நேரத்தில் படம்பிடிக்க வேண்டி இருந்தது.அதே போலத்தான், காதல் தேசம் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்கள் நடந்தாலும், 40 நாட்கள் அதிகாலையிலேயே ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டோம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டதற்குப் படத்தில் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதைப் பார்த்துப் பிடிச்சுப் போய் தான் நீங்கள் கூப்பிடுகிறீர்கள். இது இந்திப் பட உலகில் சாத்தியமில்லையே!இந்திப் பட ஹீரோக்கள் காலையில் பதினோரு மணிக்குத்தான் ஷூட்டிங்கிற்கு வருவார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று சற்று வெளிப்படையாகவே பேசினேன். . என் தயக்கத்துக்கான காரணத்தைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர் அங்கிருந்தே ஹீரோ பாபிதியோலுக்கு போன் செய்து உடனே அவரை ஓட்டலுக்கு வரவழைத்தார். பாபி யிடம் என்னை அறிமுகப்படுத்தினார். பி.சி. ஸ்ரீராம் பற்றி ரொம்ப உயர்வாகச் சொல்லி விட்டு, "பி.ஸ்ரீ. சீடரான உங்களுடன் பணியாற்ற நான் ஆர்வமாக இருக்கிறேன்! பொதுவாகவே, தென்னிந்திய டெக்னிஷியன்களுடன் பணியாற்ற எனக்கு விருப்பம் அதிகம்" என்றார்."இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை நான் படிச்சேன்! ரொம்ப சாஃப்டான ரொமான்டிக் லவ் ஸ்டோரி. ஆகவே, முப்பது, நாற்பது நாள் அதிகாலை நேரத்தில் ஷூட் பண்ணவேண்டி இருக்கும். உங்களால அட்ஜஸ்ட் செய்து கொண்டு சரியான நேரத்துக்கு வர முடியுமா?" என்று கேட்டேன்.சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு, அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது."கவலைப்படாதீங்க கே.வீ! அதிகாலை நாலு மணிக்கு ஷூட்டிங் என்றாலும் நான் கரெக்டாக நேரத்துக்கு செட்டில் இருப்பேன். உங்களுக்காக என் தூக்க ஷெட்யூலை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் போச்சு! தினம் நான் தூங்கப் போக நள்ளிரவு ஆகிவிடும். அதனால, அதிகாலையில என்னால எழுந்திருக்க முடியாது. உங்களுக்காக நான் ராத்திரி இன்னும் ரெண்டு, மூணு மணி நேரம் எக்ஸ்ட்ராவாக தூங்காமல் இருந்துவிட்டு, நேரே உங்க ஷூட்டிங்கிற்கு வந்திடறேன். காலை பதினோரு மணி பக்கமா பிரேக் குடுத்தீங்கன்னா, அப்போ தூங்கிக் கறேன்" என்றார்.பாபி தியோலில் வித்தியாசமான அட்ஜஸ்ட் மென்ட்டும், சின்சியாரிட்டியும் என் தயக்கத்தைப் போக்கியது. என் சம்மதத்தைத் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சென்னைக்குத் திரும்பினேன்.முதல் படப்பிடிப்பு ஷெட்யூல் கோவாவில் பத்து நாட்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. காலை ஆறு மணிக்கு கோவா பீச்சில் படப்பிடிப்பு. ஹீரோ பாபி தியோல், ஹீரோயின் ஐஸ்வர்யா ராய் உட்பட மொத்த யூனிட்டும் ஆஜர். ஆனால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி ஆறு மணிக்கு ஆரம்பிக்க முடியவில்லை. காரணம் படத்தின் டைரக்டர் வரவில்லை. . நாங்கள் அனைவரும் டைரக்டருக்காகக் காத்துக்கொண்டே இருந்தாலும், கோவா பீச் சூரியன் யாருக்கும் காத்துக் கொண்டிருக்காமல் விறுவிறுவென்று மேலே ஏறிக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக எட்டரை மணிக்கு டைரக்டர் வந்து சேர்ந்தார். உடம்பு சரியில்லாத தால் தாமதமாகிவிட்டது என்று காரணம் சொன்னார். காலை நேரப்படப்பிடிப்பைத் தவறவிட்டது பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல், ஒரு சில காட்சிகளை எடுத்து முடித்தார்.மறுநாள் எடுக்கவேண்டிய காட்சிகள் பற்றி என்னிடம் அன்று மாலை பேசுவார்; மறுநாள் தடங்கல் ஏதுமின்றி ஆறு மணிக்குப் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னைவிட சுமார் 25 வயது மூத்த அந்த இயக்குநரின் சினிமா பற்றிய சிந்தனையே, என்னுடையதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.அவரைப் பொறுத்தவரை, கேமராமேன் என்பவர் டைரக்டரது சௌகரியப்படி அவர் முடிவு செய்து வைத்திருக்கும் காட்சிகளை அவர் சொல்லும் லென்ஸ் மற்றும் கேமரா மூவ்மென்ட்டில் எடுத்துக் கொடுக்கும் கேமரா ஆபரேட்டர். அவ்வளவுதான். என்னால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.அதே சமயம் நான் அந்த இயக்குநரை குறை சொல்ல விரும்பவில்லை. அவரது பாணி அது; அவரும் வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறார். அவருக்கு சினிமா உலகில் ஒரு மரியாதை இருக்கிறது. தனிப் பட்ட முறையில் பார்த்தாலும், என்னிடம் மிக நட்புடன் அவர் பழகினார்.கோவாவில் தினம் ஒரு புது ஓட்டலுக்கு அழைத்துச் சென்று நிறைய உலக விஷயங்கள் பற்றிப் பேசினார். ஆனால், அவரது இயக்கத்தில், ஒரு கேமராமேனாகப் பணியாற்றுவது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை.தயாரிப்பாளரிடம், "உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும்" என்றேன். "கே.வீ! எனி பிராப்ளம்?" என்று அவர் கேட்டபோது, நான் ஏதோ, தங்கி இருக்கும் ஓட்டலில் சாப்பாடு சரியில்லை; கேமராவுக்கு ஏதோ ஸ்பெஷல் லென்ஸ் தேவை என்கிற ரீதியில் நான் பேசப் போகிறேன் என எதிர்பார்த்த வரிடம், "இந்தப் படத்தில் இனி தொடர்ந்து பணியாற்றுவது சாத்தியமில்லை! என்னை விட்டு விடுங்கள்" என்றதும், "என்ன சொல் றீங்க? என்ன பிராப்ளம் உங்களுக்கு?" என அதிர்ந்து போனார். . அவரிடம் பொறுமையாக இயக்குநருக்கும், எனக்கும் இடையிலான இடைவெளி பற்றி நாகரிகமான முறையில் எடுத்துச் சொல்லிவிட்டு அந்த ஷெட்யூலுடன் குட் பை சொல்லிவிட்டேன். சென்னை வந்த பிறகு என் கருத்தையும், காரணத்தையும் ஒரு கடிதமாக எழுதி டைரக்டருக்கு அனுப்பி வைத்தேன்.ஐஸ்வர்யா ராய் என்றவுடன் எனக்கு இன்னொரு சுவாரசியமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் நெருங்கிய நண்பர்கள், "நீ ரொம்ப பெரிய ஆளு! உன் திருமண ஆனிவர்சரிக்கு, உன் மனைவி வரலை; ஆனா ஐஸ்வர்யா ராய் வந்திருந்தாங்களே!" என்று கிண்டல் செய்வார்கள். காரணம் கோவாவில் 'அவுர் பியார் ஓகையா' முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடக்கும்போதுதான் என் முதல் திருமண ஆனிவர்சரி வந்தது.படப்பிடிப்புக்கு இடையில் என்னால் சென்னைக்கு வர முடியவில்லை; என் மனைவியாலும் கோவாவுக்கு வரமுடியவில்லை. விஷயமறிந்த இயக்குநர், ஷூட்டிங்கின்போதே ஒரு பெரிய கேக் வரவழைத்தார். டைரக்டர், பாபி தியோல், ஐஸ் அனைவரும் சூழ நான் கேக் வெட்டி என் திருமண ஆனிவர்சரியை என் மனைவி கூட இல்லாமல் கொண்டாடினேன்!அந்தப் படத்தில் அறிமுகமானாலும், ஐஸ் ஏற்கெனவே உலகறிந்த அழகி. பெரிய செலிபிரிடி. ஆனாலும், அதற்குரிய எந்தவிதமான பந்தாவும் இல்லாமல், படு சிம்பிளாக அவர் இருந்தது என்னை இன்னமும் கூட ஆச்சர்யப்படுத்தும் ஒரு விஷயம்.இதுவரை உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களிலேயே ஐஸ் தான் டாப் அழகி என்பது என் கருத்து. அவரது முகம் அழகின் இலக்கணம். நடு முகத்தில் செங்குத்தாக ஒரு கோடு போட்டுப் பிரித்தால் வலது பக்கமும், இடது பக்கமும் ஒன்றுக்கொன்று பிரதிபலிப்பாக – இரு பக்கமும் அப்படி ஒரு சிமெட்ரிக்கான முக லட்சணம் அவருக்கு. இப்படி முக அழகு அமைவது வெகு அபூர்வம். ஐஸ்வர்யா ராயைத் தவறான லென்ஸ் போட்டு, தவறான கோணத்தில் படம் எடுத்தாலும், அவர் அழகாகவே தோன்றுவார்.ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக கேமரா முன் நின்றபோது அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பெருமையாகப் படம்பிடித்த நான் எட்டாவது நாளே பெரிய கும்பிடு போட்டு விட்டு, 'ஆளைவிடுங்கள்' என்று ஓடி வந்து விட்டாலும், சில ஆண்டுகள் கழித்து, அவர் நடித்த ஜோஷ், காக்கி என இரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.(தொடரும்)
ஸ்டார்ட்…கேமரா…ஆனந்த்…!11எஸ்.சந்திரமௌலி.மணிரத்னத்தின் இருவர் படம் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான முதல் படம் என்றாலும், அவர் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்துகொண்ட முதல் படம் 'அவுர் பியார் ஓகையா' என்ற இந்திப் படம் தான். அதுதான் எனக்கும் முதல் இந்திப் படம். அந்தப் படத்தின் ஹீரோ பாபி தியோல். இயக்குநர் ராவுல் ரவேல்..அந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் என்னை அணுகி, அவர் தயாரிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டபோது, நான் தயங்கினேன்.மும்பை ஓட்டலில் தயாரிப்பாளர் சொசைல் மக்லாயைச் சந்தித்தபோது, "காதல் தேசம்' படத்தின் என்னுடைய கேமராவைப் பார்த்துவிட்டு, என்னை உங்கள் படத்தில் பணியாற்ற அழைக்கிறீர்கள். அதில் எனக்குச் சந்தோஷம்தான். ஆனால், அந்தப் படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணமே ஒவ்வொரு காட்சியையும் அதற்கு ஏற்ற சரியான லைட்டிங்கில் எடுத்ததுதான்.கதைப்படி கொளுத்தும் வெயிலில் எடுக்க வேண்டிய காட்சி என்றால், எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், உச்சி வெயிலில் எடுக்க வேண்டும் என நினைப்பவன் நான். என் முதல் படத்தை 32 நாட்களில் படம் பிடித்து முடித்துவிட்டோம். அதில் பல நாள் அதிகாலை நேரத்தில் படம்பிடிக்க வேண்டி இருந்தது.அதே போலத்தான், காதல் தேசம் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்கள் நடந்தாலும், 40 நாட்கள் அதிகாலையிலேயே ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டோம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டதற்குப் படத்தில் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதைப் பார்த்துப் பிடிச்சுப் போய் தான் நீங்கள் கூப்பிடுகிறீர்கள். இது இந்திப் பட உலகில் சாத்தியமில்லையே!இந்திப் பட ஹீரோக்கள் காலையில் பதினோரு மணிக்குத்தான் ஷூட்டிங்கிற்கு வருவார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று சற்று வெளிப்படையாகவே பேசினேன். . என் தயக்கத்துக்கான காரணத்தைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர் அங்கிருந்தே ஹீரோ பாபிதியோலுக்கு போன் செய்து உடனே அவரை ஓட்டலுக்கு வரவழைத்தார். பாபி யிடம் என்னை அறிமுகப்படுத்தினார். பி.சி. ஸ்ரீராம் பற்றி ரொம்ப உயர்வாகச் சொல்லி விட்டு, "பி.ஸ்ரீ. சீடரான உங்களுடன் பணியாற்ற நான் ஆர்வமாக இருக்கிறேன்! பொதுவாகவே, தென்னிந்திய டெக்னிஷியன்களுடன் பணியாற்ற எனக்கு விருப்பம் அதிகம்" என்றார்."இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை நான் படிச்சேன்! ரொம்ப சாஃப்டான ரொமான்டிக் லவ் ஸ்டோரி. ஆகவே, முப்பது, நாற்பது நாள் அதிகாலை நேரத்தில் ஷூட் பண்ணவேண்டி இருக்கும். உங்களால அட்ஜஸ்ட் செய்து கொண்டு சரியான நேரத்துக்கு வர முடியுமா?" என்று கேட்டேன்.சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு, அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது."கவலைப்படாதீங்க கே.வீ! அதிகாலை நாலு மணிக்கு ஷூட்டிங் என்றாலும் நான் கரெக்டாக நேரத்துக்கு செட்டில் இருப்பேன். உங்களுக்காக என் தூக்க ஷெட்யூலை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் போச்சு! தினம் நான் தூங்கப் போக நள்ளிரவு ஆகிவிடும். அதனால, அதிகாலையில என்னால எழுந்திருக்க முடியாது. உங்களுக்காக நான் ராத்திரி இன்னும் ரெண்டு, மூணு மணி நேரம் எக்ஸ்ட்ராவாக தூங்காமல் இருந்துவிட்டு, நேரே உங்க ஷூட்டிங்கிற்கு வந்திடறேன். காலை பதினோரு மணி பக்கமா பிரேக் குடுத்தீங்கன்னா, அப்போ தூங்கிக் கறேன்" என்றார்.பாபி தியோலில் வித்தியாசமான அட்ஜஸ்ட் மென்ட்டும், சின்சியாரிட்டியும் என் தயக்கத்தைப் போக்கியது. என் சம்மதத்தைத் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சென்னைக்குத் திரும்பினேன்.முதல் படப்பிடிப்பு ஷெட்யூல் கோவாவில் பத்து நாட்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. காலை ஆறு மணிக்கு கோவா பீச்சில் படப்பிடிப்பு. ஹீரோ பாபி தியோல், ஹீரோயின் ஐஸ்வர்யா ராய் உட்பட மொத்த யூனிட்டும் ஆஜர். ஆனால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி ஆறு மணிக்கு ஆரம்பிக்க முடியவில்லை. காரணம் படத்தின் டைரக்டர் வரவில்லை. . நாங்கள் அனைவரும் டைரக்டருக்காகக் காத்துக்கொண்டே இருந்தாலும், கோவா பீச் சூரியன் யாருக்கும் காத்துக் கொண்டிருக்காமல் விறுவிறுவென்று மேலே ஏறிக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக எட்டரை மணிக்கு டைரக்டர் வந்து சேர்ந்தார். உடம்பு சரியில்லாத தால் தாமதமாகிவிட்டது என்று காரணம் சொன்னார். காலை நேரப்படப்பிடிப்பைத் தவறவிட்டது பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல், ஒரு சில காட்சிகளை எடுத்து முடித்தார்.மறுநாள் எடுக்கவேண்டிய காட்சிகள் பற்றி என்னிடம் அன்று மாலை பேசுவார்; மறுநாள் தடங்கல் ஏதுமின்றி ஆறு மணிக்குப் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னைவிட சுமார் 25 வயது மூத்த அந்த இயக்குநரின் சினிமா பற்றிய சிந்தனையே, என்னுடையதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.அவரைப் பொறுத்தவரை, கேமராமேன் என்பவர் டைரக்டரது சௌகரியப்படி அவர் முடிவு செய்து வைத்திருக்கும் காட்சிகளை அவர் சொல்லும் லென்ஸ் மற்றும் கேமரா மூவ்மென்ட்டில் எடுத்துக் கொடுக்கும் கேமரா ஆபரேட்டர். அவ்வளவுதான். என்னால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.அதே சமயம் நான் அந்த இயக்குநரை குறை சொல்ல விரும்பவில்லை. அவரது பாணி அது; அவரும் வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறார். அவருக்கு சினிமா உலகில் ஒரு மரியாதை இருக்கிறது. தனிப் பட்ட முறையில் பார்த்தாலும், என்னிடம் மிக நட்புடன் அவர் பழகினார்.கோவாவில் தினம் ஒரு புது ஓட்டலுக்கு அழைத்துச் சென்று நிறைய உலக விஷயங்கள் பற்றிப் பேசினார். ஆனால், அவரது இயக்கத்தில், ஒரு கேமராமேனாகப் பணியாற்றுவது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை.தயாரிப்பாளரிடம், "உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும்" என்றேன். "கே.வீ! எனி பிராப்ளம்?" என்று அவர் கேட்டபோது, நான் ஏதோ, தங்கி இருக்கும் ஓட்டலில் சாப்பாடு சரியில்லை; கேமராவுக்கு ஏதோ ஸ்பெஷல் லென்ஸ் தேவை என்கிற ரீதியில் நான் பேசப் போகிறேன் என எதிர்பார்த்த வரிடம், "இந்தப் படத்தில் இனி தொடர்ந்து பணியாற்றுவது சாத்தியமில்லை! என்னை விட்டு விடுங்கள்" என்றதும், "என்ன சொல் றீங்க? என்ன பிராப்ளம் உங்களுக்கு?" என அதிர்ந்து போனார். . அவரிடம் பொறுமையாக இயக்குநருக்கும், எனக்கும் இடையிலான இடைவெளி பற்றி நாகரிகமான முறையில் எடுத்துச் சொல்லிவிட்டு அந்த ஷெட்யூலுடன் குட் பை சொல்லிவிட்டேன். சென்னை வந்த பிறகு என் கருத்தையும், காரணத்தையும் ஒரு கடிதமாக எழுதி டைரக்டருக்கு அனுப்பி வைத்தேன்.ஐஸ்வர்யா ராய் என்றவுடன் எனக்கு இன்னொரு சுவாரசியமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் நெருங்கிய நண்பர்கள், "நீ ரொம்ப பெரிய ஆளு! உன் திருமண ஆனிவர்சரிக்கு, உன் மனைவி வரலை; ஆனா ஐஸ்வர்யா ராய் வந்திருந்தாங்களே!" என்று கிண்டல் செய்வார்கள். காரணம் கோவாவில் 'அவுர் பியார் ஓகையா' முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடக்கும்போதுதான் என் முதல் திருமண ஆனிவர்சரி வந்தது.படப்பிடிப்புக்கு இடையில் என்னால் சென்னைக்கு வர முடியவில்லை; என் மனைவியாலும் கோவாவுக்கு வரமுடியவில்லை. விஷயமறிந்த இயக்குநர், ஷூட்டிங்கின்போதே ஒரு பெரிய கேக் வரவழைத்தார். டைரக்டர், பாபி தியோல், ஐஸ் அனைவரும் சூழ நான் கேக் வெட்டி என் திருமண ஆனிவர்சரியை என் மனைவி கூட இல்லாமல் கொண்டாடினேன்!அந்தப் படத்தில் அறிமுகமானாலும், ஐஸ் ஏற்கெனவே உலகறிந்த அழகி. பெரிய செலிபிரிடி. ஆனாலும், அதற்குரிய எந்தவிதமான பந்தாவும் இல்லாமல், படு சிம்பிளாக அவர் இருந்தது என்னை இன்னமும் கூட ஆச்சர்யப்படுத்தும் ஒரு விஷயம்.இதுவரை உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களிலேயே ஐஸ் தான் டாப் அழகி என்பது என் கருத்து. அவரது முகம் அழகின் இலக்கணம். நடு முகத்தில் செங்குத்தாக ஒரு கோடு போட்டுப் பிரித்தால் வலது பக்கமும், இடது பக்கமும் ஒன்றுக்கொன்று பிரதிபலிப்பாக – இரு பக்கமும் அப்படி ஒரு சிமெட்ரிக்கான முக லட்சணம் அவருக்கு. இப்படி முக அழகு அமைவது வெகு அபூர்வம். ஐஸ்வர்யா ராயைத் தவறான லென்ஸ் போட்டு, தவறான கோணத்தில் படம் எடுத்தாலும், அவர் அழகாகவே தோன்றுவார்.ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக கேமரா முன் நின்றபோது அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பெருமையாகப் படம்பிடித்த நான் எட்டாவது நாளே பெரிய கும்பிடு போட்டு விட்டு, 'ஆளைவிடுங்கள்' என்று ஓடி வந்து விட்டாலும், சில ஆண்டுகள் கழித்து, அவர் நடித்த ஜோஷ், காக்கி என இரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.(தொடரும்)