கார்த்திக்
கார்த்திக் 
வெள்ளித்திரை

"இந்த திரைப்படம் என்னை தூங்க விடவில்லை"! கார்த்தி பேட்டி!

கல்கி டெஸ்க்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத் தேவனாக பட்டையை கிளப்பி இருப்பார் கார்த்திக். அவர் தற்போது சர்தார் திரை படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தபடம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் என்னை தூங்க விடவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

சர்தார் திரைப்படத்தை டைரக்டர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இதில் நடிக்கிறார் . சர்தாரில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துகொண்டு இருக்கிறார் அதில் ஒன்றில் வயதான தோற்றம்.

சர்தார்

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளது .

சர்தார் படத்தின் டப்பிங் பணிகளும் தற்போது நடந்து வருகிறது . நடிகர் கார்த்தி நடிகராக ஆகி 15 வருடத்தை நிறைவு செய்துள்ளார் . இதற்காக சிறப்பு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் உங்களை மிகவும் பாதித்த திரைப்படம் எது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கார்த்தி ஹாலிவுட் படமான ” சிட்டிசன் கேன் ‘ தன்னை பாதித்த படம் அந்த படத்தை பார்த்து விட்டு ஒரு மாதம் தூங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் .

அறிவியலை ஊடகம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்!

வாழைப்பூ துவையல், வாழைப் பூ பச்சடி இப்படி செஞ்சு பாருங்க..!

பிறந்தநாள் ஸ்பெஷல்: எழுத்தாளர் சுஜாத்தாவின் ஆகச்சிறந்த 15 மேற்கோள்கள்!

What is a Brain Chip? How it is implanted?

குழந்தைகள் புத்தகப் பிரியர்களாக வளரச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT