kavithai Image credit - imagefinder.com
Motivation

கவிதை - டேய் தம்பி...

மரிய சாரா

டேய் தம்பி.....

விதியின்னு வந்துபுட்டா

வழியேதுமில்லையின்னு

சொல்லி வச்சான் பாரு ஊருக்குள்ள

மதி வெச்சி எட்டு வெச்சா

விதி ஒன்னு மாறுமுன்னு

சொல்லித் தாரேன் கேளுகண்ணு...

பொல்லாத உலகமடா - இது

போட்டி போட்டு உருளுதடா

கண்ணு ரெண்ட மூடிக்கிட்டா காலம் நின்னு போகுமுன்னு

நெனப்பால அளக்காத நீயும்

பொழப்பத்து திரியாத...

டேய் தம்பி, விதி ஒன்னு மாறுமுன்னு சொல்லித்தரேன் நீ கேளுகண்ணு...

கூட்டத்தோட ஓடாதே - கொள்க

ஒன்னு நெனப்புல இருந்தா

உன் கூரை மேல ஆகாசம் வரும்

என்ன சொன்னா என்னான்னு

நிக்காம நீட்டி நடந்தா

விதிகூட மண்ணாட்டம் தான்

டேய் தம்பி...

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT